news

News April 25, 2025

டிராகன் பட பாணியில் மோசடி.. கடைசியில் ட்விஸ்ட்!

image

டிராகன் படத்தில் வருவதுபோல் பெங்களூருவில் ஆள்மாறாட்டம் செய்து பணியில் சேர்ந்தவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவன ஆன்லைன் இன்டர்வியூவில் நண்பரின் உதவியுடன் பாஸ் ஆன பிரசாந்த்(20), பணிக்கு சேர்ந்தபோது சிக்கிக் கொண்டுள்ளார். அவரது திறன், பேச்சில் சில மாற்றங்கள் தென்பட்டதால் மாட்டிக் கொண்ட அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரீல் ‘டிராகனுக்கு’ வந்த சோதனை!

News April 25, 2025

பஹல்காம் தீவிரவாதிகளில் 15 வயது சிறுவர்கள்!

image

கையில் துப்பாக்கிகளுடன் வந்த 2 சிறுவர்களே தங்களது தந்தையை கொன்றதாக, தீவிரவாத தாக்குதலில் பலியான ம.பி.யைச் சேர்ந்த சுஷிலின் மகன் ஆஸ்டன் தெரிவித்துள்ளார். 15 வயதான அந்த சிறுவர்கள், தனது தந்தையிடம் ‘கல்மா’ ஓதச் சொன்னதாகவும், அவர் கிறிஸ்டியன் என சொன்னதும், சுட்டுக் கொன்றதாகவும் ஆஸ்டன் கூறியுள்ளார். மேலும், முஸ்லிமா? என கேட்டுவிட்டே அங்கிருந்தவர்களை சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 25, 2025

ஏப்ரல் 25: வரலாற்றில் இன்று

image

▶ உலக மலேரியா நாள். ▶ 1874 – ரேடியோவை கண்டுபிடித்த இயற்பியலாளர் மார்க்கோனி பிறந்த நாள். ▶ 1906 – எழுத்தாளர் புதுமைப்பித்தன் பிறந்த நாள். ▶ 1912 – தமிழ் அறிஞர் மு. வரதராசன் பிறந்த நாள். ▶ 1644 – சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென் தற்கொலை செய்து கொண்டார். ▶ 2015 – நேபாளத்தில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.

News April 25, 2025

அப்பாடா.. சொந்த மண்ணுல ஜெயிச்சிட்டோம்!

image

இதுதான் RCB ரசிகர்களோட தற்போதைய ரியாக்‌ஷன். வெளி மைதானங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற அந்த அணிக்கு, சொந்த மைதானமான பெங்களூருவில் வெற்றி கிடைக்காமல் இருந்தது. அந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறது RR அணி. சொந்த மண்ணில் முதல் 3 போட்டிகளில் தோற்ற RCB, நேற்றைய போட்டியில் வாகை சூடியுள்ளது. ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் விளையாடிய RCB, 6 போட்டிகளில் வென்று புள்ளிப் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.

News April 25, 2025

போருக்கு தயாராகும் பாகிஸ்தான்!

image

இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாக். ராணுவம் அதிகரித்து வருகிறது. பதுங்கு குழியில் இருந்து மட்டுமே கண்காணிக்கவும், ராவல்பிண்டியில் உள்ள 10 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர உஷார் நிலையில் இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய எல்லை பகுதி மட்டுமில்லாமல், சர்வதேச எல்லைகளான சியால்கோட், குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்து வருகிறது.

News April 25, 2025

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

image

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.

News April 25, 2025

பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய RR?

image

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் கட்டாயமாக 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால், RR அணி 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், எஞ்சிய 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஒருவேளை மற்ற அணிகளின் ரன்ரேட் குறைவாக இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுவும் ரொம்ப ரொம்ப கஷ்டமே.

News April 25, 2025

அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

image

பஹல்காம் தாக்குதல் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

News April 25, 2025

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர்

image

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் காலமான போப் பிரான்சிஸ் உடல் நாளை (ஏப்.26) இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், பங்கேற்க வாடிகன் நகருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செல்லவுள்ளார் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 317 ▶குறள்: எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. ▶பொருள்: எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

error: Content is protected !!