India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் மே 1-ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘ரெட்ரோ’ பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலில் இருக்கும் நிலையில், படத்தை பார்த்த சூர்யாவிற்கு முழு திருப்தி ஏற்பட்டதாம். நல்லா வந்துருக்கு என சூர்யா தன்னிடம் கூறியதாக கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். யாரெல்லாம் படம் பாக்க வெயிட்டிங்?
டெல்லியை சேர்ந்த ஒருவர், Zepto-வில் ட்ராக் பேண்ட் ஒன்றை வாங்கியுள்ளார். ஆர்டர் அவரை வந்து சேர, ஆசையாக பிரித்து பார்த்தவருக்கு பேண்ட் பாக்கெட்டில் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில், ₹10-ம், ஜெய்ப்பூர் பஸ் டிக்கெட் ஒன்றும் இருந்துள்ளது. இதுகுறித்து, அவர் சோஷியல் மீடியாவில் பகிர, நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ‘₹10-க்கு சோப்பு வாங்கி, துணியை துவைச்சி போட்டுக்கோங்க’ என கமெண்ட் பறக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதுவரை இருமுறை துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஸ்ரீநகர் சென்று, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்திக்கிறார். அதேபோல், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி காஷ்மீர் சென்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
பஹல்காம் தாக்குதலின்போது தீவிரவாதிகள் இந்திய ராணுவ உடையில் வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், டேராடூன் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் ராணுவ உடைகள் விற்கும் கடைகளுக்கு மாநில போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆதார் கார்டு, ராணுவ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே ராணுவ உடைகளை விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பயங்கரவாத மரணம்’ என்ற பிரிவு இல்லாத பாலிசிகளில் தீவிரவாத தாக்குதல் மரணங்களில் காப்பீடு கோர முடியாது. அதே நேரத்தில், தனிநபர் விபத்து காப்பீட்டில், ‘பயங்கரவாத பாதுகாப்பு’ என்பது சேர்க்கப்பட்டிருந்தால், ஒரு பயணத்தின் போது பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தால், இழப்பீடு கோரலாம். பயணக் காப்பீட்டு விதிமுறைகளில் ADB(Accidental Death Benefit) ரைடர் போன்ற சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
கூட்டணி தொடர்பாக மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். கூட்டணி குறித்து கவலைப்படாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார். இபிஎஸ் குறிப்பிடும் சில கட்சிகள் எவையாக இருக்கும்?
கூட்டணி தொடர்பாக மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். கூட்டணி குறித்து கவலைப்படாமல் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கினார். இபிஎஸ் குறிப்பிடும் சில கட்சிகள் எவையாக இருக்கும்?
தமிழகத்தின் பசுமை நகரமாக கோவை திகழ்கிறது. இந்திய பசுமை கட்டிட கவுன்சில் நடத்திய ஆய்வில் போக்குவரத்து, கழிவுநீர் மேலாண்மை உள்பட பல தரவுகளின் அடிப்படையில் இம்முடிவு வெளியாகியுள்ளது. நடப்பாண்டில் 1 லட்சம் மரக்கன்று நடுதல், ஒரு நாளைக்கு ஒருவருக்கு 125 லிட்டர் தண்ணீர், 1.25 லட்சம் பாதாளச் சாக்கடை இணைப்பு ஆகியவை நகரின் பசுமை தரத்திற்கு காரணமாகும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்
SRH-ஐ சமாளிக்க CSK பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை. குறிப்பாக, பவர் பிளேயில் அதிக ரன்களை CSK அடித்தால் மட்டுமே பெரிய ஸ்கோரை எட்டும். ரச்சின் ரவீந்திரா பெரிய இன்னிங்ஸை விளையாட வேண்டும். அதே நேரத்தில், MI-க்கு எதிரான மேட்ச்சில் 176 ரன்களை குவித்த போதிலும், பவுலிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. ஜடேஜா, பதிரனா, நூர் அகமது போன்றோர் சிறப்பாக செயல்பட வேண்டும். இன்று CSK வெற்றி பெற வாய்ப்பு இருக்கா..?
Sorry, no posts matched your criteria.