India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் தொடரில் CSK அணி, தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதல் போட்டியில் மும்பை அணியை வெற்றி கண்ட CSK, அடுத்தடுத்து பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. இந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழ CSK என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க.
தனிநபர்களுக்கு இடையிலான சண்டை, தாக்குதலில் ஒருவர் நிரந்தர ஊனம் அடைந்தால், என்ன தண்டனை என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 117(3)ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கியவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதுவும், இயற்கையாக இறக்கும் வரை சிறை தண்டனை விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் வரை சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரப்பதிவில் 1% கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. இது யாருக்கு பொருந்தும் என பார்க்கலாம். 1) சொத்தை வாங்குபவர் பெண்ணாக இருந்தால் சலுகை கிடைக்கும் 2) கூட்டாக பெண்கள் சேர்ந்து வாங்கினால் சலுகை கிடைக்கும் 3) நிலத்தை பிரித்து தனித்தனியே பெண்கள் பெயரில் பதிந்தாலும் சலுகை பொருந்தும் 4) ஒரே பெண் பெயரில் எத்தனை பத்திரப்பதிவு இருந்தாலும் பொருந்தும்.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், மதுரை, விருதுநகர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது.
ரயிலில் கன்பர்ம் டிக்கெட் போக RAC டிக்கெட் கிடைத்தாலும், பயணி தடையின்றி பயணம் செய்யலாம். ஆனால் படுக்கை வசதி தரப்படாது. அமர்ந்தபடி பயண தூரம் முழுவதும் பயணிக்கலாம். அதேநேரத்தில் அந்த டிக்கெட்டை ரயில் புறப்பட அரை மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தால் உரிய பிடித்தம் போல எஞ்சிய தொகை ரீபண்ட் தரப்படும். இல்லையேல் ரீபண்ட் கிடைக்காது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
யுனிவர்சல் சோல்ஜர்(1992), ஹெர்குலஸ்: தி லெஜன்டரி ஜர்னி உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ராபர்ட் ட்ரோபர். பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட அவர், ஸ்டம்செல் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை எடுத்தார். ஆனால், இது பக்கவிளைவு ஏற்படுத்தியதால் சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வீட்டு உபயோக கேஸ் வெடித்து உயிர் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை பெற முடியும். அதற்கென குழு காப்பீடு போன்ற ஒரு காப்பீட்டை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வைத்திருக்கின்றன. அதன்படி கேஸ் வெடித்து தனிநபர் இறந்தால் ₹6 லட்சம் வரைக்கும் காப்பீடு கிடைக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலோ, சொத்துகள் சேதமடைந்தாலோ முறையே தலா ₹2 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். SHARE IT
சென்னையில் நடைபெற்ற DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் CSK அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இறுதியில் விஜய் ஷங்கர் (69), தோனி (30) இருவரும் களத்தில் நின்று போராடியும் இலக்கை தொட முடியவில்லை. CSK அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆயுதங்களை கீழே போட்டு அமைதி பாதைக்கு திரும்பும்படி நக்சலைட் தீவிரவாதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், என்கவுன்ட்டரில் நக்சல்கள் கொல்லப்படுவதை யாரும் விரும்பவில்லை என்றார். நக்சல் தீவிரவாதம் இல்லாத கிராமத்திற்கு வளர்ச்சிப் பணிக்காக ரூ.1 கோடி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
IPL தொடரில் இன்றிரவு 7.30 மணி போட்டியில் ராஜஸ்தான் vs பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்திருக்கிறார். காயம் காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்காமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் மீண்டும் கேப்டனாகியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.