India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதில் கம்பங்கூழுக்கு முக்கிய பங்குண்டு. மேலும் அதில், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பலவகை வைட்டமின்கள் அடங்கியுள்ளன. செரிமான மண்டலத்திற்கு இது மிகவும் நல்லது. நீண்ட நேரம் பசியை அடக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கம்பங்கூழ் சிறந்த தேர்வாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் கூழ் உதவுகிறது. SHARE IT.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்தன. நிஃப்டி இன்று 345 புள்ளிகளை இழந்து 22,904 புள்ளிகளிலும் சென்செக்ஸ் இன்று 930 புள்ளிகளை இழந்து 75,364 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக, Midcap & SmallCap பங்குகள் தலா 3% மதிப்பை இழந்தன. டிரம்ப் விதித்த வரியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு Y, Z என பல பிரிவுகளில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அந்த வரிசையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் விஜய்க்கு 8 – 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்.
தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு, Gut health ஆகியவற்றுக்கும், நமது மனநிலைக்கும் தொடர்புள்ளது. பழம், காய்கறிகளை குறைவாக சாப்பிடுவோருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக, கனடாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறி (அ) பழங்கள் இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல், உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும், பதற்றம் வரும் ஆபத்து 70% அதிகரிக்கிறது.
தமிழக பாஜக தலைவருக்கான தேர்தல் போட்டியில் தான் இல்லையென்று அறிவித்திருக்கும் அண்ணாமலை, டெல்லி அரசியலுக்கு போக மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அடுத்த தலைவருக்காக தான் யாரையும் கைகாட்டவில்லை என்றும் பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதிமுக குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் தான் இல்லையென அண்ணாமலை தெரிவித்துள்ளார். மாநிலத் தலைவருக்கான தேடல் நடைபெற்று வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று EPS கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.