India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தி அதிரடி காட்டிய இந்தியாவின் நடவடிக்கையை, போராக பார்ப்பதாக பாகிஸ்தானும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளுக்கு முழு ஆதரவை அளித்துள்ளன. இதனால், இன்று இரவே கூட இந்தியா தாக்குதலை தொடங்கலாம் என Geopolitical கருத்தாளர்கள் சிலர் கணிக்கின்றனர்.
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால், 2 வழிகளில் தாக்குதல் நடத்தலாம் என ராணுவ நிபுணர்கள் கணிக்கின்றனர். 1)எல்லையை (LOC) கடந்து தாக்குவது: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பாக்., ஆக்கிரமித்துள்ள POK காஷ்மீரை கைப்பற்றலாம். இதன்மூலம் காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் (சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர்த்து). 2) நவீன ஏவுகணைகள் மூலம் துல்லிய தாக்குதல். (பார்க்க பகுதி-2)
2-வது யுத்தியான ஏவுகணை தாக்குதல் நடத்தப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானிடம் ஏவுகணை அழிப்பு தளவாடங்கள் போதிய அளவில் இல்லாததும், இந்தியாவிடம் அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணைகள் இருப்பதும் தான் இதற்கு காரணம். அதற்கு ஏற்றார் போல், இந்தியா இன்று ஏவுகணை சோதனையை செய்துள்ளது. இத்தாக்குதலில் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு ED சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதன் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். பில் சால்ட் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ஆனால் பொறுப்பாக ஆடிய விராட் கோலி 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவருக்கு துணையாக படிக்கல் அதிரடி காட்ட ரன் வேகமாக ஏறியது. 14 ஓவர்கள் முடிவில் 134/1 ரன்களை RCB சேர்த்துள்ளது.
ஜோதிட சாஸ்திரப் படி, குரு பகவான் வரும் மே 14-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். அதனால் பின்னர் நன்மைகள் பெறக்கூடிய ராசிகள்: *கும்பம்: தொழில்ரீதியான வெற்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவு *தனுசு: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு, நல்ல செய்தி தேடி வரும், ஆன்மிகத்தில் ஆர்வம் *மேஷம்: மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும், நிலம் தொடர்பான தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவரும், அதிமுக நிர்வாகியுமான சந்திரசேகர் காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு அதிமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகளை காக்க முயன்ற உள்ளூர்வாசி <<16192997>>சையது<<>> சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், தனது மகன் உயிரை தியாகம் செய்ததால்தான் தான் தற்போது உயிரோடு இருப்பதாக அவரது தந்தை ஹைதர் ஷா பெருமையுடன் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மகனின் சடலத்தை பார்த்ததும் தானும் இறந்து போயிருப்பேன் எனவும், ஒரு சிலரை காப்பாற்றிய தனது மகனின் வீரம் குறித்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மகிழ்ச்சியின் அடையாளமான சிரித்த முகத்துடன் நாளை வானம் தோன்றும். நாளை அதிகாலை 5.30 மணிக்கு வியாழனும், சனியும் நிலவுக்கு அருகில் வருவதால் இந்த நிகழ்வு நடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இரு கோள்களும் இரு கண்கள் போல் காட்சி தர பிறை நிலா சிரித்தவாறு இருக்கும். 1 மணி நேரம் நீடிக்கும் இந்நிகழ்வை முன் வெறும் கண்களாலே பார்க்கலாம் என்றாலும், டெலஸ்கோப், பைனாகுலர்களில் பார்த்தால் இன்னும் தெளிவாக தெரியும்.
தீவிரவாத தாக்குதலுக்கு ஒரு சில பிரபலங்கள் கண்டனம் தெரிவிக்கவே யோசிக்கும் நிலையில், தெலுங்கு நடிகை அனன்யாவின் செயல்பாடு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த மதுசூதனன் உடலுக்கு நடிகை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.