India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெளிப்படைத்தன்மை கேட்டு போராடிய MP-க்களை கைது செய்தது ஜனநாயகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வதற்கு சமம் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கைதை கண்டித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வாக்களிப்பின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகும் போது, அது வெறும் அரசியல் சச்சரவு அல்ல, சுதந்திரம், கண்ணியம், நீதியின்பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் தார்மீக நெருக்கடி என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரவு விருந்தளித்தார். இதில், சரத் பவார், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகளும், கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
*1948 – கர்நாடகா முதல்வர் சித்தராமையா பிறந்தநாள்.
*1979 – தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நாள்.
*1990 – அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.
* நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
*பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தேன், ஆனால் ‘விட்டுவிடாதே. இப்போது கஷ்டப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஒரு சாம்பியனாக வாழ்’ என கூறிக்கொண்டேன் .
* நான் எங்கே போகிறேன் என தெரியும், நான் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி நான் இருக்க வேண்டியதில்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என்று சுதந்திரமாக இருக்கிறேன்.
ISPL என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்ற போது, IPL அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2008-ம் ஆண்டு IPL அணி வாங்குவதற்கு அழைப்பு வந்தது என்றும், ஆனால் அதனை அந்த சமயத்தில் ஏற்கவில்லை என்றார். அதை நினைத்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை தரிசனம் செய்வதற்காக 40 பக்தர்களுடன் வந்த மினி சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பெண்கள் உயிரிழந்த நிலையில், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹4 லட்சம் நிவாரணம் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 425 ▶குறள்: உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. ▶ பொருள்: உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டுமென அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், 60 KM நீளமுள்ள இச்சாலையை ஏலம் எடுக்கும் நிறுவனம் 25 வருடங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெறுமென குறிப்பிட்டுள்ளார். மக்களின் வரிப்பணத்தில் கட்டிய சாலையை தனியாரிடம் ஒப்படைப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.
துருவ் விக்ரமின் 4-ம் படத்துக்கான பூஜை அண்மையில் நடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கேதிகா சர்மா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அனுபமா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.