India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,134ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 81,072ஆகவும் விற்கப்பட்டது. இதனுடன் செய்கூலி, சேதாரம் சேர்த்து, மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் சேர்த்து ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தக் லைஃப் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் திருமணம் குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்துள்ளார். அதில், ‘திருமணம் பிரச்னை இல்லை, மக்கள்தான் பிரச்னை. விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை குறைந்துவிட்டது. நீ இல்லையென்றால் வேறொருவர் என்ற மனநிலை அதிகம் இருப்பதாக நினைக்கின்றேன். அப்படி இருக்க கூடாது. சரியான நேரம் வரும்போது திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் சோதனை வழக்கில் ஐகோர்ட் இன்று காலை தீர்ப்பளிக்க உள்ளது. ED சோதனையில் ₹1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி TN அரசு, டாஸ்மாக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர். விசாரணையை தொடர ED-க்கு அனுமதி அளிக்கப்பட்டால் டாஸ்மாக் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிக்கல் எழும்.
இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. தாக்குதலில் உயிரிழந்த கணவனின் உடல் அருகே மனைவி சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் நெஞ்சை உலுக்குகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா பதிலடி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வருகின்றன. எக்ஸ் தளத்தில் #WeWantRevenge என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் SRH மற்றும் MI அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. MI ஹாட்ரிக் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள SRH, கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்ஸ் இருப்பதால் போட்டியில் சிக்சர் மழை பொழிய வாய்ப்புள்ளது. ஹைதராபாத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்கப் போவது யார்?
வீட்டின் மாடியில் அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல் காயப்போடுவது வழக்கொழிந்துவிட்டது. அதற்கு மாற்றாக ரெடிமேட் அப்பளங்களே இப்போது வீட்டில் அதிகம் பொரிக்கப்படுகின்றன. இதனை அதிகம் உணவில் சேர்ப்பது ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். காரணம் இதில் இருக்கும் சோடியம் பென்சோயேட். இது உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் வருவதற்கு வழிவகுக்குமாம். சோ, ரெடிமேட் அப்பளங்களை அளவாக பயன்படுத்துங்கள்.
பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொலைபேசியில் PM மோடியை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்த முழு ஆதரவு அளிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பாலியல் அத்துமீறல் குறித்து மலையாள நடிகை மாலா பார்வதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குவதாகவும், அத்துமீறும் தொனியில் பேசுவர்களை கடந்து செல்லுங்கள் என்றும் அவர் கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ரஞ்சனி, இதுபோன்ற விஷயங்களை எப்படி ஆதரிக்கிறீர்கள் என வினவினார். இந்த கருத்து உங்கள் குணத்தை காட்டுகிறது என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
▶ உலக புத்தக நாள். ▶ 1639 – புனித ஜார்ஜ் கோட்டை ( தலைமைச் செயலகம்) சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது. ▶ 1661 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் சார்லஸ் முடிசூடினார். ▶ 1938 – திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள். ▶ 1977 – அமெரிக்க ரெஸ்லிங் வீரர் ஜான் சினா பிறந்த நாள். ▶ 1992 – இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே நினைவு நாள். 2005 – யூடியூப்பில் முதல் வீடியோ பதிவிடப்பட்டது.
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கர தாக்குதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பேட்டியளித்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய PM மோடியுடன் அதிபர் ட்ரம்ப் பேசவிருப்பதாக தெரிவித்தார். நட்பு நாடான இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள்தான் உலக அமைதிக்காக போராட வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.