news

News April 23, 2025

தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உடந்தை?

image

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு இல்லாவிட்டால், பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஏன் அமைதி காக்கிறார் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார். பாக்., திடீரென ஹை-அலர்ட்டில் உள்ளது ஏன் எனக் கேள்வி எழுப்பும் அவர், தன் நாடு தீவிரவாதிகளை ஊக்குவித்து, அடைக்கலம் அளிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பாக்., அணியில் இருந்த ஒரே இந்து வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 23, 2025

BREAKING: வாகா எல்லை மூடல்.. மத்திய அரசு அறிவிப்பு

image

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் எதிரொலியாக மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 23, 2025

தடுமாறி மீண்ட SRH அணி

image

இன்றைய IPL போட்டியில், SRH அணியை மிகக் குறைந்த ரன்களில் கண்ட்ரோல் செய்து அசத்தியிருக்கிறது MI. முதலில் பேட்டிங் செய்த SRH அணியின் முதல் நான்கு வீரர்கள் 0, 8, 1, 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கிளாசன் (71), அபினவ் (43) ஆகியோரின் அதிரடியால், அந்த அணி 20 ஓவர்களில் 143/8 ரன்கள் என்ற கௌரவமான நிலையை எட்டியது. MI அணியின் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News April 23, 2025

BREAKING: இபிஎஸ் விருந்தில் 4 MLAக்கள் ஆப்சென்ட்

image

பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் MLA-க்களை சமாதானப்படுத்த சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ் விருந்து வைத்து வருகிறார். இவ்விருந்தில் அதிமுக மூத்த தலைவர்கள் பங்கேற்ற நிலையில் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். அவரை தொடர்ந்து சூலூர் MLA கந்தசாமி, பவானிசாகர் MLA பண்ணாரி, திண்டிவனம் MLA அர்ஜுனனும் புறக்கணித்துள்ளனர். இது அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது.

News April 23, 2025

EPS-ன் விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

image

ADMK MLA-க்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார். பாஜகவுடன் கூட்டணியமைத்திருப்பதால், தலைமை மீது MLAக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், செங்கோட்டையன் இந்த விருந்துக்கு வரவில்லை. இது, EPS vs செங்கோட்டையன் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

News April 23, 2025

ஜாமின் கொடுத்ததே தவறு: ஒப்புக்கொண்ட நீதிபதிகள்

image

உங்களுக்கு ஜாமின் வழங்கியதன் மூலம் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம்; அதனை நாங்கள் இப்போது ஒப்புக் கொள்கிறோம் என்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமைச்சர் பதவியில் தொடர்வதா (அ) ஜாமினா என்று முடிவெடுக்க, அவருக்கு 4 நாள்கள் கெடு விதித்துள்ளனர். ஜாமின் இல்லையெனில், சிறை செல்ல நேரிடும். என்ன முடிவெடுப்பார் செந்தில் பாலாஜி?

News April 23, 2025

சுக்கிரன் பெயர்ச்சி: கோடியில் புரளப் போகும் 5 ராசிகள்

image

சுக்கிரன் ஏப்.13-ல் மீன ராசியில் நிவர்த்தி அடைந்ததால், 2 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. இதனால் அதிக நன்மை பெறும் ராசிகள்: *ரிஷபம்- பொருளாதார நிலை உயரும், தடைகள் நீங்கும் *கடகம்: தொழில், வேலையில் முன்னேற்றம், குடும்ப சூழல் மேம்படும் *துலாம்: பாசிடிவ் மாற்றங்கள். குடும்ப உறவு சிறக்கும். பயண வாய்ப்பு *விருச்சிகம்: வருமானம் உயரும், குடும்பத்தில் மகிழ்ச்சி *தனுசு: அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுதாக கிடைக்கும்.

News April 23, 2025

பாக்.-ஐ செதில் செதிலாக தகர்க்கும் இந்தியா?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. *பாக். ராணுவம், லஷ்கர் – இ – தொய்பா முகாம்களில் தாக்குதல். *வர்த்தகத்தை முழுமையாக ரத்து செய்வது. *சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. *ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள P5 நாடுகளிடம் பாகிஸ்தான் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது.

News April 23, 2025

அடுத்தடுத்து 5 விக்கெட்.. SRH கவலைக்கிடம்

image

MI-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் SRH அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த SRH அடுத்தடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா என நட்சத்திர வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், அந்த அணி 8.3 ஓவரில் 35/5 ரன்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.

News April 23, 2025

தீவிரவாதிகளின் தளபதியை சுற்றிவளைத்த ராணுவம்

image

J&K-வில் எண்கவுண்டர் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குல்காமில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட TRF தீவிரவாத அமைப்பின் தளபதி ஆஷிஃப் ஃபவுஜி உள்பட அனைத்து தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆஷிஃப் நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!