India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அணியின் ஓபனர் குல் ஃபெரோசா கூறியுள்ளார். இதே கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முன்வைத்திருந்தது. மேலும் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், பொதுவான மைதானங்களிலேயே இரு அணிகளும் பங்கேற்கும் வகையிலான ஹைபிரிட் மாடலின் படியே பாக். அணி தொடர்ந்து விளையாடவுள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து வெளிப்படையான, நடுநிலையான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அனைத்து வகையிலான தீவிரவாதத்திற்கும் எதிராகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் சிந்து நதிநீரை நிறுத்தினால் கடும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.
இந்தியா INS விக்ராந்தை அரேபியக் கடலில் கராச்சியை நோக்கி நிறுத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இன்றும், நாளையும் அந்நாட்டு கடற்படை அரேபிய கடலில் ஏவுகணை சோதனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அப்போது, விமானங்கள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதல் பரபரப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது எனவும் அவர் உறுதிபட கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.
EPFO-ல் முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Ministry of Labour and Employment தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது, இனி ஈசியாக PF கணக்கை மாற்ற முடியும். முன்னர், பணி மாறும் போது Ex- நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இனி அந்த சிக்கல் இல்லை. இதற்காக Form-13-ல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தானாகவே, PF கணக்கு, புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாறிவிடும்.
EX எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாத ஓய்வூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000ஆக அதிகரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதேபோல் குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-ல் இருந்து ரூ.17,500ஆகவும், மருத்துவ படி ரூ.75,000-ல் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது 1.4.2025 முதல் வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
உயிரி மருத்துவ கழிவுகள் தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருப்பதாக சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அம்மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மோசடி வழக்கில் அமைச்சர் பதவி குறித்து திங்களுக்குள் முடிவெடுக்க SC கெடு விதித்த நிலையில் செந்தில் பாலாஜி மசோதாவை தாக்கல் செய்யாதது அவர் ராஜினாமா செய்ய இருப்பதை உறுதி செய்வதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெயின்’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில் படத்தின் வில்லன் குறித்து பல்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபட்ட சூழலில் தற்போது பஹத் பாசில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த காமினேஷன் வொர்க் அவுட் ஆகுமா?
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் வெடி விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். கோயில் விழாவுக்கு பட்டாசு எடுத்து செல்லுகையில் நேரிட்ட வெடி விபத்தில் செல்வராஜ், தமிழ்செல்வன், லோகேஷ், கார்த்தி பலியாகினர். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள CM, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கவும் ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.