India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

Gpay, phonepe உள்ளிட்ட UPI பயனர்களுக்கு உதவ, ‘UPI Help’ என்ற ஆன்லைன் அசிஸ்டென்ட் அம்சத்தை NPCI அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் புகார்களுக்கு உடனடி பதில், பரிவர்த்தனையை டிராக் செய்வது, ஆட்டோ பேமெண்ட்டை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றை எளிதாக செய்யலாம். இதனால் பணப் பரிவர்த்தனையை வேகமாகவும், பாதுகாப்பாகவும் செய்யலாம். இந்த வசதி DigiSaathi, அனைத்து UPI ஆப்களிலும் கிடைக்கும்.

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும் செவ்வாய்கிழமை(நவ.4) கடைசி நாளாகும்.

இந்தியும், ஆங்கிலமும் குழந்தைகளின் திறமையை பலவீனப்படுத்துவதாக கர்நாடக CM சித்தராமையா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் குழந்தைகள் தாய்மொழியில் சிந்தித்து, செயலாற்றும் நிலையில், இந்தியாவில் அது தலைகீழாக நடப்பதாகவும், பல்வேறு வகைகளில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தாய்மொழியை பயிற்று மொழியாக கொண்டு வர சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மறைந்த தனது மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ என்ற பெண்களுக்கான ஆர்கெஸ்ட்ராவை இளையராஜா தொடங்கியுள்ளார். இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் பெண்கள், இதில் பதிவு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக, 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஆர்கெஸ்ட்ரா தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். கேன்சர் காரணமாக பவதாரிணி கடந்தாண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை மட்டுமே. 5 ஞாயிற்றுக் கிழமைகளிலும் (நவ.2, 9, 16, 23, 30) வங்கிகள் இயங்காது. அதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளிலும் (நவ.8, 22) விடுமுறையாகும். மற்ற 23 நாள்களிலும் தமிழகத்தில் வங்கிகள் முழுநேரமும் செயல்படும். இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT.

பிக்பாஸ் 9-வது சீசன் தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வார எலிமினேட் பட்டியலில் கானா வினோத், கம்ருதீன், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி, கலையரசன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகள் பெற்று கலையரசன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

AI-ன் வரவால், நடப்பாண்டில் இதுவரை சர்வதேச அளவில் 1.12 லட்சம் ஊழியர்களை 218 நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக UPS 48,000, INTEL 24,000, TCS 20,000, அமேசான் 14,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. ஐடி, கன்சல்டிங், உற்பத்தி என பல துறை ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிலைத்த தன்மை இல்லாததும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, தனது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலால் பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார். கல்வி, கலை, விளையாட்டு துறைகளில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். இன்று அவரின் பிறந்தநாள். இவர் பயன்படுத்தும் விலையுயர்ந்த சொகுசு பொருட்களின் படங்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை, கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை வங்கிகளில் அடகு வைக்கும் முன், பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிய <<17712760>>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.

50 விநாடிகள் ஓடும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்க, நயன்தாரா ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க ₹10 – ₹15 கோடி சம்பளம் பெறும் நிலையில், விளம்பரத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்கள் உள்ளன.
Sorry, no posts matched your criteria.