news

News April 23, 2025

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்?

image

பிரதமர் மோடியின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏப்.19-ம் தேதி ஜம்மு – காஷ்மீருக்கு மோடி பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையால் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நேற்று பஹல்காமில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை அரங்கேறியிருக்கின்றனர்.

News April 23, 2025

ஏப்.30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

image

ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் ஏப்ரல் 30-ம் தேதி என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, மே 1-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி (ஒரு மாதம்) ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுவதால் ஏப்.30 வரை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என அனைத்து ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

தோப்புக்கரணம் போட சொன்ன டீச்சருக்கு ₹2 லட்சம் அபராதம்

image

சிவகங்கையில் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்த மாணவியை, தோப்புக்கரணம் இட வைத்த ஆசிரியைக்கு அபராதம் விதித்திருக்கிறது மாநில மனித உரிமை ஆணையம். 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 400 தோப்புக்கரணம் போட வைத்திருக்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை சித்ரா. இதனால் மாணவிக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆசிரியையிடமிருந்து அபராதமாக ₹2 லட்சத்தை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 23, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை & தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News April 23, 2025

GBU விவகாரம்.. அப்பா சொன்னது பொய்: பிரேம்ஜி

image

‘குட் பேட் அக்லி’ படம் இளையராஜாவின் பாட்டால் தான் ஓடியது என கங்கை அமரன் சமீபத்தில் பேசியது வைரலானது. ஆனால், அதை மறுத்துள்ள அவரது மகன் பிரேம்ஜி, அனைவருக்குமே உண்மை தெரியும் எனவும், அஜித்தின் படம் அஜித்தால் மட்டுமே ஓடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், எனது அண்ணனுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பது போன்று, எனது அப்பாவும் அவருடைய அண்ணனுக்காக குரல் கொடுத்ததாக பிரேம்ஜி கூறியுள்ளார்.

News April 23, 2025

BREAKING: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு

image

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளையுடன் இறுதித்தேர்வு முடியும் நிலையில், ஏப்ரல் 25 முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஜூன் 2-ம் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை: பதில் தாக்குதல்?

image

பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் முப்படைத் தளபதிகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், ஸ்ரீநகரில் இருந்து திரும்பிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

News April 23, 2025

IPL: SRH முதலில் பேட்டிங்

image

ஹைதராபாத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் போட்டியில், SRH – MI அணிகள் மோதவுள்ளன. இதில், டாஸ் வென்ற MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, SRH அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்துள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் MI அணி வெற்றி பெற்றது. இதனை பழி வாங்கும் நோக்கில் SRH ஆக்ரோஷமாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 23, 2025

இவனே வீரன்.. அதனால்தான் வீரமரணம் கிடைத்ததோ!

image

பஹல்காம் தாக்குதலின் போது, அப்பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்யும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் செய்த செயல் கண்கலங்க வைத்துள்ளது. அப்பாவி மக்கள் சுடப்படுவதை கண்டதும் உடனே அவர், தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட தீவிரவாதி, அவரை சுட்டு கொன்றுள்ளான். தனது உயிரை துச்சமாக நினைத்து, மக்களை காப்பாற்ற முயன்றுள்ளார் அந்த வீரன்.

News April 23, 2025

தாக்குதலுக்கு ஏன் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது?

image

பைசரன் பள்ளத்தாக்கை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 1.பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ-க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. 2.நடந்தோ (அ) குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும். 3.தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். 4.அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க இவைதான் காரணம்.

error: Content is protected !!