India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் <<15987205>>இன்று<<>> சவரனுக்கு ₹1,280 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், 60 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி(Reciprocal Tariff) விதித்ததை தொடர்ந்து சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், USA பொருளாதாரத்தில் மந்த நிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் லாபம் பார்க்க விற்பனை செய்ததன் எதிரொலியே விலை குறையக் காரணமாம்.
➥வீட்டிற்கென பட்ஜெட் போடும் போது, அதில் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் ➥சிறு சிறு செலவுகளை தினசரி செய்தாலும், அதை கணக்கிடுங்கள் ➥வெளியில் சாப்பிடாமல், வீட்டு உணவிற்கு முன்னுரிமை அளியுங்கள் ➥OTT தளங்களில் தேவையற்ற ஆட்டோமேடிக் பேமெண்ட் ஆப்ஷனை தவிருங்கள் ➥ஷாப்பிங்கின் போது, முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் ➥சேமிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
அதிமுக – தவெக கூட்டணி பேச்சு முறிவுக்கு பாமக முக்கிய காரணம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. 80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தரப்படும் என EPS தரப்பு கூறியதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருக்கிறார். பின்பு, PMKவும் கூட்டணியில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், வட மாவட்டங்களில் விஜயகாந்த் பார்முலாவை பின்பற்ற முடிவெடுத்துள்ள விஜய், பாமக கூட்டணிக்கு வந்தால், நாங்கள் வர மாட்டோம் என கூறிவிட்டாராம்.
மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழையும், சென்னையில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
மும்பை அணியின் கேப்டன் ரஹானேவுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவே, <<15968321>>ஜெய்ஸ்வால் <<>>அணி மாறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெளியாகும் செய்திகளின்படி, ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக, ஜெய்ஸ்வால் சரியாக விளையாடாததை தொடர்ந்து, அவரை கேப்டன் ரஹானே மற்றும் அணியின் கோச் சால்வி விமர்சித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஜெய்ஸ்வால், ரஹானேவின் ‘கிட்’ பேக்கை எட்டி உதைத்தார் என்றும் கூறப்படுகிறது.
பிரபல சீரியல் நடிகர் ஐயப்பன், கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வருவதில்லை என அவரது மனைவி பிந்தியா போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த 3 வருடமாக தன்னையும் குழந்தையையும் அவர் சரியாக கவனிப்பதில்லை என்றும், குடும்ப செலவுக்கு பணம் தராமல் அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஐயப்பன் கனா காணும் காலங்கள், தென்றல், கயல் போன்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தார்.
பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் இபிஎஸ் உள்பட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் இபிஎஸ் பேசுகையில், பேரவையில் மக்கள் பிரச்னைகளைப் பேச அனுமதியில்லை. 10 நாள்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சகித்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தங்க நகைக் கடன் புதிய விதிமுறை தொடர்பாக பதிலளிக்க RBI-க்கு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை வட்டியோடு அசல் தொகை செலுத்தி நகைகளைப் பெற்று, மறுநாள் <<15799668>>புதிதாக அடகு <<>>வைக்க முடியும் என ரிசர்வ் வங்கி(RBI) அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய நிதித்துறைச் செயலர், RBI மேலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
‘எம்புரான்’ படத்தில் முல்லைப் பெரியாறு குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்படுவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி சென்சாரில் கட் செய்யவில்லை எனவும் படம் வெளியான பிறகுதான் தெரியவந்தது என்றும் விளக்கம் அளித்தார். எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கேரளாவே அழியும் எனக் காட்சி இடம்பெற்றுள்ளதாக MLA வேல்முருகன் பேசிய நிலையில், விளக்கம் அளிக்கப்பட்டது.
மக்களவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ல் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி முடிவடைந்தது. மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.