India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை பிஹார் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு PM மோடி பயன்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். தாக்குதல் நடந்த இடத்திற்கு செல்லாமல் பிஹார் தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி சென்றது அதிர்ச்சியளிப்பதாகவும், அது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார். மேலும், காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிட்டதாக அமித் ஷா கூறிய பிறகுதான் இக்கொடூர நிகழ்வு நடந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
IPL போல பாகிஸ்தானில் PSL நடைபெற்று வருகிறது. நடப்பு சீசன் PSL கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்தியாவில் ஃபேன்கோட் இணையதளத்தின் வழியாக PSL-ஐ இந்தியாவில் பார்க்கும் வசதி உள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியாவில் PSL ஒளிபரப்பப்படாது. செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மற்றவர்களுடன் நானும் கல்மா சொன்னதால் என்னுடைய குடும்பம் உயிர் பிழைத்தது’ என பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய அசாம் பல்கலை பேராசிரியர் தேபாசிஷ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். கல்மா என்பது அல்லாஹ் ஒருவரே கடவுள் என்றும், முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் முழுமையான நம்பிக்கை கொள்வதாகும். இந்த கல்மாவில் மொத்தம் 6 வகைகள் உள்ளன.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இருநாடுகளும் எல்லைகளில் படைகளை குவித்தும், ஏவுகணைகளை சோதனை செய்தும் வருகின்றன. சர்வதேச ஒப்பந்தங்கள், வர்த்தகங்களை ரத்து செய்துள்ளன. மறுபுறம், குடியரசுத் தலைவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்ததும் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்.-ஐ எப்படி பழிவாங்குவது என்பது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
1971 போரை நிறுத்தும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16202618>>சிம்லா ஒப்பந்தம்<<>> போடப்பட்டது. இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதே சிம்லா ஒப்பந்தம். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தானின் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடவுளே ஆனாலும், பொது வாழ்வில் இருந்தால் அவரும் விமர்சிக்கப்படுவார் என ARR தெரிவித்துள்ளார். விவாகரத்திற்கு பிறகு, தனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக பேசினால், அவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்பேன், அவர்களை நல்வழிப்படுத்த பிரார்த்திப்பேன் எனவும் ARR தெரிவித்துள்ளார். அனைவருக்கும் தாய், சகோதரி, மனைவி இருப்பதால், மற்றவர்களைப் பற்றி அநாவசியமாக பேச வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் அவருக்கு விலக்களித்துள்ளது. தனக்கெதிராக முன்னாள் MP கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் இபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிடியில் இந்திய வீரர் சிக்கிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த வீரர் பி.கே.சிங்,
தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த பாக்., ராணுவம் சிறையில் அடைத்துள்ளது. அவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிநாட்டு தூதர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ள பாகிஸ்தான் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்ட உள்ளது. மேலும் இந்தியாவின் முடிவிற்கு மற்ற நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைக்க உள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பான நிலவரத்தை குடியரசுத் தலைவரிடம் அமித்ஷா எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது ஜெய்சங்கரும் உடன் இருந்தார். வெளியுறவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.