India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு – காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
▶ தோற்பது அல்ல தோல்வி. முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி. ▶ வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடந்து செல்லுங்கள். தொலைதூரம் நடக்க வேண்டும் என்றால் குழுவாக மட்டுமே பயணிக்க முடியும். ▶ தலைவர் என்பவர் உச்சியில் அமர்பவர் மட்டுமல்ல, மற்றவர்களைத் தங்களால் இயன்றதைச் செய்வதற்கு ஊக்குவிப்பவர். ▶ ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.
‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ எனப்படும் லண்டனில் வெளியாகும் விஸ்டன் புத்தகம் ஆண்டுதோறும் 5 வீரர்களை தேர்வு செய்து கௌரவிப்பது வழக்கம். இந்தாண்டு அந்த பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பும்ரா டெஸ்டில் கடந்த ஆண்டு 71 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மந்தனா கடந்த ஒரே ஆண்டில் 1,659 ரன்கள் குவித்துள்ளார்.
பிரபல தொகுப்பாளரான ரம்யா, அவ்வப்போது திரைப்படங்களிலும் தலையை காட்டி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாவில் கோபத்துடன் பதிவிட்டுள்ள அவர், ஏஐ மூலம் தனது வீடியோவை 3-வது முறையாக குரல் மாற்றம் செய்து தவறாக பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் விஜே ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாரிசு என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறது என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பி.டி.ராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ‘பி.டி.ராஜனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, தானும் வாரிசுதான் என்றார். மேலும், இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள் எனத் தெரிவித்த அவர், சிலருக்கு எரியட்டும் என்பதற்காகவே வாரிசு என்பதை திரும்ப திரும்ப சொல்வதாகக் குறிப்பிட்டார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 315 ▶குறள்: அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.▶பொருள்: பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) நேற்று காலமானார். அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைவுக்குப் பிறகு முதல்முறையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த போட்டோவை பதிவிட்டு, அமைதியை விரும்பி மாமனிதரே, அமைதியாக உறங்குங்கள் என்று பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற டேவிட் வார்னரின் சாதனை டெல்லி வீரர் கே.எல். ராகுல் தவிடுபொடியாக்கியுள்ளார். 130 இன்னிங்சில் விளையாடிய அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, டேவிட் வார்னர் (135), விராட் கோலி (157), ஏபி டிவில்லியர்ஸ் (161), ஷிகர் தவான் (168) ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த சாதனையை யார் முறியடிப்பார் என நினைக்கிறீர்கள்?
கேரளாவில் மசால் தோசை சாப்பிட்ட 3 வயது சிறுமி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ஹென்றி என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 19-ம் தேதி, அங்கமாலியில் உள்ள உணவகத்தில் மசால் தோசை சாப்பிட்டுள்ளார். வீடு திரும்பிய உடன் உடல்நலக் குறைவு ஏற்படவே, அனைவரும் ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒலிவியா (3) உயிரிழந்தார். இதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
▶ஏப்ரல் 23- சித்திரை- 10 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 5:00 PM – 6:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை
Sorry, no posts matched your criteria.