news

News October 30, 2025

ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் டியூட்: திருமாவளவன்

image

‘Dude’ படம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசுகிறது என திருமாவளவன் ரிவ்யூ கூறியுள்ளார். தனக்கு துரோகம் இழைத்துவிட்டாள் என்று பழிவாங்க நினைக்காமல், அவள் விரும்புகிறவனோடு வாழட்டும் என்று அவளுக்காக போராடுவது புதிய அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தப் படம் அடுத்த தலைமுறைக்கான தவறான எடுத்துக்காட்டு என மோகன் ஜியும், கலாசார சீரழிவு என பேரரசும் கூறியிருந்தனர். நீங்க படம் பார்த்துட்டீங்களா?

News October 30, 2025

மூட்டு வலி நீங்க தினமும் இத பண்ணுங்க!

image

★இதய ஆரோக்கியம் மேம்பட்டு, மூட்டு வலிமை அதிகரிக்க ‘ஸ்குவாட்ஸ்’ செய்யுங்க ★செய்முறை: கால்களை தோள்பட்டை அகலத்தை விட சற்று அகற்றி வைத்து நிற்கவும். முதுகை நேராக வைத்து, தோப்புக்கரணம் போடுவது போல Chair position-ல் அமரவும். கைகள் முன்னால் நீட்டி வைத்திருப்பது அவசியம். குதிகால்களில் அழுத்தம் கொடுத்து மேலே எழவும் ★இவ்வாறு 2 செட்களாக ஆரம்பத்தில் 15- 20 வரை செய்யலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

News October 30, 2025

விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்

image

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், பசும்பொன்னில் அமைத்துள்ள தேவர் நினைவிடத்தில் இன்று CM ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.

News October 30, 2025

வீட்டிற்குள் கோலம் போடலாமா?

image

வீட்டின் வாசலுக்கு முன்னால் கோலம் போடுவது வழக்கம். லட்சுமி தேவியின் நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவேற்பதை முதன்மையான நோக்கமாக கொண்டு, கோலத்தில் ஓம், ஸ்வஸ்திக், லட்சுமி தேவியின் பாதங்கள் போன்றவை பயன்படுத்துவார்கள். வீட்டினுள் கோலம் போடுவதால், அவற்றை மிதிக்க வாய்ப்புள்ளது. இது மங்களகரமான ஆற்றலை மிதிப்பது போன்றது என்பதால், வீட்டினுள் கோலம் போட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

News October 30, 2025

2 மாதங்கள் ஓய்வில் ஷ்ரேயஸ்?

image

ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI போட்டியின்போது ஷ்ரேயஸுக்கு விலா எலும்பில் அடிபட்டது. இதனையடுத்து ICU-வில் சிகிச்சை பெற்ற அவர், ஹாஸ்பிடலிலேயே உள்ளார். அவரது உடலில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக BCCI தெரிவித்தது. இந்நிலையில், 2 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 மாதங்களும் ஷ்ரேயஸ் முழு ஓய்வில் இருக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. Get well soon..

News October 30, 2025

அதிமுகவுக்கு இதுதான் வாடிக்கை: சேகர்பாபு

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, எவையெல்லாம் தமிழகத்திற்கு உகந்ததாக இல்லையோ, அதையெல்லாம் வரவேற்பதுதான் அதிமுகவின் வாடிக்கையாக உள்ளது என விமர்சித்தார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை எப்போதும் இகழும் பணியிலேயே அதிமுக, பாஜக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News October 30, 2025

திருப்பதி சால்வை கொள்முதலில் முறைகேடா?

image

திருப்பதி கோயிலுக்கு வரும் VVIP-களுக்கு சால்வை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த சால்வை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹400 மதிப்புள்ள சால்வையை ₹1,300-க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ₹50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த, கோயில் அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.

News October 30, 2025

விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

கரூர் துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், NDA-வில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார். இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது.

News October 30, 2025

விஜய்யை நெப்போலியன் எதிர்ப்பதற்கு காரணம் இதுவா?

image

‘போக்கிரி’ பட ஷூட்டிங்கில், விஜய்யை சந்திக்கச் சென்றுள்ளார் நெப்போலியன். அப்போது காத்திருக்க சொன்ன விஜய்யின் உதவியாளர்களை நெப்போலியன் திட்ட, கேரவனிலிருந்து வெளியே வந்த விஜய், அங்கிருந்த பலரது முன்னிலையிலேயே தனது உதவியாளருக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதனாலேயே நெப்போலியனுடனான நட்பு கசப்பாகியுள்ளது. இதை மனதில் வைத்தே, ஒரு Ex அரசியல்வாதியாக நெப்போலியன், விஜய்யை விமர்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 30, 2025

கவின் ஆணவக்கொலை: குற்றப்பத்திரிகை தாக்கல்

image

தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவக்கொலை தொடர்பான குற்றப்பத்திரிகையை CBCID தாக்கல் செய்துள்ளது. நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரிகை, 32 ஆவணங்கள், 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 3-வது முறையாக ஜாமின் கோரிய SI சரவணனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!