news

News April 23, 2025

காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை

image

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு எண் இல்லாத பைக் தாக்குதல் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

News April 23, 2025

மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடக்குமா?

image

கடந்த 2016 உரி ராணுவதளத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக எல்லை தாண்டி சென்று இந்தியா நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதேபோல் பஹல்காம் தாக்குதலுக்கு மீண்டும் எல்லை தாண்டி இந்தியா செல்லுமா?

News April 23, 2025

முட்டை விலை குறைந்தது

image

நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நிர்ணயம் செய்யும் விலையின் அடிப்படையிலேயே அன்றாடம் தமிழகம் முழுவதும் முட்டை விலை முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல்லில் 1 முட்டையின் விலை ரூ.4.05ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் சில்லரை கடைகளில் 1 முட்டை ரூ.4.40-ரூ.4.50 வரை விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News April 23, 2025

சூர்யாவின் 46-வது படம்… வேகமெடுக்கும் பணிகள்

image

சூரியாவின் ‘ரெட்ரோ’ படம் மே 1-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் அவரின் அடுத்தடுத்த படங்களின் பணிகள் வேகமெடுத்துள்ளன. சூர்யா தனது 46-வது படத்தில் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரியின் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவுள்ளது. இதனிடையே படத்தின் இசை பணிக்காக அட்லுரி – ஜி.வி.பிரகாஷ் இருவரும் துபாய் சென்றிருக்கிறார்கள்.

News April 23, 2025

பழிதீர்க்குமா SRH? இன்று MI உடன் பலப்பரீட்சை

image

IPL 2025-ன் 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இரு அணியினரும் பேட்டிங்கில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இதுவரை 2 வெற்றிகளுடன் SRH 9-வது இடத்திலும், 4 வெற்றிகளுடன் MI 6-வது இடத்திலும் உள்ளன. முன்னதாக MI-யுடனான போட்டியில் தோல்வியடைந்த SRH இதில் வெற்றி பெற முனைப்பு காட்டும்.

News April 23, 2025

அஜித் தோவலுடன் பிரதமர் அவசர ஆலோசனை

image

காஷ்மீரில் கொடூர செயலில் ஈடுபட்டவர்களை விட்டு வைக்க மாட்டோம் என சபதம் செய்த பிரதமர் மோடி, டெல்லி வந்திறங்கியதும் விமான நிலையத்திலேயே ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை, குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கேட்டறிந்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

News April 23, 2025

அதிமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்

image

நாதக வட சென்னை மாவட்ட தலைவர் உள்பட நாதக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால், பலர் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் நாதக வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு.பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

News April 23, 2025

₹27கோடி சம்பளம்… அடிமேல் அடிவாங்கும் ரிஷப் பண்ட்

image

IPL-லில் தொடர்ந்து சொதப்பி வரும் LSG அணி கேப்டன் ரிஷப் பண்டை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏலத்தில் ₹27 கோடிக்கு எடுக்கப்பட்ட பண்ட் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அந்த போட்டியிலும் லக்னோ தோல்வியை சந்தித்தது. நேற்றைய DC-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 7-வதாக களமிறங்கிய அவர் டக் அவுட்டாகினார். தோனியிடம் உள்ள போராட்ட குணம் கூட அவரிடம் இல்லை என ரசிகர்கள் சாடியுள்ளனர்.

News April 23, 2025

துரைமுருகன் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

image

1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட அவரது குடும்பத்தினரை விடுவித்து 2007-ம் ஆண்டு வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

News April 23, 2025

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: பலி 28ஆக உயர்வு

image

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் கடற்படை அதிகாரி ஒருவரும், உளவுத்துறை அதிகாரி ஒருவரும் பலியாகினர். 3 தமிழர்கள் உள்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றுள்ளது.

error: Content is protected !!