news

News April 23, 2025

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம்

image

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. J&K தீவிரவாதிகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோர் 011-24193300, 9289516712 எண்களுக்கு எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூலை சம்பவ இடத்திற்குச் செல்லவும் CM உத்தரவிட்டுள்ளார்.

News April 22, 2025

ஓடும் பஸ்ஸில் இளம் ஜோடி அட்ராசிட்டி

image

நவிமும்பையில் ஓடும் அரசு பஸ்ஸில், ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஸ்ஸில் கூட்டம் இல்லாத நிலையில், பின்சீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளது. டிராபிக்கில் பஸ் நின்றபோது, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் இதை வீடியோ எடுத்து பதிவிட, விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, கண்டக்டர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தரங்கம் அவரவர் உரிமை, ஆனால், பொது இடத்தில் இப்படி செய்யலாமா?

News April 22, 2025

வானில் ஒளிரப் போகும் வெள்ளி

image

வீனஸ் கிரகம் (வெள்ளி), வரும் 24-ம் தேதி வானில் மிகவும் பிரகாசமாக காணப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும் அது, -4.4 மேக்னிட்யூட் அளவு வெளிச்சத்துடன் காணப்படும். வியாழக்கிழமை சூரிய உதயத்துக்கு முன் நிலவுக்கு அருகே வெள்ளிக்கிரகத்தை கண்டு களிக்கலாம். மீண்டும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் வெள்ளியை இதுபோன்று பிரகாசமாக பார்க்க முடியும்.

News April 22, 2025

ATM-ல் அடிக்கடி பணம் எடுப்பவரா? இத கவனியுங்க

image

வரும் மே 1-ம் தேதி முதல், ATM-ல் இருந்து பணம் எடுப்பதில் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி ATM இல்லாமல், வேறு வங்கியின் ATMல் பணம் எடுத்தால், மாதத்தின் முதல் 3 முறை மட்டும் இலவசம். 4-வது முறையில் இருந்து பணம் எடுப்பதற்கு ₹19 பிடித்தம் செய்யப்படும். அதேபோல, வங்கி கணக்கு வைத்திருக்கும் ATM-லேயே 5 முறை மட்டுமே இலவசம். 6-வது முறையில் இருந்து ₹23 பிடிக்கப்படும்.

News April 22, 2025

SBI ஏடிஎம்களில் இவர்களுக்கு கட்டணமில்லை.. இலவசம்

image

SBI வங்கி ஏடிஎம் கட்டண விதிகளை பிப்.1 முதல் மாற்றியமைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த விதியின்படி, SBI ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் 5 முறை SBI ஏடிஎம்களிலும், 10 முறை பிற ஏடிஎம்களிலும் இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். அதேநேரத்தில் சேமிப்பு கணக்கில் சராசரியாக ரூ.1 லட்சம் வைத்திருப்போருக்கு SBI மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஏடிஎம் பரிவர்த்தனை அன்லிமிடெட் இலவசமாகும். கட்டணம் வசூலிக்கப்படாது. SHARE IT

News April 22, 2025

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பொறுப்பேற்பு

image

ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தற்போதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

News April 22, 2025

இந்தியர்கள் கிரிக்கெட்டை பேஸ்பால் போல ஆடுகின்றனர்

image

இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களின் அணுகுமுறை குறித்து CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வேதனை தெரிவித்துள்ளார். கள சூழலை கவனிக்காமல், முதல் பந்திலேயே அவர்கள் அடித்து விளையாடுகிறார்கள் என்றும் அது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். கிரிக்கெட்டை பேஸ்பால் போல விளையாடக்கூடாது என்றும் அவர் கடுமையாக பேசியுள்ளார். இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News April 22, 2025

அமைச்சர் PTR-க்கு அறிவுரை வழங்கிய முதல்வர்

image

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அமைச்சர் PTR அறிவார்ந்த வாதங்களை வைக்கக் கூடியவர் என்றும் அவரது சொல்லாற்றல் அவருக்கு பலமாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாகி விடக்கூடாது என்றும் முதல்வர் பேசினார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்று அவருக்கு தெரியும் என்றும் முதல்வர் அழுத்தமாக குறிப்பிட்டார்.

News April 22, 2025

முன்னாள் MP கொடூரமாக கொலை

image

தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவரும், EX MPயுமான வீரய்யா சௌத்ரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓங்கோலில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, ​​முகமூடி அணிந்த மூன்று பேர் உள்ளே நுழைந்து, கத்தியால் சராமரியாக குத்திக் கொலை செய்துள்ளனர். கொலை செய்தவர்கள் பீகாரை சேர்ந்த கும்பல் என கூறப்படுகிறது. ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

News April 22, 2025

19 ஆண்டுகளாக தூங்கும் சவுதி இளவரசர்!

image

சவுதி இளவரசர் அல்-வலீத் பின் காலித், 36 வயதை எட்டியுள்ளார். 19 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால், அவர் ‘தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்படுகிறார். 2005-ல் நடந்த விபத்தில் மூளையில் காயம் ஏற்படவே, சுயநினைவை இழந்தார். வெண்டிலேட்டர் துணையுடன், டாக்டர்களின் முழுநேர கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறார். 2019-ல், அவரது கை விரல்களும், தலையும் லேசாக அசைந்தன. அதையடுத்து எந்த முன்னேற்றமும் இல்லை.

error: Content is protected !!