news

News April 24, 2025

காதல் சின்னத்தை ரசித்த USA துணை அதிபர்..!

image

இந்தியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுப் பயணம் வந்துள்ள USA துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளார். கடந்த 21-ம் தேதி இந்தியா வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து, PM மோடி விருந்தளித்தார். இந்நிலையில், மனைவி உஷா, 3 குழந்தைகளுடன் சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை அவர் சுற்றிப் பார்த்தார். இதனையடுத்து, தாஜ்மஹால் முன்பு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

News April 24, 2025

ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

image

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.

News April 24, 2025

என்னை மாற்றியது இவர்தான்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

image

நிகழ்ச்சிகளில் THUG பதில் அளிப்பதிலும், குறும்பு சேட்டை செய்வதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கெட்டிக்காரர். முதலில் INTROVERT ஆக இருந்த தன்னை EXTROVERT ஆக மாற்றியதே இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்தான் என அவர் தெரிவித்துள்ளார். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி. மகாதேவன் உள்ளிட்டோரிடம் வேலை செய்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், டி.ராஜேந்தர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தன்னை மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

ரோஹித்துக்கு வந்த சோதனை.. 9 வருஷத்துல இதுதான் ஃபர்ஸ்ட்!

image

ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 2 போட்டிகளில் அரைசதம் விளாசுவது 9 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாம். CSK, SRH அணிகளுக்கு எதிராக தற்போது தொடர்ச்சியாக அரைசதம் அடித்த அவர், இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் KKR, RPS அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்திருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ரோஹித் சர்மாவிற்கு இது ஒரு மோசமான சாதனைதான் என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News April 24, 2025

மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

image

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

News April 24, 2025

பிரேக் எடுக்கும் விஜய்?.. ‘ஜனநாயகன்’ பட அப்டேட்!

image

கடைசி படமாக ‘ஜன நாயகன்’-ல் நடித்து வரும் விஜய், ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் ப்ரேக் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஷூட்டிங் நிதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பணி காரணமாக ஷூட்டிங்கிற்கு முழுக்கு போட விஜய் திட்டமிட்டுள்ளாராம். எனினும், மே மாத இறுதிக்குள் விஜய்யின் போர்ஷன் நிறைவடையும் என கூறப்படுகிறது.

News April 24, 2025

1,500 பேர் கைது.. அதிரடியில் இறங்கிய காஷ்மீர் போலீஸ்!

image

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததன் எதிரொலியாக 1,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் டேட்டாக்களில் இருப்பவர்கள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டவர்கள், தொழிலாளர்கள் என பலரையும் கைது போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும், ஜம்மு – காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News April 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 316 ▶குறள்: இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். ▶பொருள்: ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

News April 24, 2025

அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு எப்போது?

image

நடிகர் அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அவரது பிறந்த நாளான மே 1-ல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மாபெரும் ஹிட் அடித்ததால், ஆதிக் ரவிசந்திரனே அவரது அடுத்த படத்தையும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குட் பேட் அக்லி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த காம்போ உங்களுக்கு பிடிக்குமா?

News April 24, 2025

பண்ட் முகத்தை பார்த்தாலே தெரிகிறது: கும்ப்ளே

image

பண்ட் விரக்தியில் இருந்தது தெளிவாக தெரிந்ததாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். DC-க்கு எதிரான நேற்றைய போட்டியில் பண்ட் 7-வது வீரராக களமிறங்கியது, அவரது முடிவா அல்லது கோச்சின் முடிவா என கேள்வி எழுப்பிய கும்ப்ளே, அது மிகப்பெரிய தவறு எனவும் கூறியுள்ளார். நேற்று 12-வது ஓவரில் LSG 99/2 என இருந்த நிலையில் களமிறங்காமல் 7-வதாக பண்ட் களமிறங்கினார். ஆனாலும் அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

error: Content is protected !!