news

News April 24, 2025

அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிறிஸ் கெயிலா?

image

சச்சினின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சை தவிர்த்து பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என யுவராஜின் தந்தை யோக்ராஜ் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் அர்ஜுனுக்கு பயிற்சி அளித்தால் அவர் அடுத்த கிறிஸ் கெயிலாக உருவெடுப்பார் என யோக்ராஜ் கூறியுள்ளார். சச்சினுக்கும் யுவராஜ் நெருக்கமாக உள்ளதால் 3 மாதங்கள் அர்ஜுனுக்கு யுவராஜ் பயிற்சி அளிக்கலாம் எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

இந்தியாவிற்கு துணை நிற்போம்: இஸ்ரேல் PM மீண்டும் உறுதி

image

PM மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய இஸ்ரேல் PM நெதன்யாகு பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். இந்தியாவிற்கு எப்போதும் துணை நிற்போம் என நெதன்யாகு மோடியிடம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி காட்டுமிராண்டி தனமாக நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் விரிவாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

ரஜினி கதையில் சூர்யாவுக்காக செய்த மாற்றம்

image

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ரெட்ரோ’ கதையை உருவாக்கியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முதலில் இந்த கதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையாக இருந்ததாகவும், ஆனால், சூர்யா நடிப்பதாக மாறியதால், அக்கதையில் காதலை கலந்து தற்போதைய ‘ரெட்ரோ’-ஐ உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் மே 1-ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

News April 24, 2025

இந்தியா vs பாக். யார் வலிமை?

image

இந்தியா- பாக். இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், இருநாட்டு ராணுவ வலிமையை தெரிந்து கொள்ளலாம். *ராணுவ வீரர்கள்: 14,55,550 (இந்தியா), 6,54,000 (பாக்.) *அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள்: 293 (இந்தியா), 121 (பாக்.) *போர் விமானங்கள்: 2,229 (இந்தியா), 1,399 (பாக்.) *துணை ராணுவப்படை வீரர்கள்: 25,27,000 (இந்தியா), 5,00,000 (பாக்.) *உலகில் வலிமையான ராணுவம்: இந்தியா 4-வது இடம், பாக். 12-வது இடம்.

News April 24, 2025

காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: அம்பானி

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை ஹாஸ்பிடலில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அம்பானி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ரிலையன்ஸ் குடும்பம் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 24, 2025

தாக்குதல் பின்னணியில் மோடி, அமித் ஷா: அசாம் MLA புகார்

image

பஹல்காம் தாக்குதல் பின்னணியில் மோடி அரசு இருப்பதாக அசாம் MLA அமினுல் இஸ்லாம் குற்றஞ்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலில் மத்திய அரசின் பங்கு இருப்பதாக தான் நம்புவதாகவும், அதனால்தான் 2019 மக்களவை தேர்தலில் பாஜகவால் வெல்ல முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல்தான், தற்போதைய பஹல்காம் தாக்குதல் பின்னணியிலும் மோடி, அமித்ஷா இருப்பதாகவும், உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News April 24, 2025

பள்ளியை விட கல்லூரிகளுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறை

image

இறுதித்தேர்வு இன்றுடன் முடிந்த நிலையில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரையும், கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 16-ம் தேதி வரையும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளி மாணவர்களை விட, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாள்கள் கூடுதல் விடுமுறையாகும். எனவே, வெளியூர் மற்றும் சுற்றுலா செல்வோர் இப்போதே பயணத்திற்கான திட்டத்தை தயார் செய்யுங்கள்.

News April 24, 2025

IPL:ராஜஸ்தான் அணி பௌலிங்

image

புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணி 7-வதில் உள்ள ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றுள்ள ராஜஸ்தான் இன்றைய போட்டியில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை 100% இழந்துவிடும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் RCB புள்ளிப்பட்டியலில் முதல் அல்லது இரண்டாம் இடம் செல்லலாம். உங்க சப்போர்ட் யாருக்கு?

News April 24, 2025

மன்னிப்பு கேட்ட டாம் சாக்கோ.. அடுத்த ஆக்‌ஷன்?

image

‘என்னுடைய பேசும் பாணியே அப்படித்தான், எந்த உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை’ என நடிகர் சங்கத்தில் ஷைன் டாம் சாக்கோ கூறியுள்ளார். தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக நடிகை வின்சி அலேசியஸ் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், சாக்கோ மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட டாம், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 24, 2025

ஆடுகளத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்

image

ஸ்காட்லாந்தில் பிரபல கால்பந்து வீரர் பிரையன் மார்கன் (35), காலமானார். ஆடுகளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட, ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல், அவரின் உயிர் பிரிந்தது. கடந்த ஆண்டு லீக் ஃபைனலில், அவரின் Sauchie Juniors அணிக்காக கோல் அடித்து கோப்பையை வென்று கொடுத்த மார்கனின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!