India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SIR பணிகளால் தமிழ்நாட்டிற்கு பெரிய ஆபத்து ஏற்படும் என வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த பணிகளால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் நிலை உருவாகும் எனவும், இதனால் தமிழர்களின் உரிமை பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் திருமா, பெ.சண்முகம், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்களும் SIR பணிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுத்தம் சோறு போடும் என ஸ்கூல் படிக்கும் போதே சொல்லி கொடுத்தாலும், வளர்ந்த பிறகு அதை மறந்துவிடுகிறோம். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 அசுத்தமான நகரங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கம் Swipe செய்து, எந்த நகரம் டாப்பில் இருக்கிறது என பாருங்க. சாக்லெட் கவரை ரோட்டில் வீசிபவருக்கு, ஊரே குப்பையா இருக்கு என குறைசொல்ல அருகதை இல்லை. மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்குவோம்

பருவமழை, புயலால் TN-ல் தொடர் மழை இருந்தது. ஆனால், ‘Montha’ புயல் கரையை கடந்தபோது, கிழக்கு திசை காற்றை இழுத்து சென்றது. இதனால், TN-ல் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. அடுத்த ஒருவாரத்திற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், நவ.8 வரை இரவில் மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொகுப்பாளரும், நடிகையுமான VJ அர்ச்சனா, தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருவர் யூடியூபில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பியுள்ளார். இதை பார்த்து கடுப்பான அர்ச்சனா, அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், டேய்! புருஷன் கூடச் சண்டை போட்டுத் தற்கொலை… நோ சான்ஸ்! அவரை நான்தான் அடிப்பேன் என்று அர்ச்சனா பதிலடி கொடுத்துள்ளார்.

SIR குறித்த அனைத்து கட்சி கூட்டம் CM ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதில் பேசிய CM, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஜனநாயக கடமையாற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடப்பதாக தெரிவித்தார். ஏப்ரலில் தேர்தலை வைத்துகொண்டு தற்போது SIR பணிகளை செய்வது சரியானது அல்ல எனவும், இதனால் வாக்காளர்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.

பூக்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் ரோஜாக்கள் என்றால் கேட்க வேண்டுமா. எல்லாரும் விரும்பும் ரோஜாக்களை பல்வேறு நிறங்களில் நாம் பார்த்திருப்போம். அதில் பல இயற்கையானது. சில கலப்பின வகைகளை சேர்ந்தது. அப்படிப்பட்ட கலர் கலரான ரோஜாக்களின் பெயர்கள் என்னென்ன, எந்த வகையை சேர்ந்தது என்று தெரியுமா? அதை தெரிந்து கொள்ள மேல SWIPE பண்ணி பாருங்க…

SIR பணிகள் சரியாக நடக்க விஜய் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ➤புதிய வாக்காளர்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டையை ஏற்கணும் ➤திருத்தப்பட்ட இறுதி பட்டியலை புகைப்படத்துடன், டிஜிட்டல் வடிவில் கட்சிகளின் முகவர்கள் சரிபார்க்க வழங்க வேண்டும். ➤வேட்புமனு தாக்கல் இறுதி தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படக் கூடாது ➤இறுதி பட்டியல் இணையத்தில் எளிதில் கிடைக்க செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இப்போது வரும் பேய் படங்கள் பயப்படுற மாதிரியே இல்லை என சொல்பவரா நீங்கள்? உங்களுக்காகவே உலகளவில் நல்ல வரவேற்பை பெற்ற பேய் படங்களை பட்டியலிட்டிருக்கிறோம். போட்டோக்களை SWIPE செய்து அதனை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பார்த்ததிலேயே பயங்கரமான பேய் படம் எது என கமெண்ட்ல சொல்லுங்க. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணி பேய் படம் பார்க்க கூப்பிடுங்க.

ரஞ்சி வீரர் ராஜேஷ் பனிக் (40), திரிபுராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். U19 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர், 2002 முதல் திரிபுரா அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வந்தார். மேலும் , U-15 இந்திய அணியில் இர்பான் பதான் மற்றும் அம்பத்தி ராயுடு உடன் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அவரின் திடீர் மறைவுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக IT விங் பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதில், ஒவ்வொரு பூத்துக்கும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து விட்டனரா, ஓட்டு போட வரும் நபர் அந்த பகுதியை சேர்ந்தவர் தானா என்பதை ஆய்வு செய்யவார்களாம்.
Sorry, no posts matched your criteria.