India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
USA துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி, குழந்தைகளுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். ஜெய்ப்பூர் அரண்மனையை நேற்று அவர் பார்வையிட இருந்தது. ஆனால் திடீரென அதை ரத்து செய்து விட்டார். அத்துடன் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு குடும்பத்தினருடன் USA -க்கு வான்ஸ் இன்று புறப்பட்டுச் சென்றார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அவர் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
நோவா பட நடிகை Sophie Nyweide உயிரிழக்கையில் கர்ப்பமாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. நோவா, பெல்லா, சேடோஸ் அன்ட் லைஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் Sophie Nyweide. 24 வயதான அவர் அண்மையில் நதிக்கரையோரம் திடீரென உயிரிழந்து கிடந்தார். அவர் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், அதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
சையது அடில் ஹுசைன் ஷா என்ற குதிரை சவாரி தொழிலாளி, சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் நோக்கில் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றபோது சுடப்பட்டு உயிரிழந்தார். குடும்பத்தின் மூத்த பிள்ளையான இவர் ஒருவரின் சம்பளமே ஒரே வருமானம் என அவரது பெற்றோர், மனைவி ஆகியோர் கண்ணீர் விடுகின்றனர். அதேநேரம், சையதுவின் குடும்பத்தை அரசு பார்த்துக்கொள்ளும் என J&K CM உமர் அப்துல்லா உறுதியளித்துள்ளார்.
T20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நேற்று பும்ரா படைத்துள்ளார். அவர், SRH-ன் கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார். அதே போல, MI அணிக்காக அதிக விக்கெட்களை (170 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் சமன் செய்துள்ளார். இதற்கு முன்னர், மலிங்காவும் 170 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். மொத்தமாக பும்ரா எத்தனை விக்கெட்களை வீழ்த்துவார்?
வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த தினமாகும். இன்று இந்த மந்திரத்தை சொன்னால், வாழ்க்கையில் இன்பம் பெருகி, தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
குணமிகு வியாழ குரு பகவானே! மகிழ்வுடன் வாழ மனமுவந்து அருள்வாய்! பிரகஸ்பதி வியாழ குருபர நேசா! கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!
அதிமுக கூட்டணியில் தென் மண்டலத்தில் அதிக தொகுதிகளை பெற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளாராம். 2021-ல் பாஜக 20 தொகுதிகளை பெற்று 4-ல் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால் தற்போது கூடுதல் தொகுதிகளை கேட்க நயினார் கணக்கு போட்டு வருகிறார். ஆனால், இபிஎஸ் இதற்கு பச்சைக்கொடி காட்டுவாரா? என்பது சந்தேகம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு சராசரியாக ₹5 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உருளைக்கிழங்கு – ₹25, தக்காளி – ₹15, கேரட் – ₹25, பீட்ரூட் – ₹10, பெரிய வெங்காயம் – ₹18, இஞ்சி – ₹60, முள்ளங்கி – ₹12, சின்ன வெங்காயம் – ₹40 , கத்திரிக்காய் – ₹20, முருங்கை – ₹70க்கு விற்பனையாகிறது.
பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என கார்கே தெரிவித்துள்ளார். இது இந்தியா மீதான தாக்குதல், இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை, காங்கிரஸ் இதில் அரசியல் செய்யாது, தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து சக்தியையும் மோடி அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
₹10 லட்சத்திற்கு மேல் விலையுடைய ஆடம்பர பொருள் வாங்கும்போது இனி 1% டிசிஎஸ் (Tax collected at source) வரி விதிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரங்கள், காலணிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை வாங்கினால் கூடுதலாக வரி விதிக்கப்படும். இது ஏப்.22 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்பு வாங்கிய பொருள்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பதிலடி தாக்குதல் தொடர்பாக இன்று(ஏப். 24) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரத்தில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.