news

News December 27, 2025

மக்கள் அதிகம் சென்ற கோயில்கள் PHOTOS

image

பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த இந்தியாவில், ஏராளமான மக்கள் ஆன்மீக சுற்றுலா மேற்கொள்கின்றனர். நாடு முழுக்க உள்ள புனித யாத்திரை தலங்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு அதிகளவிலான மக்கள் சென்ற கோயில்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எங்கெல்லாம் போயிருக்கீங்க? SHARE.

News December 27, 2025

EPS-உடன் CM விவாதிக்க முடியாது: கனிமொழி

image

CM ஸ்டாலினுக்கு இருக்கும் வேலைப்பளுவில் EPS-உடன் விவாதிக்க முடியாது என MP கனிமொழி கூறியுள்ளார். நெல்லையில் பேசிய அவர், ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் EPS, திமுகவில் இருக்கும் யாருடன் வேண்டுமானாலும் அவர் விவாதிக்கட்டும். அதையும் தாண்டி சில கேள்விகள் இருந்தால் அதற்கு CM பதிலளிப்பார் என்றார். முன்னதாக திமுக ஆட்சி பற்றி என்னோடு நேருக்கு நேர் விவாதம் நடத்த <<18685417>>தயாரா? என<<>> EPS சவால் விடுத்திருந்தார்.

News December 27, 2025

கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி.. NEW UPDATE

image

கோவையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி <<18678842>>கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி<<>> கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் மது போதையில் பிரதான் இருந்தபோது, அவரது மனைவி ஜிந்தி இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார். பிரதான் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தலைமறைவான ஜிந்தி தற்போது போலீசில் சிக்கியுள்ளார். அசாமைச் சேர்ந்த இந்த தம்பதி கோவையில் தங்கி பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

உடைகிறது ‘Event Management’ முதல்வரின் பிம்பம்: TVK

image

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை ஒடுக்கி, அட்டூழியத்தில் ஈடுபடுவதாக TVK அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டங்களை நசுக்கும் செயல், அரசின் ‘விளம்பர மாடல்’ முகத்திரையை கிழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ‘Event Management’ மூலம், தன்னை முன்னிறுத்தும் CM-ன் பிம்பம் உடைத்து எறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,680 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹800 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 1 சவரன் தங்கம் ₹1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹5,600 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது.

News December 27, 2025

தவெகவில் நடிகர் கவுண்டமணி இணைந்து விட்டாரா? CLARITY

image

நடிகர் கவுண்டமணி தவெகவில் இணைந்துவிட்டதாக SM-ல் செய்தி பரவி வருகிறது. அத்துடன், அவருக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்பது போன்ற போட்டோவும் வைரலாகி வருகிறது. ஆனால், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த போட்டோவை எடிட் செய்து, சிலர் இப்படி தவறான தகவலை பரப்பியது தெரியவந்துள்ளது. விஜய் தற்போது மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

கவிதைகளால் வரைந்த ஓவியமே ஸ்ரீதிவ்யா

image

இன்ஸ்டாவில் ஆக்டிவா உள்ள ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ள போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் பார்த்ததுபோல் அப்படியே இருக்கிறார். அதே பேசும் பார்வை, அதே மழலை சிரிப்பு, அதே கொஞ்சும் அழகு என கவிதைகளால் எழுதப்பட்ட ஓவியமாய் கண் முன்னே நிற்கிறார். இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

News December 27, 2025

தமிழகத்தில் பொங்கல் பரிசு.. அரசு அறிவித்தது

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அமைச்சர் காந்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, பொங்கல் தொகுப்பு தயாராக இருப்பதாகவும், ஜன.10-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகையாக ₹5,000 வழங்கப்படுமா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத காந்தி, அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பதிலளித்தார்.

News December 27, 2025

‘புஷ்பா 2’ நெரிசல் மரணம்.. அல்லு அர்ஜுன் பெயர் சேர்ப்பு

image

‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அல்லு அர்ஜூன் உள்பட 24 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். திரையரங்கு நிர்வாகத்தின் அலட்சியமே, கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு, அவர்களை முதல் குற்றவாளியாக போலீசார் சேர்ந்துள்ளனர்.

News December 27, 2025

ஆபரேஷன் ஆகாட் 3.0: டெல்லியில் 285 பேர் கைது

image

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபரேஷன் ஆகாட் 3.0-வை டெல்லி போலீஸ் நடத்தியது. இதில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 285 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆபரேஷன் ஆகாட் 1.0-வில் 70 பேரும், 2.0-வில் 500 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

error: Content is protected !!