India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ₹87.66-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்; சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
OPS-ஐ விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. NDA-வில் தொடர்ச்சியாக OPS ஓரங்கட்டப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து அவரை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகம் வரும் PM மோடியுடன், அவரை சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக பக்கம் மீண்டும் செல்வாரா OPS ?
‘மாரீசன்’ படத்துக்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் திருடனுக்கும், மறதி நோயாளிக்கும் இடையேயான பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஷங்கர், வடிவேலு திரையில் தோன்றிய விதம், படத்திற்கு ஆழத்தையும், பலத்தையும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஃபகத் மீண்டும் ஒரு பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
✦இது முதுகெலும்பை சீராக வைக்கவும், தோள்கள், இடுப்பு & முழங்கால்கள் எலும்புகளை வலுவாக்கும்
✦கால்களை ஒன்றாக சேர்த்து, கைகளை உடல் ஒட்டியபடி வைக்கவும். கைகளை ‘T’ வடிவில் உயர்த்தவும்.
➥கால்களை கொஞ்சம் வளைத்து, இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து நிற்கவும்.
➥10- 15 விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
ஜெ.,வுடன் தான் இருக்கும் புகைப்படத்தால் பரபரப்பு தொற்றியதால் அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்போது இல்லை என்று பிரேமலதா விளக்கமளித்தார். ஆனால், எல்.கே.சுதீஷ் போட்டோவை வெளியிட்டதற்கு பின்னால், அரசியல் காரணம் இல்லாமல் இல்லை. அதிமுகவின் கதவு திறந்து இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, திமுக அல்லது தவெகவிடம் கூடுதல் சீட் பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.
ஆசிய கோப்பை தொடர் வரும் செப்.09-ம் தேதி UAE-ல் துவங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் வரும் ஆக.11,12-ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள BCCI-ன் சிறப்பு மையத்தில் (COE) 2 நாட்கள் உடற்தகுதி மதிப்பீட்டை அவர் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மதிப்பீட்டின் முடிவே இத்தொடரில் அவர் பங்கேற்பாரா, இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
‘வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு’ மகத்தான வெற்றி பெற்றதை நினைத்து விடிய, விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரது அறிக்கையில், பெண் கல்வி, மது ஒழிப்பு குறித்து தான் பேசும்போது பெண்கள் அளித்த கைத்தட்டல்கள் ஆள்வோரின் செவிப்பறையில் மோதியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். மகளிரை முழுமையாக போற்றி, கொண்டாடிய விழா இதுவெனவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டுமென பாமகவினரை அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், கடந்தாண்டு எவ்வாறு மதுவிலக்கு வேண்டி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றினோமோ அதைப்போன்று இந்தாண்டு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு பகுதிக்கு மத்திய அரசிடமிருந்து விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ‘அத்திக்கடவு நாயகன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். அண்மையில் TN விவசாயிகள் டெல்லியில் PM மோடியை சந்தித்து பேசியிருந்தனர். அத்திக்கடவு – அவிநாசி 2-ம் கட்ட திட்டம் (அ) விவசாயிகளுக்கு புதிய திட்டம் குறித்தோ இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வீட்டில் தினமும் இஷ்ட தெய்வத்தை வணங்க முடியவில்லை என்றால், அதற்கு கர்ம வினைகளே காரணமாக இருக்கும். இந்த கர்ம வினையை மாற்றி, வீட்டில் பூஜை செய்ய, இந்த 3 விஷயங்களை செய்யுங்கள். வீட்டில் பூஜை செய்யும் போது, இறைவனின் படத்திற்கு கைகளால் பூக்களைத் தூவி, மனதை ஒருநிலைப்படுத்தி, வாய் முழுக்க சத்தமாக கடவுள் மந்திரங்களை சொல்லி பூஜியுங்கள். இது பூஜையின் முழு பலன்களை அடைய செய்யும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.