news

News December 27, 2025

15 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு கட்டிய இங்கிலாந்து

image

ஆஷஸ் தொடரின் முதல் 3 டெஸ்ட்டுகளை தோல்வியடைந்த இங்கிலாந்து, 4-வது போட்டியில் <<18683771>>போராடி வெற்றி<<>> பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸி., மண்ணில் 15 ஆண்டுகளாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அங்கு இதுவரை 18 போட்டிகளில் இங்கி., தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.

News December 27, 2025

மகளிர் உரிமைத்தொகை இனி ₹2,500.. புதுவை CM அறிவித்தார்

image

புதுச்சேரியில் மகளிர் உரிமைத்தொகை ₹1,000-ல் இருந்து ₹2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுவையில் நடைபெற்ற வீரதீர குழந்தைகள் தினவிழாவில் பேசிய அவர், இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். TN-ல் உரிமைத்தொகையாக ₹1,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இது உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 27, 2025

கடலுக்கு அடியில் மர்ம உலகம்!

image

கிரீன்லாந்து கடலின் சுமார் 3,640 மீட்டர் ஆழத்தில், மனித கண்கள் காணாத ஒரு புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘மொல்லாய் ரிட்ஜ்’ ஆழ்கடல் பகுதியில், பூமியின் உட்புறத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு உறைந்து, பனிக்கட்டிகளாக மாறியுள்ளன. சூரிய ஒளியே படாத இந்த பகுதியில், மீத்தேன் வாயுவையே உணவாக கொண்டு வாழும் விசித்திர உயிரினங்கள் உயிர் சங்கிலியை உருவாக்கி, தனி உலகமாக காட்சியளிக்கிறது.

News December 27, 2025

நேருவை தொடர்ந்து துரைமுருகனுக்கு புதிய சிக்கல்!

image

TN-ல் மணல் ஒரு யூனிட் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் ₹4,700 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக DVAC, DGP-க்கு ADMK சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் மீது உடனடியாக வழக்குப்பதிந்து விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே <<18146062>>அமைச்சர் KN நேருவின்<<>> துறையில் பணி நியமன முறைகேடு வாயிலாக ₹1,020 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக ED குற்றம்சாட்டியுள்ளது.

News December 27, 2025

₹18,000 சம்பளம்.. 22,000 வேலைவாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT.

News December 27, 2025

அமெரிக்காவில் ஒரேநாளில் 1,800 விமானங்கள் ரத்து

image

அமெரிக்காவில் வழக்கத்தை விட கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியூயார்க், சிகாகோ உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து 1,802 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்த நிலையில், 22,349 விமானங்கள் புறப்பாடும் தாமதமாகியுள்ளன. கடைசி நேரத்தில் விமானம் ரத்தானதால், இந்தியா வரவிருந்த பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News December 27, 2025

தலைநகரம் இல்லாத நாடு எது தெரியுமா?

image

பொதுவாக ஒருநாடு சீராக இயங்குவதற்கு தலைநகர் என்பது அவசியம். அங்குதான் நாட்டின் முக்கியமான அரசு அலுவலகங்கள் செயல்படும். ஆனால் தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நவ்ரு என்ற நாட்டிற்கு தலைநகரே கிடையாது. காரணம் அந்த தீவு நாட்டின் மொத்த பரப்பரளவே 21sq km., தான். உலகின் 3-வது சிறிய நாடான நவ்ருவில் மொத்த மக்கள்தொகை 12 ஆயிரம் மட்டுமே. எனவே தான் அங்கு தலைநகர் தேவையற்றது என அந்நாட்டு அரசு கருதுகிறது.

News December 27, 2025

RSS-க்கு எதிராக விஜய் வாய் திறந்தாரா? திருமா

image

கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதலை பற்றி விஜய் வாய் திறந்தாரா என திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யும் சீமானும் RSS, சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் செயல்படுகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தவெக ஒருபுறம் பெரியாரிய, திராவிட அரசியலை பேசுகிறோம் என்றும், நாதக தமிழ் தேசியம் பேசுகிறோம் என்றும் நாடகமாடுகிறார்கள். இதை TN மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பேசினார்.

News December 27, 2025

இந்தியர்களை அதிகமாக நாடு கடத்தியது இந்த நாடு தான்!

image

சட்டவிரோத குடியேற்றம், முறையான அனுமதியின்றி பணிபுரிதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல காரணங்களால் பிறநாடுகளில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். 2025-ல், 81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், முதலிடத்தில் சவுதி அரேபியாவும் (11,000 பேர்), 2-வது இடத்தில் USA-வும் (3,800 பேர்) உள்ளன.

News December 27, 2025

ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. புதிய அப்டேட்

image

அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரொக்கமும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2.20 கோடி ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாம். இதனால் விரைவில் பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!