India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?

*1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீஷியஸ் சென்றனர்
*1903 – பரிதிமாற்கலைஞர் நினைவுநாள்.
*1936 – BBC நிறுவனம், தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
*1965 – ஷாருக்கான் பிறந்தநாள்.
*1995 – நிவேதா தாமஸ் பிறந்தநாள்.

காமெடி கலந்த ஹாரர் படங்களின் வரிசையில், ‘காஞ்சனா’ படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த படத்தின் 4-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, நோரா ஃபடேஹி ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக நடித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், 2026 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

NDA ஆட்சியில் தனியார்மயமாக்கல் அதிகரித்துள்ளதாக MP பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பொதுத்துறையை, தனது நண்பர்களிடம் PM மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். நேரு, இந்திரா காந்தி ஆகியோரை விமர்சிக்கும் பாஜக தலைவர்கள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து வாய் திறப்பதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் இருதரப்பும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன.

IPL 2026 ஏலம் நடைபெறவுள்ள நிலையில், வீரர்களை மாற்றும் பணிகளில் அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஜடேஜாவை வாங்க RR அணி நிர்வாகம் ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால், ஜடேஜாவை கொடுக்க முடியாது என CSK கறாராக சொல்லிவிட்டதாம். ’ஜட்டு பாய் CSK சொத்து’ என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். மேலும், RR அணிக்கு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்க DC அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

‘இனிமேல் இந்த மாதிரி வாழ்க்கைல எப்பவும் நினச்சி கூட பார்க்கக்கூடாது’ என்ற எண்ணம் தான் மலேசியாவைச் சேர்ந்த 35 வயது நபருக்கு தோன்றியிருக்கும். வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 18 பிரம்படி தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தண்டனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 507 ▶குறள்: காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். ▶பொருள்: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

மாரி செல்வராஜின் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு, டெடிகேட்டிவான ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன், அது மலையாளி என்றால் கூட பிரச்சனையில்லை என மாரி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் உள்ளோம், எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா என கேட்டுள்ளார்.

▶நவம்பர் 2, ஐப்பசி 16 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
Sorry, no posts matched your criteria.