news

News November 2, 2025

பொய் பேசினால் மன்னிப்பு கிடையாது: தமன்னா

image

விஜய் வர்மா உடனான காதலை திடீரென முறித்துக் கொண்டார் தமன்னா. ஆனால் காரணத்தை கூறவில்லை. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என தமன்னா பதிலளித்துள்ளார். பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். உங்கள் துணையிடம் நீங்கள் பொய் பேசுவீர்களா?

News November 2, 2025

EXCLUSIVE: அதிமுகவுடன் கூட்டணி.. முடிவை அறிவித்தார்

image

அதிமுக கூட்டணியில், 2026 பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின்(AMAK) தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிவித்துள்ளார். WAY2NEWS-க்கு சிறப்பு பேட்டியளித்த அவர், 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் தலா 10,000 பேருடன் AMAK அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். வரும் தேர்தலில் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி (அ) சென்னை மதுரவாயலில் தான் போட்டியிட விரும்புவதாக கூறினார்.

News November 2, 2025

என்ன சொல்றீங்க.. இறந்துடுமா?

image

சில உயிரினங்கள் வாழ்நாள் மிகவும் குறுகிய காலம் மட்டுமே. குறிப்பாக சில பூச்சி வகைகள், மீன்கள், எலி வகைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இறந்துவிடும். அவை எந்த உயிரினங்கள், எப்போது இறக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று, உங்களுக்கு தெரிந்த உயிரினங்கள் தொடர்பான சுவாரசியமான தகவலை, கமெண்ட்ல சொல்லுங்க.

News November 2, 2025

ரஷ்மிகாவுக்கு கதையை பரிந்துரைத்த சமந்தா

image

ரஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘The Girlfriend’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் கதையை, தனது தோழியான நடிகை சமந்தாவிடம் படிக்க கொடுத்துள்ளார், இதன் இயக்குநர் ராகுல் ரவீந்திரன். அப்போது, இப்படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். ஆனால் சமந்தாவோ, இக்கதை தனக்கு பொருந்தாது, ரஷ்மிகாவை நடிக்க வையுங்கள் என கூறியுள்ளார். இதன் பிறகே ரஷ்மிகா படத்தில் கமிட்டாகியுள்ளார்.

News November 2, 2025

தமிழை பற்றி பேசும் தகுதி மோடிக்கே உண்டு: நயினார்

image

தமிழை பற்றி பேசும் தகுதி PM மோடி ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஐநா சபைக்கு போனாலும் சரி, அயோத்திக்கு போனாலும் சரி தமிழை பற்றி மட்டுமே மோடி பேசுவதாகவும் கூறியுள்ளார். பிஹாரிகளை திமுக அரசு துன்புறுத்துவதாக மோடி கூறிய நிலையில், இது தமிழர்களை அவமதிக்கும் செயல் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

News November 2, 2025

லெனின் பொன்மொழிகள்

image

*நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
*பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
*நம்பிக்கை நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
*அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.
*பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
*அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.

News November 2, 2025

காந்திக்கு பிறகு மோடி தான்: RN ரவி

image

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?

News November 2, 2025

நவம்பர் 2: வரலாற்றில் இன்று

image

*1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீஷியஸ் சென்றனர்
*1903 – பரிதிமாற்கலைஞர் நினைவுநாள்.
*1936 – BBC நிறுவனம், தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
*1965 – ஷாருக்கான் பிறந்தநாள்.
*1995 – நிவேதா தாமஸ் பிறந்தநாள்.

News November 2, 2025

காஞ்சனா 4-ல் இணைந்த பூஜா ஹெக்டே, நோரா ஃபடேஹி

image

காமெடி கலந்த ஹாரர் படங்களின் வரிசையில், ‘காஞ்சனா’ படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த படத்தின் 4-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, நோரா ஃபடேஹி ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக நடித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், 2026 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News November 2, 2025

NDA ஆட்சியில் அதிக தனியார்மயமாக்கல்: பிரியங்கா

image

NDA ஆட்சியில் தனியார்மயமாக்கல் அதிகரித்துள்ளதாக MP பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பொதுத்துறையை, தனது நண்பர்களிடம் PM மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். நேரு, இந்திரா காந்தி ஆகியோரை விமர்சிக்கும் பாஜக தலைவர்கள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து வாய் திறப்பதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் இருதரப்பும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன.

error: Content is protected !!