news

News April 4, 2025

மறைந்தார் ‘அவர்கள்’ ரவிக்குமார்!

image

தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரவிக்குமார், இன்று சென்னையில் காலமானார். கமல் – ரஜினி நடித்த ‘அவர்கள்’ படத்தில், இவரின் கேரக்டர் ரசிகர்களை ஈர்க்க, அதன்பின் ‘அவர்கள்’ ரவிக்குமார் என்பதே இவரின் பெயரானது. யூத், ரமணா, லேசா லேசா, விசில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP!

News April 4, 2025

உங்களுக்கு பிடிக்காதது எது?

image

அன்றாட வாழ்க்கையில், நாம் எத்தனையோ பேருடன் பழகுகிறோம். ஆனால், எல்லோருடனும் நம்மால் நட்புறவுடன் இருக்க முடியுமா? கஷ்டம் தான். அப்படியே இருந்தாலும், சிலரே நமக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு சிலரை, நமக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அவர்களிடம் உள்ள ஏதோ ஒரு அம்சம் அதற்கு காரணமாக இருக்கலாம். அப்படி ஒருவரிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் என்றால், எதை கூறுவீர்கள்?

News April 4, 2025

கச்சத்தீவு கைவிட்டுப் போக காரணமே திமுகதான்: விஜய்

image

கச்சத்தீவு மீண்டும் நமக்கு சொந்தமாவது மட்டும்தான் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே பரிகாரம், தீர்வு என விஜய் தெரிவித்துள்ளார். திமுகவின் ஆட்சி அதிகார பசியால் கச்சத்தீவு கைவிட்டு போனதாக குற்றம் சாட்டிய அவர், நிரந்தர தீர்வு எட்டும்வரை 99 வருட குத்தகையாக கச்சத்தீவை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை செல்லும் PM மோடி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 4, 2025

ஈரோடு மாவட்டத்திற்கு விடுமுறை

image

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, வரும் 8ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், வரும் 26ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.

News April 4, 2025

ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

image

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

News April 4, 2025

கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்து 6 பேர் பலி

image

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நாந்தேட் பகுதியில் டிராக்டரில் 11 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்ததில், அதிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ₹2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.

News April 4, 2025

சோனியா காந்தியை சாடிய மக்களவை சபாநாயகர்

image

வக்ப் வாரிய மசோதா ஜனநாயகத்தை தகர்த்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில் முறையான விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு பின்னரே மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் மூத்த தலைவர் ஒருவர் விதிமுறைகளை பின்பற்றிவில்லை என பேசுவது துரதிஷ்டவசமானது எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

News April 4, 2025

Health Tips: கம்பங்கூழ் தரும் நன்மைகள்…!

image

கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதில் கம்பங்கூழுக்கு முக்கிய பங்குண்டு. மேலும் அதில், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பலவகை வைட்டமின்கள் அடங்கியுள்ளன. செரிமான மண்டலத்திற்கு இது மிகவும் நல்லது. நீண்ட நேரம் பசியை அடக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு கம்பங்கூழ் சிறந்த தேர்வாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் கூழ் உதவுகிறது. SHARE IT.

News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

News April 4, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், தி.மலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புண்டு.

error: Content is protected !!