news

News November 1, 2025

மகளின் நினைவாக இளையராஜா புதிய அறிவிப்பு

image

மறைந்த தனது மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ என்ற பெண்களுக்கான ஆர்கெஸ்ட்ராவை இளையராஜா தொடங்கியுள்ளார். இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் பெண்கள், இதில் பதிவு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக, 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஆர்கெஸ்ட்ரா தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். கேன்சர் காரணமாக பவதாரிணி கடந்தாண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2025

இந்த மாதம் 7 நாள்கள் விடுமுறை… ரெடியா இருங்க!

image

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை மட்டுமே. 5 ஞாயிற்றுக் கிழமைகளிலும் (நவ.2, 9, 16, 23, 30) வங்கிகள் இயங்காது. அதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளிலும் (நவ.8, 22) விடுமுறையாகும். மற்ற 23 நாள்களிலும் தமிழகத்தில் வங்கிகள் முழுநேரமும் செயல்படும். இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT.

News November 1, 2025

பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறியது இவர்தான்

image

பிக்பாஸ் 9-வது சீசன் தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வார எலிமினேட் பட்டியலில் கானா வினோத், கம்ருதீன், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி, கலையரசன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகள் பெற்று கலையரசன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 1, 2025

1.12 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள்

image

AI-ன் வரவால், நடப்பாண்டில் இதுவரை சர்வதேச அளவில் 1.12 லட்சம் ஊழியர்களை 218 நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக UPS 48,000, INTEL 24,000, TCS 20,000, அமேசான் 14,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. ஐடி, கன்சல்டிங், உற்பத்தி என பல துறை ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிலைத்த தன்மை இல்லாததும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

News November 1, 2025

நீடா அம்பானியின் விலையுயர்ந்த பொருட்கள்

image

ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, தனது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலால் பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார். கல்வி, கலை, விளையாட்டு துறைகளில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். இன்று அவரின் பிறந்தநாள். இவர் பயன்படுத்தும் விலையுயர்ந்த சொகுசு பொருட்களின் படங்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News November 1, 2025

நகை கடன்… HAPPY NEWS

image

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை, கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை வங்கிகளில் அடகு வைக்கும் முன், பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிய <<17712760>>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.

News November 1, 2025

50 விநாடி விளம்பரத்திற்கு ₹5 கோடி சம்பளம்

image

50 விநாடிகள் ஓடும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்க, நயன்தாரா ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க ₹10 – ₹15 கோடி சம்பளம் பெறும் நிலையில், விளம்பரத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்கள் உள்ளன.

News November 1, 2025

வங்கி கணக்கில் ₹2000… உடனே இதை செக் பண்ணுங்க!

image

PM கிசான் உதவித் திட்டத்தின் 21-வது தவணை நவம்பர் முதல் வாரத்தில் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தொகையை பெற 3 விஷயங்களை கட்டாயம் செய்திருக்க வேண்டுமாம்: 1) <<17118116>>e-KYC<<>> செய்வது கட்டாயம் 2)நில சரிபார்ப்பு நடைமுறை முழுமையடைய வேண்டும் 3)‘<<18007483>>தனித்துவ விவசாய அடையாள அட்டை<<>>’ பெற்றிருக்க வேண்டும். இவற்றை செய்து முடித்துவிட்டீர்களா? SHARE IT

News November 1, 2025

ஆந்திரா கோயில் கூட்டநெரிசல்: மாறிமாறி குற்றச்சாட்டு

image

ஆந்திரா <<18168110>>கோயில் கூட்டநெரிசலுக்கு<<>> காரணமான ஏகாதசி நிகழ்ச்சி குறித்து, கோயில் நிர்வாகம் போலீஸ், உள்ளூர் அதிகாரிகளிடம் கூறவில்லை என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அம்மாநில EX CM ஜெகன் மோகன் சாடியுள்ளார்.

News November 1, 2025

இந்தியாவின் பாகுபலி கவுன்டவுன் தொடங்கியது

image

இஸ்ரோவின் பாகுபலி என வர்ணிக்கப்படும் CMS-03 செயற்கைக்கோளுக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. நாளை மாலை 5:26-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. கடற்படை, ராணுவ பணிகளுக்காக இந்த இது பயன்படுத்தப்பட உள்ளது. 4,410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ₹1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறநாடுகளின் துணை இல்லாமல், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுவது இதுவே முதல்முறை.

error: Content is protected !!