India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் வேறு ஒரு அவதாரத்தை பார்ப்பீர்கள் என அனிருத் தெரிவித்துள்ளார். மதராஸி இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர் SK இன்னைக்கு இந்த உயரத்துக்கு வளர்வதற்கு அவரின் தூய்மையான உள்ளமே காரணம் எனவும் அனிருத் நெகிழ்ந்துள்ளார். என்னைக்கோ ஒரு நாள் நான் field out ஆவேன் என கூறிய அவர் அன்னைக்கு எஸ்.கே-வோட வெற்றியை எண்ணி சந்தோஷப்படுவேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திருச்சி <<17507617>>துறையூரில் அம்புலன்ஸை<<>> அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயல் என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இந்த மிரட்டல் அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
PM மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர உள்ளார். இந்த தகவலை பகிர்ந்த அந்நாட்டு தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக், பயணத் தேசி விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவுடனான போர் மற்றும் இந்தியா – உக்ரைன் உறவு குறித்து, மோடியுடன் ஜெலன்ஸ்கி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போரை நிறுத்த ஏற்கனவே புதினிடமும் மோடி ஆலோசித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இன்று (ஆகஸ்ட் 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
ஆணவக் கொலைகள் நடப்பதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சத்யராஜ், அதனை தடுக்க சட்ட இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காதல் என்பது மிகவும் எளிதான விஷயம் என்றும், இதற்கெல்லாம் கொலை செய்வது நியாயமில்லை என்றும் தெரிவித்தார். மனித வாழ்க்கையில் காதலும் காமமும் அத்தியாவசியமான விஷயம் என்றும் நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டார்.
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் டி20 போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடிவரும் அவர், இன்று இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் இதற்கு முன்பு ரஷித் கான், பிராவோ, சுனில் நரைன், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். அதிகபட்சமாக ரஷித் கான் 660 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நன்மை அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்.
➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.
தன்னை குட்டி தளபதி என்று அழைப்பதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என சிவகார்த்திகேயன் பேச அரங்கம் அதிர்ந்தது.
மழைக்காலம் என்பதால் பல இடங்களில் ஃப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த அக்டோபரில் பரவத் தொடங்கிய ஃப்ளூ பாதிப்பு, இந்தாண்டு மார்ச் வரையிலும் நீடித்தது. ஒரு முறை வந்த ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு வராது எனக் கூறும் டாக்டர்கள், அதன்பின் அதனுடைய மரபணு முழுமையாக மாற்றம் அடைவதால் மீண்டும் வரலாம் என்கின்றனர். அதனால் ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியம் என வலியுறுத்துகின்றனர். ஜாக்கிரதை மக்களே!
Sorry, no posts matched your criteria.