India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்தன. நிஃப்டி இன்று 345 புள்ளிகளை இழந்து 22,904 புள்ளிகளிலும் சென்செக்ஸ் இன்று 930 புள்ளிகளை இழந்து 75,364 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக, Midcap & SmallCap பங்குகள் தலா 3% மதிப்பை இழந்தன. டிரம்ப் விதித்த வரியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு Y, Z என பல பிரிவுகளில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அந்த வரிசையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் விஜய்க்கு 8 – 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்.
தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு, Gut health ஆகியவற்றுக்கும், நமது மனநிலைக்கும் தொடர்புள்ளது. பழம், காய்கறிகளை குறைவாக சாப்பிடுவோருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக, கனடாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறி (அ) பழங்கள் இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல், உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும், பதற்றம் வரும் ஆபத்து 70% அதிகரிக்கிறது.
தமிழக பாஜக தலைவருக்கான தேர்தல் போட்டியில் தான் இல்லையென்று அறிவித்திருக்கும் அண்ணாமலை, டெல்லி அரசியலுக்கு போக மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அடுத்த தலைவருக்காக தான் யாரையும் கைகாட்டவில்லை என்றும் பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதிமுக குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லையென அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத் தலைவருக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று EPS கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியிருக்கிறார்.
கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகர் <<15987085>>தர்ஷன்<<>> கைதாகி இருக்கிறார். ஐகோர்ட் நீதிபதியின் மனைவி, மகன், மற்றும் மருமகள் ஆகியோரைத் தாக்கியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தகராறைத் தொடர்ந்து இருதரப்பும் புகார் அளித்திருந்தனர். அப்போது பேட்டியளித்த போது தர்ஷன் கண்ணீர் சிந்தி அழுத காட்சிகள் வைரலானது.
பிரதமர் மோடி வருகைக்காக மசூதி மினாரை மூடுவதுதான் திராவிட மாடலா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில்வே பாலத்தை திறக்க 6ம் தேதி பிரதமர் ராமேஸ்வரம் வருகிறார். இதனிடையே மசூதி, கலங்கரை விளக்குபோல உள்ளதாக கூறி காவல்துறை அதனை மூடியதற்கு சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மசூதியை மறைப்பது பாஜகவின் விருப்பமா? திமுகவின் முடிவா? என்றும் சீமான் வினவியுள்ளார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, ஏப்.10-ல் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியாக இருப்பதால், இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.