news

News April 4, 2025

கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்து 6 பேர் பலி

image

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நாந்தேட் பகுதியில் டிராக்டரில் 11 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்ததில், அதிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ₹2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.

News April 4, 2025

சோனியா காந்தியை சாடிய மக்களவை சபாநாயகர்

image

வக்ப் வாரிய மசோதா ஜனநாயகத்தை தகர்த்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில் முறையான விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு பின்னரே மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் மூத்த தலைவர் ஒருவர் விதிமுறைகளை பின்பற்றிவில்லை என பேசுவது துரதிஷ்டவசமானது எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

News April 4, 2025

Health Tips: கம்பங்கூழ் தரும் நன்மைகள்…!

image

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதில் கம்பங்கூழுக்கு முக்கிய பங்குண்டு. மேலும் அதில், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பலவகை வைட்டமின்கள் அடங்கியுள்ளன. செரிமான மண்டலத்திற்கு இது மிகவும் நல்லது. நீண்ட நேரம் பசியை அடக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கம்பங்கூழ் சிறந்த தேர்வாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் கூழ் உதவுகிறது. SHARE IT.

News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

News April 4, 2025

பங்குச்சந்தைகள் கடும் சரிவு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்தன. நிஃப்டி இன்று 345 புள்ளிகளை இழந்து 22,904 புள்ளிகளிலும் சென்செக்ஸ் இன்று 930 புள்ளிகளை இழந்து 75,364 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக, Midcap & SmallCap பங்குகள் தலா 3% மதிப்பை இழந்தன. டிரம்ப் விதித்த வரியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

News April 4, 2025

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு… இன்று முதல் அமலுக்கு வந்தது

image

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு Y, Z என பல பிரிவுகளில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அந்த வரிசையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் விஜய்க்கு 8 – 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்.

News April 4, 2025

8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News April 4, 2025

8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

News April 4, 2025

பதற்றமா… இது காரணமாக இருக்கலாம்!

image

உணவு, Gut health ஆகியவற்றுக்கும், நமது மனநிலைக்கும் தொடர்புள்ளது. பழம், காய்கறிகளை குறைவாக சாப்பிடுவோருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக, கனடாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவில் ஒரு நாளைக்கு குறைந்தது 3 காய்கறி (அ) பழங்கள் இல்லையெனில், அவருக்கு பதற்றம் ஏற்படும் வாய்ப்பு 24% அதிகரிக்கிறது. அதேபோல், உடல்கொழுப்பின் அளவு 36%-க்கு அதிகமானாலும், பதற்றம் வரும் ஆபத்து 70% அதிகரிக்கிறது.

error: Content is protected !!