India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தானும் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தியர்களுக்கான சார்க் விசாவை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேபோல் வாகா எல்லையை மூடுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
சிந்து நதிநீர் நிறுத்தினால், எங்களது முழு பலத்தையும் காட்டுவோம்; இது போராக கருதப்படும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. இந்நிலையில், எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஏவுகணைகளை தயார் நிலையில் இருக்கும் சூழலில், தற்போது இராணுவமும் குவிக்கப்பட்டதால், போர் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாக். நடிகர் ஃபவாத் கான் – வாணி கபூர் நடித்துள்ள ‘அபிர் குலால்’ படத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளன. வரும் மே 9-ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பாலிவுட் படங்களில் பாக். நடிகர்களை நடிக்க வைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பச்சை முட்டையால் தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில், இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என மயோனைஸ் விரும்பிகள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், வீட்டிலேயே தயாரித்த அயோலி (Aioli), கிரீக் யோகர்ட், முந்திரி கிரீம், அவகேடோ, புளிப்பு கிரீம் (Sour Cream), டோஃபு (Tofu), ஹும்மஸ் (Hummus) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
இந்தியா உடனான அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. இந்தியா அதிரடி ஆட்டத்தை பார்த்து மிரண்டுபோய், சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியா உடனான அனைத்துவிதமான வர்த்தகத்தையும் நிறுத்துவதாக முடிவெடுத்துள்ள பாகிஸ்தான், சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை நாடவும் திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. இந்நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான், சிந்து நதி நீரின் ஒவ்வொரு சொட்டு நீரும் பாகிஸ்தானுக்குதான் என்று தெரிவித்துள்ளது. மேலும், ராணுவம் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ள அந்நாட்டு அரசு, பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடையும் விதித்துள்ளது.
பாக். சேர்ந்தவர்களுக்கு எந்தவித விசாவும் வழங்கப்படமாட்டாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு அமலுக்கு வந்தது. ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசாக்கள் வரும் 27, மருத்துவ விசாக்கள் 29-ம் தேதி முதல் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேறவும், தற்போது பாக்.-ல் உள்ள இந்தியர்கள் உடனே நாடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தியது. ஐஎன்எஸ் சூரத் (Destroyer) கப்பல் மூலம் கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கொடூர தாக்குதல் மூலம் இந்தியாவை சீண்டுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் மெசேஜ். இதனால், எந்த நேரத்திலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை. இதுதொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு முடிந்து தற்போது மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில் கல்லூரிகள் திறப்புக்கான தேதியை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.