India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் ஓடும் ரயிலில் சடலத்துடன் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் ரயிலில் இறந்த ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. ரயிலில் ஏறிய நபர் ஒருவர் திடீரென அந்த சடலத்துடன் உடலுறவில் ஈடுபட்டார். பின்னர் சிறிது நேரத்தில் இறங்கிச் சென்று விட்டார். இந்த காட்சி, ரயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சியை வைத்து அந்நபரை பாேலீஸ் தேடுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பகல்ஹாமில் 28 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் பலியான 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய இபிஎஸ், தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா வழியே இந்தியாவுக்குள் இன்று தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம் அங்கு நடக்கவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடங்களை NIA வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவதர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து இந்த வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வடைந்துள்ளது. ஒரு யூனிட் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்டவை ரூ.1,000 உயர்த்தப்படும் என்று அதன் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். எனினும், ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.4,900-ல் இருந்து ரூ.6,450ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.3,900ல் இருந்து ரூ.5,523ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பி.சாண்ட் விலை ரூ.5,800ல் இருந்து ரூ.7,552ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு பேட்ஸ்மேனாக அசத்துவது மட்டுமின்றி கேப்டனாகவும் களத்தில் மிகச் சிறப்பாக ஷுப்மன் கில் செயல்படுவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். முன்பு வளர்ந்து வரும் வீரராக இருந்த அவர் தற்போது மிகச் சிறப்பான கேப்டனாக மாறியுள்ளதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அஷிஃப் தெரிவித்துள்ளார். நாங்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு கொடுப்பதில்லை எனவும் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூரில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுபவர்களின் எதிர்வினைத் தாக்குதல் எனவும் கூறியுள்ளார்.
சவுதி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு PM டெல்லி திரும்பிய நிலையில், பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடுகிறது. PM இல்லத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பயங்கரவாதத்தை அடியோடு ஒடுக்குவது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் CM ஸ்டாலின் இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது அவர், இந்த பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது, பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார். பின்னர் சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக்காேரி, TN அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மனு தாக்கல் செய்தன. இதன்மீது HC உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அமலாக்கத் துறை தனது சோதனையை தொடரலாம் எனவும் HC தெரிவித்தது.
Sorry, no posts matched your criteria.