India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசியலில் அண்ணாமலை மீண்டும் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் பதவி தொடர்பாக டெல்லியில் மேலிடத் தலைவர்களை அவர் சந்தித்து பேசிய தகவலாலும், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தலைவர் பதவி ரேஸிஸ் தாம் இல்லை எனக் கூறியதாலும் பேசு பொருளாக மாறியுள்ளார். டிவி சேனல்கள் அண்ணாமலை குறித்தும், அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்பது குறித்தும் பிரத்யேக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சென்னையில் நடைபெற்று வரும் CSK vs DC ஐபிஎல் போட்டியில் CSK அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ராகுல், அதிகபட்சமாக 77 ரன்கள் விளாசினார். இதனையடுத்து, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது. CSK அணியின் கலீல் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிஹார், லக்கிசராயில் ரயிலில் சென்று கொண்டிருந்தார் 18 வயது இளம்பெண். அவர் முகவாட்டத்தை அறிந்த ஒருவன், மெல்ல பேச்சுக்கொடுத்து, அவர் வேலைத் தேடுவதை அறிந்தான். பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறிய அந்நபர், கியூல் என்ற ஸ்டேஷனில் இறங்க வைத்துள்ளான். அங்கே அவனது கூட்டாளிகள் 7 பேர் வந்துசேர, அப்பெண்ணை கேங் ரேப் செய்துவிட்டு, கையில் ரூ.100-ஐ திணித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். நாடு எங்கே போகிறது?
இலங்கை அரசு மேலும் சில தமிழக மீனவர்களை விடுவிக்க சம்மதித்திருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, நேற்று 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியிருப்பதாகக் கூறினார்.
தமிழக பாஜக புதிய தலைவர் யார் என்பது குறித்து வருகிற 9-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள தருணத்தில் உடனடியாக தலைவரை மாற்ற கட்சி மேலிடம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மோடி டெல்லி திரும்பியதும் பாஜக மூத்த தலைவர் கிரண் ரிஜிஜூ சென்னை வருவார் என்றும், பிறகு கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
வங்கிகளில் லோன் வாங்குபவர்களை பாதுகாக்க RBI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது: அவை *கடன் வழங்குபவர்கள், கடன் காலத்தை அதிகரிக்கும் முன் கடனாளியின் ஒப்புதல் பெற வேண்டும் *வட்டிவிகித மாறுபாடால் EMI (அ) tenure-ஐ மாற்றினால், தெரிவிக்க வேண்டும் *கடன் வாங்குபவரின் ஒப்புதல் இல்லாமல் EMI அதிகரிப்பு (அ) காலநீட்டிப்பு கூடாது. வட்டி, மற்ற விதிகள் பற்றிய விவரங்களுடன் கடன் அறிக்கையை(KFS) முன்கூட்டி தரவேண்டும்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கம்போடியாவில் ஒரு எலி உலக சாதனை படைத்திருக்கிறதாம். அதுவும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கொடுத்து மனிதர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறதாம். ஆப்ரிக்கன் எலியான அதன் பெயர் ரோனின். கம்போடியா ராணுவத்தில் கடந்த 2021 முதல் பணியாற்றி வருகிறது. தற்போது வரை 109 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து அகற்ற உதவி இருக்கிறது ரோனின். சாதிக்க பிறந்த எலி!
தோனி இன்றோடு ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகும் சூழலில் அவரது பெற்றோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். இதனால், CSK மற்றும் தோனியின் ரசிகர்கள், அவர் உண்மையில் ஓய்வு பெறுகிறாரோ என்ற கலக்கத்தில் உள்ளனர். முன்னதாக ஒருமுறை, தான் சென்னை மைதானத்தில்தான் ஓய்வை அறிவிப்பேன் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவளித்ததால் அதிருப்தியடைந்து, JDU-வில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். JDU-ன் பீகார் மாநில பொதுச் செயலாளர் முகமது சித்திகி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாநவாஸ் மாலிக் உள்ளிட்ட 4 பேர் ஏற்கெனவே விலகினர். இந்நிலையில், இளைஞரணி துணைத் தலைவர் தப்ரீஸ் ஹாசனும் விலகியுள்ளார். அடுத்தடுத்து தலைவர்கள் விலகுவது JDU தலைவர் நிதிஷ்குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.