news

News April 25, 2025

தீவிரவாதம் – பயங்கரவாதம் என்ன வித்தியாசம்?

image

ஒரு கொள்கையின் அடிப்படையில் சமூக மற்றும் அரசியல் குறிக்கோள்களுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்பர். ஒரு நாட்டின் இறையாண்மை, பொருளாதாரத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என்பர். அதோடு அப்பாவி மக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே அவர்கள் செயல்படுவார்கள். இரண்டும் வன்முறை செயல்களே என்ற போதிலும், நோக்கத்தில் வித்தியாசங்கள் உள்ளன.

News April 25, 2025

விண்ணப்பித்த 3 நாளில் புதிய மின்சார இணைப்பு: அரசு

image

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 3 நாள்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு வழங்குவதில் EB-க்கு தனிவிதிமுறைகள் உள்ளதாகவும், அதன்படிதான் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 27 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கி தமிழகம் சாதனை படைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 25, 2025

ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்கிறேன்: நடிகை ஹீனா கான்

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் ஒரு முஸ்லீமாக அனைத்து இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் அவர், ‘ஒரு இந்தியராக மனமுடைந்து போயுள்ளேன். இதனை செய்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மனிதர்களே அல்ல. சிலரால், இந்திய முஸ்லிம்களை அந்நியப்படுத்தி விடாதீர்கள். ஒரு இந்தியராக என் தேசத்துடன் தான் நிற்பேன்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

News April 25, 2025

வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடாதீர்கள்

image

வெறும் வயிற்றில் காலை எழுந்தவுடன் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பழங்களால் வயிற்று தொடர்பான நோய்கள் வரக்கூடும். ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது உடலின் செரிமான அமைப்பை சேதப்படுத்தலாம். அதேபோல, வாழைப்பழம் சாப்பிட்டால், ரத்தத்தின் சமநிலை பாதிக்கப்படும். கொய்யா, மாதுளை போன்ற பழங்களை ஜீரணிப்பது கடினம் என்பதால், வயிற்று வலி வரலாம்.

News April 25, 2025

பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய காரணம் இவர்தானா?

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பாவின் பங்கு இருப்பதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் கண்டறிந்ததாக தகவல் வெளிவந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்தபடி அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், துணை தலைவர் சைபுல்லாஹ் ஆகியோர் இத்தாக்குதலை வழிநடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இத்தாக்குதலுக்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன், உள்ளூர் கிளர்ச்சியாளர்களும் இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

News April 25, 2025

26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

image

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

News April 25, 2025

தங்கம் விலை இன்று உயர்வா? சரிவா?

image

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை நேற்றும், நேற்று முன்தினமும் குறைந்து வந்தது. இதன்படி, 1 கிராம் தங்கம் நேற்று ரூ.9,005ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.72,040ஆகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதன் விலை அதிகரிக்கவோ, குறையவோ இல்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. 1 கிராம் ரூ.111, 1 கிலோ ரூ.1.11 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. SHARE IT.

News April 25, 2025

இன்று ADMK மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

ADMK பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று மாலை 04:30 மணிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு கட்சியினுள் அதிருப்தி ஏற்பட்டதாலேயே இபிஎஸ் விருந்து வைத்ததாக தகவல் வெளியானது. மேலும், இந்த விருந்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட் ஆன நிலையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் அரசியல் கவனம் பெற்றுள்ளது.

News April 25, 2025

BREAKING: ஜூலை 12-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

image

மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,935 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று (ஏப்.25) முதல் மே 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மேலும் அறிய <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News April 25, 2025

மாநாட்டை புறக்கணித்த முக்கிய துணை வேந்தர்கள்

image

கவர்னர் தலைமையில் நடக்கும் துணை வேந்தர்கள் மாநாட்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. VC சந்திரசேகர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மதுரை VC பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் ராமகிருஷ்ணன் மாநாட்டுக்கு செல்லவில்லை. கோவை பாரதியார் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழங்களில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. மொத்தமுள்ள 52 பல்கலை.யில் 34-ல் இருந்து VC பங்கேற்றுள்ளனர்.

error: Content is protected !!