India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், விருதுகள் கிடைப்பதை விட ரசிகர்களின் அன்பை பெறுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். திரையரங்கில் தனது கதாபாத்திரங்களை கண்டு அந்த எமோஷனுடன் ரசிகர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையே உண்மையான வெற்றியாக பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 10 தடகள வீரர்களுக்கு தலா ₹70,000 வழங்குவேன் என ஷிவம் துபே உறுதியளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் வருடாந்தர விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், இந்த சிறிய உதவித்தொகை, தடகள வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் எனவும், தேசத்திற்கு பெருமை சேர்ப்பவர்களுக்கு கூடுதல் உந்துதலை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
PM மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளார். இன்று (ஏப். 23) அதிகாலை 5 மணிக்கு மோடி டெல்லிக்கு வரவுள்ளார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (ஏப்ரல் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தங்கள் மாநிலத்திற்கு விருந்தினர்களாக வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அருவருப்பானது என J&K CM உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் மனிதர்கள் அல்ல, விலங்குகள் எனவும், அவர்களை கண்டிக்க வார்த்தைகள் மட்டும் போதாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், சமீப காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது மிகவும் கொடியது எனவும் தெரிவித்துள்ளார்.
J&K-வில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என ராகுல் காந்தி கண்டித்துள்ளார். அங்கு நிலைமை சீராக இருப்பதாக வெற்று கூச்சலிடாமல், மத்திய அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், வருங்காலத்தில் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சாமனியர்களின் உயிர் இப்படி பறிபோவதை தடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டிருக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் விஜய் பதிவு செய்துள்ளார்.
➤மேஷம் – வரவு ➤ரிஷபம் – நோய் ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – ஈகை ➤சிம்மம் – செலவு ➤கன்னி – சிந்தனை ➤துலாம் – கோபம் ➤விருச்சிகம் – குழப்பம் ➤தனுசு – அசதி ➤மகரம் – வெற்றி ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – நன்மை
Sorry, no posts matched your criteria.