news

News April 23, 2025

பிரபல நடிகர் ‘பாசு டா’ காலமானார்

image

பிரபல அசாமிய நடிகர் மற்றும் பாடகர் ஃப்விலா பஸுமாட்டரி (54) காலமானார். இவரது மறைவு அசாம் மற்றும் வடகிழக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என போற்றப்படும் இவர், அம்மக்களால் ‘பாசு டா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். மேலும், போடோ மொழியில் எண்ணற்ற பாடல்களையும் இவர் பாடியுள்ளார். இவரின் மறைவுக்கு திரைக் கலைஞர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 23, 2025

திமுக அமைச்சருக்கு வந்த புதிய சிக்கல்

image

சொத்துக்குவிப்பு வழக்கில் <<16187361>>துரைமுருகனை <<>> விடுவித்த உத்தரவை ஐகோர்ட் ரத்து செய்தது. ஏற்கெனவே, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், KKSSR, தங்கம் தென்னரசு மீதான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதேபோல், சர்ச்சை பேச்சில் பொன்முடிக்கு ஐகோர்ட்டும், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றமும் செக் வைத்துள்ளன. இந்த விவகாரங்கள் அனைத்தையும் தேர்தல் நேரத்தில் அதிமுக, பாஜக, தவெக கையில் எடுத்து பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.

News April 23, 2025

போலீஸுக்கு வார விடுப்பு வழங்கப்படுகிறதா?

image

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு ஏன் வார விடுப்பு வழங்கப்படுவதில்லை என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான அரசாணை 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையிலும், விடுப்பு வழங்கப்படுவதில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள், போதிய காவலர்கள் இல்லை என்பது அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பே தெரிய வேண்டாமா என்று காட்டமாக கேள்வி எழுப்பினர்.

News April 23, 2025

பாக்.கை தண்டியுங்கள்.. நாடு முழுவதும் ஒரே குரல்

image

பகல்ஹாமில் 28 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, நாட்டு மக்கள் தங்கள் இடையேயான கருத்து வேறுபாட்டை மறந்து பாகிஸ்தானை தண்டிக்க குரல் எழுப்பி வருகின்றனர். சமூகவலைதளங்களிலும் இதையே வலியுறுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நாட்டில் பல இனம், மொழி மக்கள் வாழ்ந்தாலும் தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ஒற்றுமையுடன் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவே இந்தியா!

News April 23, 2025

சர்வதேச புத்தக தினம்

image

புத்தக வாசிப்பும், படிப்பும் மட்டுமே சமூகத்தை பண்படுத்தும் என்பது சான்றோர் வாக்கு. அதனை ஊக்குவிப்பதற்காக, ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி சர்வதேச புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது. புத்தகங்களில் எதை படிக்க வேண்டும் என்ற கேள்வியே தேவையில்லை. அனைத்தையும் படிக்கலாம். நல்ல புத்தகங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் மோசமான புத்தகங்கள் எப்படி வாழக்கூடாது என்பதையும் கற்றுத்தரும்.

News April 23, 2025

துயரமாக மாறிய இன்ப சுற்றுலா… கண்ணீர் கதை!

image

காதல் மனைவியின் பிறந்தநாளை கொண்டாட சென்றவர், அடுத்தநாளே பிணமான கொடுமையை என்னவென்பது! இந்தூரை சேர்ந்த சுனில் நதானியேல்(58), குடும்பத்தினருடன் காஷ்மீரின் பஹல்காமுக்கு சென்றார். அந்நேரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த, மகளை தள்ளிவிட்டு காப்பாற்றியவர், தான் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார். ‘அப்பாவை சுட்டுட்டாங்க… அவர் எங்கள விட்டுட்டு போய்ட்டார்’ என்று கதறும் மகனுக்கு என்ன ஆறுதலை சொல்வீர்கள்?

News April 23, 2025

4 நாள் மட்டுமே! அமைச்சரா? சிறையா?

image

ஒருவேளை அமைச்சர் பதவியில் தொடர வேண்டும் என்று <<16191630>>செந்தில் பாலாஜி மு<<>>டிவெடுத்தால், மீண்டும் கைதாகி சிறைக்கு செல்ல வேண்டும். ஏற்கெனவே சிறையிலிருந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியிலிருந்து விலகி, ஜாமின் பெற்று வழக்கை எதிர்கொள்ளலாம். ஆனால், அமைச்சர் பதவியில் தொடரவே அவர் விரும்புவார் என கூறப்படுகிறது. எது எப்படியோ! இன்னும் 4 நாளில் முடிவு தெரிந்துவிடும்.

News April 23, 2025

தரைவழி, வான்வழி.. அடுத்து ?

image

உரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம்
தரை வழியே பாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் ஊடுருவி சென்று அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை வான்வழியாக சென்று தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு பகல்ஹாமில் தற்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்தியா எந்த வழியில் பதிலடி காெடுக்க போகிறது?

News April 23, 2025

இந்திய கால்பந்து வீரர் ராங்காங் காலமானார்

image

இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் சிங் ராங்காங் காலமானார். நீரிழிவு மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். 1990-களில் பிரபலமான வீரராக இருந்த ராங்காங், அசாம் மாநில அணியிலும், இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். பல சர்வதேசப் போட்டிகளில் நாட்டுக்காக விளையாடியுள்ள அவரின் மறைவுக்கு விளையாட்டுத் துறை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

News April 23, 2025

BCCI-க்கு முன்னாள் வீரர் வைத்த கோரிக்கை

image

பாகிஸ்தானுடன் இனி எந்த கிரிக்கெட் போட்டியும் விளையாட கூடாது என BCCI-க்கு இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறும் போது அவர்களுக்கு புரியும் மொழியில் தான் நம் பதில் அளிக்க வேண்டு எனவும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் போட்டிக்காக காஷ்மீர் சென்ற போது அங்குள்ள அமைதியை கண்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!