India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தினசரி பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தம் போதாதென்று வேலை போய்விடுமோ என்ற அச்சம் ஒருவரின் குணநலத்தை (ஆளுமையை) பெரிதும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலை போய்விடும் என்ற சூழ்நிலை நீண்டகால அளவில் ஒருவரின் மனச்சமநிலை பாதிக்கிறது, முரண்டுபிடிக்கும் மனநிலை ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உங்கள் அனுபவம் என்ன? இதை எப்படி சமாளிப்பது? கமென்ட்டில் சொல்லுங்கள்
தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என சீமான் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ‘கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட் கேட்பது எங்களுக்கு வேண்டாம். கூட்டணியில் எலியாய் இருப்பதைவிட சிங்கமாய் தனித்து இருந்து கர்ஜித்து சாவது மேல். நான் சிங்கமும் இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
EPFO பணத்தை முன்கூட்டியே எடுக்கும் நடைமுறையில் இருந்த 2 சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு, பணம் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கணக்கில் இருந்து பணம் எடுக்கும் செயல்முறையின்போது, இனி காசோலை பிரதியோ வங்கி பாஸ்புக்கின் நகலையோ பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே போல், வங்கிக் கணக்கு விவரங்களை UAN உடன் இணைப்பதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய ஒரு வர்த்தக போரையே தொடங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவரது புதிய வரிவிதிப்பு அமலான முதல் நாளே, உலக பணக்காரர்கள் விழிபிதுங்கியுள்ளனர். இன்று மட்டும் ₹17.8 லட்சம் கோடியை அவர்கள் இழந்துள்ளனர். இதில், முக்கியமாக மார்க் ஜுக்கர்பெர்க் ₹1.53 லட்சம் கோடியும், ஜெஃப் பெசோஸ் ₹1.36 லட்சம் கோடியையும் எலான் மஸ்க் ₹94 ஆயிரம் கோடியையும் இழந்துள்ளனர். இன்னும் என்னென்ன நடக்குமோ?
ஓசூரில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த 3 வயது குழந்தையை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்துள்ள அக்குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தும் தெருநாய்கள் தொல்லையில் இருந்து முதல்வர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
செல்போனால் சிறுவர்கள் தவறான வழியில் தடுமாறும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அப்படியாக, இன்ஸ்டாவில் 32 போலி கணக்குகளை தொடங்கிய 9-ம் வகுப்பு மாணவன், சக மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கடப்பாவைச் சேர்ந்த அந்த சிறுவன், உடன் படிக்கும் மாணவியின் அந்தரங்க படத்தை வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளான். இதுதொடர்பாக போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
திருப்போரூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் (ஹரிதாஸ், லியோ டேனியல், சுகந்தி) உயிரிழந்ததற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
BSNL நிறுவனத்திற்கு ₹61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் BSNL விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ஜி சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்நிறுவனம் பெரும் வாடிக்கையாளர் இழப்பை சந்தித்தது. இருப்பினும், 5G சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் BSNL ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் என நம்பலாம்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34% வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திற்கும் அதிரடியாக வரி விதித்திருக்கிறார் அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப். இதனால், உலக பொருளாதாரமே திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில், பதிலுக்கு பதில் சீனாவும் வரி விதித்துள்ளதால், மறைமுக வர்த்தகப் போர் தொடங்கியிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள இணைப்பு கல்லூரிகளுக்கான அரியர் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியிருக்கின்றன. மாணவர்கள் <
Sorry, no posts matched your criteria.