India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆக.13-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார். இதில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும்போது OTP பெறக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால், புதிய உறுப்பினர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 13-ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை நீட்டிக்கலாமா என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.
டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அது மிகவும் ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கழிவறையில் நீண்டநேரம் அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள் ஏற்படுமாம். அதையும் மீறி இப்பழக்கத்தை தொடர்ந்தால், ஆசனவாய் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதோடு ரத்த நாளங்கள் வீங்கி மூலநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாம். ஜாக்கிரதை..! SHARE IT.
டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டீன்ஸ் (MCQ) முறையில் நடத்த, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. வரும் அக்டோபரில் நடக்க உள்ள தேர்வுகளில், ஒரு கேள்விக்கு பல பதில்கள் வழங்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் கேள்வித்தாள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள், குறுகிய பதில்கள் அளிக்கும்படி சில கேள்விகள் இடம்பெறும்.
✦மூட்டுக்கள் நன்கு பலப்படுகின்றது.
✦தோள் பட்டைகளில் ஏற்படும் இறுக்கத்தைப் போக்கும்.
கால் பாதவலி நீக்கி கால்களுக்கு வலிமை தரும்.
✦10-15 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம்.
✦இதயம் வலுப்பெறும்.
✦நரம்பு மண்டலம் சீராக இயங்கும்.
✦மூட்டுவாதம், அஜீரணம் வராது.
PM மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் ₹34 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. மேலும், கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளை பயன்படுத்தி இந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 அக்.3-ம் தேதி முதல் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அருவுருவமான லிங்க வடிவிலான அம்மன் கோவை, கொழுமம் மாரியம்மன் கோவிலில் காட்சி தருகிறார். அமராவதி ஆற்றில், ஒருவருக்கு மீண்டும் மீண்டும் லிங்க வடிவிலான கல் ஒன்று சிக்கியுள்ளது. அவரது கனவில் தோன்றிய அம்பாள், ‘லிங்க வடிவில் தரிசனம் தந்தது நானே’ எனக் கூற, அங்கேயே கோவில் கட்டி, மாரியம்மன் என பெயர் சூட்டி, ஊர் மக்கள் வழிபட தொடங்கினர். இங்கு, இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் மாரியம்மன் காட்சி தருகிறாள்.
இன்ஸ்டாவில் படு ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அமைரா தஸ்தூர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மினுமினுக்கும் உடையில் காந்தக் கண்களைக் கொண்டு அவர் பார்க்கும் பார்வைக்கு, ரசிகர்கள் லைக்ஸ் மாரி பொழிந்து வருகின்றனர். ‘அனேகன்’ படத்தின் மூலம் அமைரா தமிழிழ் அறிமுகமானார். அதையடுத்து பிரபுதேவா உடன் ‘பஹீரா’ படத்தில் நடித்தார். தற்போது ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார்.
உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்குகளை செட்டில் செய்வது தொடர்பாக, வங்கிகளுக்கு RBI புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட், லாக்கரில் உள்ள பொருள்களை கேட்டு குடும்பத்தினர் (அ) நாமினிகள் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் பரிசீலித்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும். தாமதமாகும் நாள்களுக்கு 4% ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று 35-45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். உடனே, அவருக்கு முன்பே வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக அன்புமணி அறிவித்த நிலையில், அதற்கு தடைகேட்டு ராமதாஸ் கோர்ட்டுக்கு சென்றார்.
Sorry, no posts matched your criteria.