India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டாக்சிக் நண்பரை அடையாளம் கண்டபின் *அவர்களுக்கான லிமிட்டை முடிவு செய்யுங்கள் *உங்களை பாதிக்கும் நட்பை முறித்துக்கொள்ள உங்களுக்கு எப்போதும் உரிமை உள்ளது. ஆகவே, எல்லை மீறினால் விலகத் தயங்காதீர் *எதையும் நேருக்கு நேர் சொல்லி விடுங்கள் *உங்களுக்கென தனியே நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள் *மீண்டும் அவருடன் தொடர்பை புதுப்பிக்க விரும்பினால், ஒன்றுக்கு இருமுறை யோசியுங்கள் *புதிய நண்பர்களை கண்டறிந்து பழகுங்கள்.
வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக தேசிய தலைமை புறக்கணித்ததால் NDA கூட்டணியிலிருந்து OPS விலகினார். இதனை தொடர்ந்து நெல்லைக்கு சென்ற EPS-யிடம் OPS இணைப்பு குறித்து நயினார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் OPS-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஸை சந்திக்க வருமாறு OPS-க்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
ஷூட்டிங்கில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தமன்னா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் நடித்த படத்தின் ஹீரோ, தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யாதீர்கள் என கெஞ்சியும் அந்த ஹீரோ கேட்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறிய பிறகே அவர் விலகியதாகவும் கூறியுள்ளார். எந்த ஹீரோவாக இருக்கும்?
பதவி, பொறுப்புக்கான அவசியமே தனக்கு கிடையாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தான் தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டதாகவும், மனதில் பாரத்தை சுமந்து வருவதாகவும் தெரிவித்தார். தான் சுயநலவாதி கிடையாது, ஆனால் ராமதாஸை சுற்றியுள்ள குள்ளநரி கூட்டம் ஒருதலைபட்சமாக தான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவரிடம் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
பாமக தொண்டர்கள் விருப்பப்படி மெகா கூட்டணி அமைக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு வழிகாட்டி என்றால் ராமதாஸ் தான் என்றும், அவர் இங்கு இல்லை என்றாலும், அவரது உள்ளம் இங்கு தான் உள்ளதாகவும் கூறினார். வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால் 40 – 50 MLA-க்களை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
நடிகை சங்கீதா இன்ஸ்டாவில் ‘சங்கீதா கிரிஷ்’ என்ற தனது Profile பெயரை ‘சங்கீதா சந்தரம்’ என மாற்றியது, பெரும் வைரலாக மாறி, அவர் விவாகரத்து செய்ய போகிறார் என பேசப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நியூமராலஜிக்காக பெயரை இவ்வாறு மாற்றியிருப்பதாக சங்கீதா தற்போது விளக்கமளித்துள்ளார். இவருக்கும் பாடகர் கிருஷுக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ATM-களில் ₹500 நோட்டுகள் செப்.30 முதல் நிறுத்தப்படும் என்றும் அதன்பின் ₹500 நோட்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பார்லிமென்டில் விளக்கமளித்த மத்திய நிதியமைச்சகம், அது வதந்தி எனத் தெரிவித்துள்ளது. ATM-களில் செப்டம்பருக்குள் ₹100, ₹200 நோட்டுகள் 75% கிடைப்பதை உறுதி செய்யவும், 2026 மார்ச்சில் அதனை 90%ஆக அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அவருக்கு மிக முக்கிய பொறுப்பை ஸ்டாலின் கொடுத்துள்ளார். ஆம்! திமுகவின் இலக்கிய அணி தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இஸ்லாமிய சமூக வாக்குகளை கருத்தில் கொண்டு 2026 தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
<<17349030>>MGR-ஐ<<>> விமர்சித்தால் திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி, அதிமுக எனவும் தெரிவித்தார். NDA கூட்டணியில் இருந்து விலகியது ஏன் என்று ஓபிஎஸ்தான் சொல்ல வேண்டும் எனக் கூறிய அவர், 8 மாதங்களில் சிறப்பான கூட்டணி அமைத்து, 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.