India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தோல்வி என்பது எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் வெற்றி எப்படி இருக்கும் என்பதை அறிய மிகவும் ஆவலுடன் உள்ளதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். இன்று உலகக் கோப்பை மகளிர் போட்டியின் ஃபைனலில், தெ.ஆப்பிரிக்காவை இந்தியா எதிர்கொள்கிறது. கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே போட்டாபோட்டி போடும் என்பதால், விறுவிறுப்பாக இருக்கும். இந்தியா வெல்லுமா?

இன்று (நவ.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

கூகுள் குரோம் பழைய வெர்ஷன் பிரவுசர் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல என்று மத்திய அரசின் CERT-In எச்சரித்துள்ளது. பழைய வெர்ஷனில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால், பயனர்களின் தகவல் திருடுபோக வாய்ப்புள்ளது. ஆகவே 142.0.7444.59/60 வெர்ஷனைவிட பழைய வெர்ஷன் பயன்படுத்தும் Linux, Windows, மற்றும் mac OS-கள் பயன்படுத்துவோர், உடனே அப்டேட் செய்துகொள்ளவும்.

இன்று (நவ.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

சென்னையில் வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற இருந்த IAS, IPS அதிகாரிகளின் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாநாடு நடத்தப்படும் தேதி, நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலவரம், திட்ட செயல்பாடுகள் குறித்து CM தலைமையில் மாநாடு நடைபெற இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மாநாடு நடைபெறுவது வழக்கம்.

சில தாவரங்கள் வளர விதைகள் தேவையில்லை. வேர்கள், தண்டுகள் அல்லது இலைகள் மூலம் வளர்கின்றன. இதுபோன்று விதைகள் இல்லாமல் வளரும் சில தாவரங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த தாவரங்களுக்கு பெயரை, கமெண்ட்ல சொல்லுங்க.

<<18168110>>ஆந்திராவில் கூட்டநெரிசல் <<>>ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழந்த கோயில், தனியாருக்கு சொந்தமானது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் செல்லவும், வெளியேறவும் ஒரே வழி மட்டும் இருந்ததும், ஒரே நேரத்தில் 25,000 பேர் கூடியதும் தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறியுள்ளது. மேலும், கூட்டத்திற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

கொடநாடு கொலையில் EPS குற்றவாளி என்றால் போலீஸ் என்ன செய்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, EPS-ஐ ஜெயிலில் போட வேண்டியதுதானே எனவும், திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், EPS CM-ஆவது தெய்வத்தின் தீர்ப்பு எனவும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் CM கனவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நாளை(நவ.2) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இன்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நாளை முதல் நவ.7-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
Sorry, no posts matched your criteria.