India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் தொழில், வர்த்தகம், மருத்துவ ரீதியாக வந்த பாகிஸ்தானியர்களின் விபரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடந்து கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருதரப்பு தொடர் நடத்தணும் என தொடர்ந்து கோரிக்கைகள் இருந்து வந்தன. இந்த தொடரை நடத்துவது குறித்தான பேச்சுவார்த்தைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வந்தன. இந்த சூழலில்தான் பஹல்காம் சம்பவம் இந்தியர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து, இனி பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர் கிடையாது என BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாறுவேஷத்தில் வரும் சுந்தர்.சி, என்ன செய்கிறார் என்பதே கதை. ப்ளஸ்: வடிவேலுவின் காமெடிதான் மேஜர் ப்ளஸ் பாய்ண்ட். இயக்குநர், நடிகர் என முத்திரை பதித்துள்ளார் சுந்தர்.சி. தனக்கே உரித்தான பாணியில் பக்கா கமர்சியல் படத்தை கொடுத்து அசத்தியுள்ளார். ஒளிப்பதிவு, பாடல்கள் படத்திற்கு பக்கபலம். பல்ப்ஸ்: லாஜிக் மீறல், கொஞ்சம் போரான பிளாஷ்பேக். Rating: 2.5/5
ரேஷன் கடைகளில் கட்டுநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கிராமங்களில் 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து பொருள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
மகளை தந்தை, உறவினர்கள் ரேப் செய்ததை மறைத்த தாய் மீது பதிவான போக்சோ வழக்கை டெல்லி HC ரத்து செய்தது. 10 வயது சிறுமி, பலமுறை 2023-ல் ரேப் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசிடம் முன்கூட்டி தகவல் தெரிவிக்காததை சுட்டிக்காட்டி, விசாரணை நீதிமன்றத்தால் தாய் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வழக்கை HC ரத்து செய்தது.
ஜெயிலர் 2 படம் இப்போதே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ரஜினி மட்டுமே தற்போது வரை நடிப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது ஒரு நியூஸ் படுவைரலாகி வருகிறது. படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. யோசிச்சி பாருங்க ரஜினி- சிவராஜ்குமார்- மோகன்லாலுக்கு எதிராக பகத்… எப்படி இருக்கும்?
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளது. அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, மேலிட உத்தரவுக்காக 130 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர். மேலும், Hizbul Mujahideen தீவிரவாதிகள் 60 பேரும், Jaish-e-Mohammed மற்றும் Lashkar-e-Taiba தீவிரவாதிகள் 17 பேரும், தற்போது காஷ்மீரில் ஆக்டிவாக உள்ளதாகவும் உளவுத் தகவல் வந்துள்ளது.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை முடித்து கொடுத்துவிட்டு ரேஸ் களத்திற்குச் சென்று அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் அஜித்குமார், திடீரென சென்னை திரும்பியுள்ளார். காரணம், இன்று அஜித்குமார் – ஷாலினி தம்பதிக்கு 25-வது திருமண நாளாம். அமர்க்களம் படத்தின்போது உருவான காதல் பயணம் 2000-ம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..
யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, கிண்டி ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. கேடர்களுக்கு சால்வை அணிவித்த அவர், கம்பராமாயணம் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும், புத்தகம் வாசித்துக்கொண்டே பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என PM மோடி எச்சரித்துள்ளார். பிஹாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கும் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.