India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பரிசாக GST வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படுமென PM மோடி அறிவித்திருந்தார். தற்போது, புதிய கார்களுக்கு 28% – 49% வரை வரி (₹10 லட்சத்துக்கு கார் வாங்கினால் ₹2.90 லட்சம் வரி) விதிக்கப்படுகிறது. ஆனால் GST வரி சீர்திருத்தங்களால் 18% ஆக குறைய வாய்ப்புள்ளது. இதனால், ₹1 லட்சம் வரை வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸுக்கான GST வரியும் குறைய வாய்ப்புள்ளது.
1. இந்தியாவின் முதல் செயற்கை கோளின் பெயர் என்ன?
2. போலியோ சொட்டு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
3. பெண்களை முதல்முதலில் காவல்துறையில் சேர்த்த நாடு எது?
4. டேபிள் டென்னிஸில் பயன்படுத்தப்படும் பந்தின் பெயர் என்ன?
5. இரட்டைப் புலவர்களின் பெயர் என்ன?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
திமுக எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது. காழ்ப்புணர்ச்சி அரசியலை திமுக கைவிட வேண்டுமென தமிழிசை தெரிவித்துள்ளார். அமைச்சர் TRB ராஜாவின் மகன் <<17517914>>அண்ணாமலையிடம் பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து<<>> கையில் வாங்கினார். இச்சம்பவம் விவாதமான நிலையில், இதுபற்றி பேசிய தமிழிசை, கல்வி நிறுவனங்களில் விருத்தினர்களுக்கு மரியாதை செய்ய வேண்டியது கடமை. அங்கு தனிப்பட்ட உணர்வுகளை வெளிகாட்டுவது சரி கிடையாது என்றார்.
பிரபல நடிகர் கோவிந்தா- சுனிதா தம்பதியர், விவாகரத்து <<17487419>>செய்வதாக <<>>வெளியான செய்திகளில் உண்மையில்லை என கோவிந்தாவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பஹ்லாஜ் நிஹலானி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருக்குள் விவாகரத்து பெற தூண்டும் எந்த ஒரு பிரச்னையையும் தான் பார்க்கவில்லை என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், விவாகரத்து குறித்து இன்னும் கோவிந்தாவும், சுனிதாவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
RCB அணியின் முன்னாள் லெஜண்டரி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் தன்னை RCB அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பணிக்கு அணுகினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். தனது இதயம் எப்போதும் RCB அணியோடு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்பேட்டியின் மூலம் வரும் IPL-ல் RCB அணியில் ABD ஏதாவதொரு பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமில்ல, பசியையும் பள்ளிகள் போக்க வேண்டுமென CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை துவக்கிய பின் பேசிய அவர், இத்திட்டத்தை தானே நேரடியாக கண்காணித்து வருவதாகவும், இந்த விரிவாக்கம் மூலம் 3.06 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இத்திட்டம் செலவு கிடையாது, சூப்பரான சமூக முதலீடு என பெருமிதத்துடன் கூறினார்.
நேற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹74,840-க்கும், கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹9,355-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ₹1 குறைந்து ₹130-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,30,000-க்கும் விற்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி நாளை(ஆக.27) முதல் அமலுக்கு வருவதாக USA அறிவித்துள்ளது. இது வந்தால் ஜவுளி ஏற்றுமதி, ரத்தினங்கள் ஏற்றுமதி, மருந்து பொருள்களை தயாரிப்பு, செல்போன் உற்பத்தி உள்ளிட்ட துறையை இது பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. வரி உயர்வு குறித்து USA உடன் பேச்சுவார்த்தை நடக்கவிருந்து, கடைசி நேரத்தில் அது ரத்தானது குறிப்பிடத்தக்கது.
➤அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது.
➤சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்துவும் அருகம்புல் சாறு உதவும்.
➤நரம்புத் தளர்ச்சி பிரச்னைகளுக்கும் அருகம்புல் சாறு குடிப்பது சிறப்பான பலன்களை அளிக்கும்
➤அருகம்புல் சாறு உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்வதால், சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
தமிழகத்தை போல பஞ்சாபிலும் காலை உணவு திட்டத்தை துவங்க பரிசீலிப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். தமிழகத்தை போல பஞ்சாப் அரசும் கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக கூறினார். மாணவர்களின் உடல்நிலையை முன்னேற்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுவது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர், உங்களுக்காகவே இத்திட்டத்தை CM ஸ்டாலின் செய்கிறார் என மாணவர்களை நோக்கி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.