news

News April 23, 2025

தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை: ராஜ்பவன் விளக்கம்

image

துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக தமிழக அரசுடன் அதிகார மோதல் இல்லை என ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புடன் ஒப்பீட்டு துணை வேந்தர்கள் மாநாட்டை அதிகார மோதல் என சொல்வது தவறு எனவும் கவர்னர் மாளிகை குறிப்பிட்டுள்ளது. மாநாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும், சில ஊடங்கள் இருவருக்கும் மோதல் என தவறான தகவலை கூறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

அட்சய திருதியை.. வெளியான ஷாக் நியூஸ்!

image

தங்கம் விலை சவரனுக்கு ₹72,120க்கு விற்பனை செய்யப்படுவதால் சாமானியர்களை மட்டுமின்றி, நகைக்கடை வணிகர்களையும் குமுறச் செய்துள்ளது. ஏப்.30 அட்சய திருதியை வரும் நிலையில், அன்று தங்கம் வாங்குவதற்கு முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். விலை குறைந்த பிறகு நகை வாங்கலாம் என பலர் நினைப்பதாகவும், சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே நகை வாங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

News April 23, 2025

பஹல்காமில் அமரன் சூட்டிங்கில்.. ராஜ்குமார் உருக்கம்

image

ஆண்டுதோறும் 2 கோடி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பஹல்காம் ‘காஷ்மீரின் இதயம் போன்றது’ என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலானது மனிதம், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு ஒரு பேரிடி என தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமரன் படப்பிடிப்பின்போது அங்குள்ள மக்கள் அன்போடு நடந்துகொண்டனர் என்றும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

பண்ட் இனி சாக்குப்போக்கு சொல்ல முடியாது: ராயுடு

image

LSG அணியில் எடுக்கப்படும் முடிவுகளை பண்ட் இனி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என அம்பத்தி ராயுடு அறிவுறுத்தியுள்ளார். அவர்தான் கேப்டன் என்பதால் இனி சாக்குபோக்கு சொல்ல முடியாது எனவும், இனி சொந்தமாக முடிவுகளை எடுத்து, விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் ராயுடு கூறியுள்ளார். ₹27 கோடிக்கு வாங்கப்பட்ட பண்ட், நடப்பு சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 106 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

News April 23, 2025

பொன்முடி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

image

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் பேச்சு, இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, இவ்வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

News April 23, 2025

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை

image

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றைய SRH Vs MI போட்டியின்போது வீரர்கள், நடுவர்கள் கருப்பு பட்டை அணிந்து களமிறங்குவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டி துவங்குவதற்கு முன்பு மெளன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ள பிசிசிஐ, பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும், Cheers leaders கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது.

News April 23, 2025

ரேஷன் கடைகள் முன்பு நிழல் கூரை: அமைச்சர் அறிவிப்பு

image

அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் நிழல் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் மக்கள் வரிசையில் நிற்கையில், வெயிலில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சக்கரபாணி, மரங்கள் நடவும், நிழல் கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News April 23, 2025

ராஃபாவுக்காக திறந்த வாய்.. இப்போ என்ன ஆச்சு?

image

பஹல்காமில் நடத்த தாக்குதல் குறித்து பாலிவுட் பிரபலங்கள் யாரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என நெட்டீசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் ராஃபாவில் பலர் உயிரிழந்த போது ‘ALL EYES ON RAFAH’ என்பதை பாலிவுட் பிரபலங்கள் டிரெண்டாக்கினர். ஆனால் இப்போது 28 இந்தியர்கள் கொல்லப்பட்ட நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 23, 2025

இருட்டுக்கடை உரிமையாளர் மகள் மீண்டும் பரபரப்பு புகார்

image

தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாட்டுக்கு தப்ப வாய்ப்புள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்கா நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமத்தைக் கேட்பதாக ஏற்கனவே அளித்த புகார் மீதான விசாரணைக்கு ஆஜராக, பல்ராம் சிங் 10 நாள்கள் அவகாசம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 23, 2025

பயங்கரவாதம்: யார் இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்?

image

<<16186680>>பஹல்காம் <<>>தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள The Resistance Front (TRF), லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு என நம்பப்படுகிறது. J&K-ன் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு 2019-ல் துவங்கப்பட்ட TRF, 2023-ல் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரை சுதந்திர பிரதேசமாக அறிவிப்பதை முன்னிறுத்தும் TRF, இதுவரை காஷ்மீர் இந்துக்கள், அரசு ஊழியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

error: Content is protected !!