India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவை இருநாடுகளும் இறுதி செய்துவிட்டதாக USA துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய நலன்களுக்காக பிரதமர் மோடியின் அரசாங்கம் கடுமையாக பேரம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே, அது இந்தியாவிற்கு சாதகமாக இருக்குமா என்பது தெரியவரும்.
சென்னையில் நடைபெற்ற, ‘தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழாவில் CM ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், நீதிக்கட்சிக்கு முடிவே கிடையாது, அக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி என்று பெருமைப்பட பேசினார். தற்போதைய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவான பி.டி.ராஜன், நீதிக்கட்சியின் கடைசி தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.
அமெரிக்காவில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து வருவதால் கவலையடைந்த அதிபர் டிரம்ப், குழந்தை பெறுவதை ஊக்குவிக்க புதிய திட்டங்களை பரிசீலித்து வருகிறாராம். அதில் ஒன்று தான் பேபி போனஸ். அதன்படி, முதல் குழந்தை பெறும்போது பேபி போனஸ் $5,000-மும் (சுமார் ₹4.25 லட்சம்), இரண்டாவது குழந்தை பெற்றால் வரிச்சலுகையும் அளிக்க திட்டமாம். இந்த தொகைக்காக அமெரிக்கர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்வார்களா என்ன?
J&K-வில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி வன்மையாக கண்டித்துள்ளார். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கையை மேலும் வலிமைபடுத்துவோம் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி & திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்காசி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது.
கனவுகளுடன் கைப்பிடித்த இளம்தம்பதி, இனிய தொடக்கமாக காஷ்மீரின் பஹல்காமுக்கு ஹனிமூன் சென்றனர். காலம் முழுவதும் சேர்ந்திருக்க இணைந்த அவர்களை இப்பயணம் பிரிக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தபோது நுழைந்த தீவிரவாதிகள், கணவனை சுட்டுக் கொன்றனர். கண்ணெதிரே கணவன் உயிர் போனதை பார்த்த மனைவி பேச்சற்று கிடக்கிறார்… இதயத்தை துளைக்கிறது இந்த போட்டோ.
J&k-ல் இன்று நடந்த தீவிரவாத தாக்குதல், முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பகுதிக்கு அருகே உள்ள பைஸ்ரீன் பள்ளத்தாக்கில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைச்சர் அமித்ஷா அப்பகுதிக்கு விரைந்துள்ளார்.
LSG-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் இரு அணிகளும் வலுவாக இருக்கின்றன. இதனால், இன்றைய போட்டியில் சிக்சர் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதலால் வேதனையடைந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடப்பட மாட்டார்கள் எனவும் அமித் ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக ஸ்ரீநகர் செல்லும் அமித் ஷா அங்கு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
Sorry, no posts matched your criteria.