India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதில், TN-ல் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, மாநகராட்சிகளில் மட்டும் 91 கருத்தடை மையங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

பிஹார் தேர்தலுக்காக பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கொலை உள்பட அதிக குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள வேட்பாளராக RJD வேட்பாளர் ரித்லால் ராய் (30 வழக்குகள்) உள்ளார். அவருக்கு அடுத்ததாக, JD (United) வேட்பாளர் ஆனந்த் சிங்கிற்கு எதிராக 28 கிரிமினல் வழக்குகளும், RJD வேட்பாளர் கரன்வீர் சிங்கிற்கு எதிராக 15 கிரிமினல் வழக்குகளும் உள்ளது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.

வங்கிகளில் லோன் வாங்கியவர்களுக்கு நவம்பரில் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அக்டோபரில் இந்தியன் வங்கி, IDBI வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI இந்த மாதம் முதல் குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பயனளிக்கும். SHARE IT.

T20 போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாபர் அசாம் தற்போது T20-யில் 4,234 ரன்கள் அடித்துள்ளார். ரோஹித் 4,231 ரன்களுடன் 2-வது இடத்திலும், விராட் கோலி 4,188 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். 2024 T20 உலகக்கோப்பை தொடருடன் ரோஹித் & கோலி ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவ.1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஜூலை 18-ஐ தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடும். ஏன் தெரியுமா? என்ன தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், 1967, ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டும் வரை அது சென்னை மாகாணமாகவே இருந்தது. எனவே தான், அண்ணா தமிழ்நாடு என பெயர்சூட்டிய ஜூலை 18, தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டு, அதுவே தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏற்ற இறக்கத்தை கண்டுவரும் தங்கம் விலை இந்த வாரம் மக்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,520 குறைந்திருப்பது சற்று நிம்மதியான விஷயம். அதாவது, கடந்த வார சனிக்கிழமையன்று ₹92,000-க்கு விற்பனையான 1 சவரன் தங்கத்தின் விலை, தற்போது ₹90,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட் விடுமுறை என்பதால் நாளை தங்கம் விலையில் மாற்றம் இருக்காது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் காசிபக்கா வெங்கடேஸ்வரர் கோயில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதம் கரூரில் பெரும் துயரம் ஏற்பட்டது. இதேபோன்று 2025-ம் ஆண்டில் இந்தியாவில், இதுவரை பல்வேறு பொது இடங்களில் கூட்ட நெரிசலால் ஏராளமான துயரமான சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. அவை என்ன நிகழ்வுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க.

அக்டோபர் மாத GST வசூல் ₹1.95 லட்சம் கோடியாக உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத வசூலான ₹1.89 லட்சத்தை விட 4.6% அதிகமாகும். அதேபோல், 2024 அக்டோபர் வசூலை விட 9% அதிகமாகும். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக GST வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வருவதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது. GST 2.0 காரணமாக எலெக்ட்ரிக் சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் இந்த முறையும் CM பதவியில் அமர DK சிவகுமாருக்கு வாய்ப்பில்லை. காங்., தலைமையே விரும்பினாலும் அது நடக்காது என்கின்றனர். சித்தராமையாவின் AHINDA(சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்) ஃபார்முலாவே இதற்கு காரணம். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த DKS–ஐ CM ஆக்கினால், AHINDA வாக்குவங்கி கைவிட்டு போய்விடுமென காங்., அஞ்சுகிறது. <<18168420>>அடுத்த செய்தியில் விவரம் அறிக.<<>>

பிராமணர், ஒக்கலிகர், லிங்காயத் ஆதிக்கம் செலுத்திய கர்நாடகாவில், இதர OBC, Minority, Dalit நலனுக்காக அம்மாநில முதல் ஓபிசி CM தேவராஜ் அர்ஸ் உருவாக்கிய மாடலே AHINDA. தேவகவுடாவின் JD(S), ஒக்கலிகர் கட்சியாக மாறிப்போனதால் சித்தராமையாவுடன் AHINDA சமூகத்தினரும், காங்., நோக்கி நகர்ந்தனர். ஒக்கலிகர் வாக்குகளை JD(S), BJP பங்குபோடுவதால், DKS-ஐ CM ஆக்கினால் லாபத்தைவிட நஷ்டம் அதிகம் என காங்., தயங்குகிறது.
Sorry, no posts matched your criteria.