India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குக்கி -மெய்தி இன பிரதிநிதிகள் இன்று டெல்லியில் நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். இரு தரப்பினரிடையே மத்தியஸ்தம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த பல கட்ட முயற்சிகளின் விளைவாக இன்றைய பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2023ல் தொடங்கிய கலவரத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்.13 முதல் அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
MIக்கு எதிரான நேற்றைய போட்டியில், LSG பவுலர் திக்வேஷ் சிங் ரதிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்களை வீசி 21 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை அவர் கைப்பற்றினார். குறிப்பாக MI வேகமாக ரன்களை எடுத்துக் கொண்டிருந்ததை கட்டுப்படுத்தி, 24 பந்துகளுக்கு 46 ரன்கள் என அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நமன் திர்ரை அவர் அவுட்டாக்கினார். இதனால், 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றது.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் மசோதா 2025-க்கு குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தின் படி, ஒருவர் தெரிந்தே போலி பாஸ்போர்ட், விசாவை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைவது, தங்குவது, வெளியேறுவது கண்டறியப்பட்டால் இனி 7 ஆண்டு சிறை, ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விமானங்கள், கப்பல்கள் வெளிநாட்டு பயணிகளின் தகவல்களை அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.
பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் மாதம் ₹8.30 லட்சம் சம்பளம் வாங்கியும், செலவுகளுக்கு போதவில்லை என புலம்பி தள்ளுகிறார். வீட்டு வாடகை ₹1.5 லட்சம், கார் EMI ₹80,000, உணவு ஆர்டருக்கு ₹70,000, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட ₹1.2 லட்சம் செலவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், சம்பளத்தை விட ₹57,000 கூடுதலாக, அதாவது மாதம் ₹8.87 லட்சம் தனக்கு செலவாவதாக புலம்பியுள்ளார்.
*தன்னிடம் உள்ள குறைகளை மறைப்பவனே குருடன். *பலவீனமானவன் எப்போதும் மன்னிக்க மாட்டான். மன்னிப்பது என்பது பலமுடையோரின் குணம். *மற்றவர்களைக் கெட்டவன் என்று சொல்வதால் நாம் நல்லவராகி விட முடியாது. *எல்லாவற்றிற்கும் அறம் தான் அடிப்படை, அந்த அறத்துக்கே உண்மை தான் அடிப்படை. *பிறரை அழிக்க நினைப்பவன், தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். *அன்பு அச்சமில்லாதது, அன்புள்ள இடத்தில் தான் கடவுள் இருக்கிறான்.
தாய்லாந்தில் நேற்று நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் போது, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் கவலை அளிப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி நீதி வழங்கவும் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், எல்லை விவகாரம், இருநாட்டு உறவு சிக்கல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 227 ▶குறள்: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.. ▶பொருள்: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
USA-வில் சீன இறக்குமதி பொருள்களுக்கு டிரம்ப் 34% வரி விதித்த நிலையில், சீனாவும் USA இறக்குமதிகளுக்கு அதே 34% கூடுதல் வரியை விதித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், சீனா தவறாக நடந்து கொண்டுவிட்டதாகவும், அவர்கள் பீதியில் இருப்பது வெளியில் தெரிவதாகவும் தெரிவித்துள்ளார். உலகின் பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் தொடங்கியுள்ளது.
வக்ஃப் திருத்த மசோதாவை ஆதரித்ததால், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் JDU கட்சியின் இளைஞர் அணி துணைத்தலைவர் டாப்ரெஷ் ஹசன், கட்சியில் இருந்து விலகியுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், இதுவரை 5 பேர் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல் NDA கூட்டணி கட்சியான உ.பியின் ராஷ்டீரிய லோக் தளத்தில் இருந்தும் ஷாஜாய்ப் ரிஷ்வி என்ற நிர்வாகி விலகியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.