news

News April 23, 2025

நோவா பட நடிகை திடீர் மரணம்

image

நோவா, மம்மோத் ஆகிய ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் Sophie Nyweide. இந்நிலையில் 24 வயதே ஆகும் நிலையில், அவர் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஹாலிவுட் பிரபலங்கள் மரணமடைந்து வருவது திரைப்பட ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News April 23, 2025

துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து: ஐகோர்ட்

image

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை HC உத்தரவிட்டுள்ளது. ரூ.3.90 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் துரைமுருகனை விடுவித்து வேலூர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த ஐகோர்ட், வேலூர் கோர்ட் உத்தரவை ரத்து செய்து விசாரணையை தொடங்க ஆணையிட்டது.

News April 23, 2025

அப்பாவிகள் சிந்திய ரத்தம்… சூழும் போர் மேகங்கள்

image

தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு அப்பாவி சுற்றுலா பயணிகள் ரத்தம் சிந்தியுள்ளனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது. தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க உறுதி கொண்டுள்ள இந்தியா மீண்டும் எல்லை தாண்ட தயங்காது. PM மோடி, அமித் ஷா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

News April 23, 2025

e-NAM வேளாண் சந்தை திட்டம்: இனி ஆதார் கட்டாயம்

image

e-NAM வேளாண் சந்தை திட்டப் பயன்களை பெற ஆதாரை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள், வேளாண் தயாரிப்பு அமைப்புகளுக்கு மண்டி அமைக்க ரூ.75 லட்சம் வரை அரசு வழங்குகிறது. இதில் வெளிப்படைத்தன்மை, உரியவர்கள் பயன் அடைவதை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதாரை அளிக்க வேண்டும், ஆதார் இல்லாதோர் அதற்கு நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

News April 23, 2025

ஹாஸ்பிடலுக்கு செல்லாததால் இவ்வளவு நன்மையா?

image

ஹாஸ்பிடலுக்கு நேரில் செல்லாமல் மருத்துவ ஆலோசனை பெறும் Telemedicine மூலம் கார்பன் பயன்பாடு குறைந்ததாகவும், இது காலநிலை மாற்றத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் கலிஃபோர்னியா பல்கலையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2023-ல் நடந்த ஆய்வின்படி US-ல் மாதத்திற்கு 47.6 மில்லியன் கிலோ கார்பன் பயன்பாடு குறைந்துள்ளது. இது 1.30 லட்சம் கேஸ் மூலம் இயங்கும் வாகனங்களுக்குச் சமமாகும்.

News April 23, 2025

சிறார்களுக்கு ATM, செக்குடன் சேமிப்பு கணக்கு: RBI

image

10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாங்களே வங்கிக் கணக்கு தொடங்க <<16176181>>RBI<<>> அனுமதி வழங்கிய முழு விவரம் வெளியாகியுள்ளது. அதில், ATM அட்டை, இன்டர்நெட் பேங்கிங், செக் புக் வசதிகளுடன் சிறார்கள் வங்கிக் கணக்கு துவங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு குறைவான சிறார்கள், பெற்றோர் கண்காணிப்பில் கணக்கு தொடங்கலாம். ஆனால் ATM, செக்புக், இன்டர்நெட் பேங்கிங் கிடையாது.

News April 23, 2025

இந்தியாவுடன் துணை நிற்போம்: இஸ்ரேல் PM

image

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுடன் இஸ்ரேல் துணை நிற்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 23, 2025

நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் ஆவேசம்

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆவேசப்பட்டுள்ளனர். மன்னிக்கவே முடியாத கொடுங்குற்றம் என சிரஞ்சீவி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அழகான இடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அறிந்து இதயம் நொறுங்கிப் போனது என அல்லு அர்ஜூன் குறிப்பிட்டுள்ளார்.

News April 23, 2025

உயிரிழந்தவர்களுக்கு ₹10 லட்சம் இழப்பீடு: ஜம்மு அரசு

image

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் CM உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். அதேபோல் படுகாயம் அடைந்தவர்களுக்கு ₹2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ₹1 லட்சமும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உமர் அப்துல்லா X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

News April 23, 2025

REWIND: சங்ரம்போரா படுகொலை தெரியுமா?

image

பஹல்காமில் முஸ்லிம்கள் அல்ல என உறுதி செய்துவிட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது போன்ற சம்பவம் 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. 1997 மார்ச் 21, அன்று புத்காம் மாவட்டத்தில் காஷ்மீரி பண்டிட்கள் அதிகம் வசிக்கும் சங்ரம்போரா கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தினர். 7 இந்துக்களை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை கண்டித்து காஷ்மீர் முஸ்லிம்கள் அப்போதும் போராட்டம் நடத்தினர்.

error: Content is protected !!