news

News April 22, 2025

தவெகவினருக்கு தலைமை உத்தரவு

image

2026 தேர்தலை நோக்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், விஜய்யின் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக, கொள்கை குறித்து கட்சி நிர்வாகிகள் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தவெக கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 22, 2025

‘மக்கள் கலைஞர்’ மறைந்தார்

image

ரஷ்யாவின் புகழ்பெற்ற சிற்பி ஜுராப் செரெட்டெலி (91) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஜார்ஜியாவில் பிறந்த இவர் சோவியத் யூனியனின் (முன்னாள் கம்யூனிஸ்ட் ரஷ்யா) பிரபல கலைஞராக இருந்தார். ஓவியங்கள், சிற்பங்கள், கிராபிக்ஸ் என 500-க்கு மேற்பட்ட படைப்புகளை உருவாக்கியுள்ள இவர், மாஸ்கோவின் சிதைந்து போன ‘கிரைஸ்ட் தி சேவியர்’ முழுமையாக மீட்டுருவாக்கம் செய்தவராவார்.

News April 22, 2025

காவிரி தண்ணீர்.. கர்நாடக அரசுக்கு முக்கிய உத்தரவு

image

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடத்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மையின் 39-வது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

News April 22, 2025

தீவிரவாத தாக்குதல்… அமித் ஷாவிடம் ஆலோசித்த PM

image

சவுதி அரேபியா சென்றுள்ள PM மோடி <<16180559>>ஜம்மு காஷ்மீர் தாக்குதல்<<>> குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மக்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொல்லிய மோடி, அமித் ஷாவை நேரில் சென்று பார்வையிடவும் அறிவுறுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் பலர் காயமடைந்தனர்.

News April 22, 2025

கவலைக்கிடமான நிலையில் உதவி கேட்கும் தமிழ் நடிகர்

image

புற்று நோயால் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வரும் நடிகர் சூப்பர் குட் <<16171338>>சுப்பிரமணி <<>>மீண்டும் உதவி கேட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று அவர் கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை யாரும் உதவி செய்யவில்லை. இந்நிலையில், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி & வீட்டு வாடகைக்கு பணம் இல்லை. வசதி படைத்த நடிகர்கள் & அரசு தனக்கு உதவ வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News April 22, 2025

ஒரு வேலையும் செய்யாத நிறுவனத்திற்கு ₹1,000 கோடி!

image

தொடங்கி 2 மாதங்களே ஆன, எந்தவித செயல்பாடுகளும் இல்லாத URSA Clusters என்ற நிறுவனத்திற்கு, ஆந்திர அரசு ₹1,000 கோடி மதிப்புள்ள 59.6 ஏக்கர் நிலத்தை சொற்பமான தொகைக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ₹10 லட்சமாக இருக்கிறது. ஆனால், ₹5,728 கோடி முதலீடு செய்யும் என ஆந்திர அரசு எப்படி கூறுகிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

News April 22, 2025

சமூக வலைதளங்களுக்கு கும்பிடு போட்ட லோகேஷ்

image

விஜய், கமலை தொடர்ந்து ரஜினியுடன் கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூலி படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்ச நாள்களுக்கு விலகி இருக்க உள்ளதாக லோகேஷ் தெரிவித்துள்ளார். கூலி படத்தின் புரோமோஷனின் போது மீண்டும் வருவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 22, 2025

இனி குழல் ஊதி வழிவிட சொல்லலாம்

image

வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்களால் அதீத இரைச்சலும், ஒலி மாசும் ஏற்படுவது நமக்கு தெரியும். இதனை சீர் செய்யும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இனி, வாகனங்களில் இனிமையான இசை தரும் புல்லாங்குழல், தபேலா, ஹார்மோனியம் ஆகிய ஒலிகளை மட்டுமே ஹாரனாக பயன்படுத்தும் வகையில் திட்டம் கொண்டு வர இருப்பதாக நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்து, உங்களது கருத்து என்ன?

News April 22, 2025

ஓடும் பஸ்ஸில் உடலுறவு: இளஞ்சோடி அட்ராசிட்டி

image

நவிமும்பையில் ஓடும் அரசு பஸ்ஸில், ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஸ்ஸில் கூட்டம் இல்லாத நிலையில், பின்சீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இதை வீடியோ எடுத்து பதிவிட, விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, கண்டக்டர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தரங்கம் அவரவர் உரிமை, ஆனால், பொது இடத்தில் இப்படி செய்யலாமா?

News April 22, 2025

வர்ணனை செய்ய தடை? மௌனம் கலைத்த ஹர்ஷா

image

கொல்கத்தா மைதானம் குறித்து தெரிவித்த கருத்தால், அங்கு நடைபெறும் போட்டிகளில் வர்ணனை செய்ய தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு <<16168983>>ஹர்ஷா போக்லே<<>> மறுப்பு தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் நடக்கும் 2 போட்டிகளுக்கு மட்டுமே தான் வர்ணனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், குடும்ப சூழல் காரணமாக நேற்றைய போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!