India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் AUS கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டருக்கு இன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்றே விடுதலையும் செய்யப்பட்டார். குடும்ப வன்முறை, பெண்ணை பின் தொடர்ந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 2024 ஏப்ரலில் கஸ்டடியில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 375 நாள்கள் கஸ்டடி காலத்தில் அவர் ஒழுக்கமாகவும், விதிகளை பின்பற்றியதாகவும் கூறி அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
NEP என்றால் என்ன என்பதை மு.க.ஸ்டாலின் சரியாகப் படிக்க வேண்டும் என ஃபட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். NEP ஒருபோதும் மொழித் தேர்வை வலியுறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை. 3 மொழிகளில் ஆங்கிலத்தை தவிர வேறு 2 இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மகராஷ்டிராவில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்ததை சுட்டிக்காட்டி ஃபட்னாவிஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
DC-க்கு எதிரான IPL போட்டியில், LSG அணி 159 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்ற DC அணியின் கேப்டன் அக்சர் பட்டேல், LSG-ஐ பேட்டிங் செய்யப் பணித்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய LSG அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் (52), மார்ஷ் (45) அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர். இருப்பினும், பின்னர் களமிறங்கியவர்கள் நிதானமாக விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையை ஆந்திராவில் இருந்து ராஜ்யசபா MP ஆக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக, கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டால் அண்ணாமலை MP-யாக நாடாளுமன்றம் செல்வார்.
‘ரெட்ரோ’ படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து அவர் கதை சொன்னதாகவும், அது SK-வுக்கு பிடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் SK கைவசம் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால், கால்ஷீட் ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறதாம்.
ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசப் ஈஷாக்கின் மனைவி புவான் நூர் ஆயிஷா முகமது சலிம் (91), வயது மூப்பு காரணமாக காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1959 முதல் 1970 வரை சிங்கப்பூரின் அதிபராக இருந்தவர் யூசப். சிங்கப்பூரை கட்டியமைக்க அஸ்திவாரமிட்ட யூசப்புக்கு துணையாக இருந்ததுடன், பல்வேறு சமூகப் பணிகளிலும் புவான் ஈடுபட்டார். அவரை கெளரவிக்கும் விதமாக அரசு மரியாதையும் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.