India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூருவில் 30 வயது பேட்மின்டன் கோச் ஒருவர், 16 வயது சிறுமியை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கோச்சிங் வரும் சிறுமியை ஏமாற்றி, தன் அறைக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்வதையும், நிர்வாண போட்டோ, வீடியோ எடுப்பதையும் இந்நபர் வழக்கமாக வைத்துள்ளான். தற்போது பிடிபட்டுள்ள அவனின் போனில், பல சிறுமிகளின் நிர்வாண போட்டோக்கள் இருந்துள்ளது. பெற்றவர்கள் நம்பி அனுப்புகிறார்களே. இவனை என்ன செய்வது?
கொழும்பு அருகே உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, அமைதிக்காக உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்களை நினைவு கூர்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமராக ராஜீவ் இருந்தபோது LTTE, இலங்கை ராணுவம் இடையே அமைதி ஏற்படுத்த இந்திய அமைதிப்படை சென்றது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசிவிசுவநாத சாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு ஏப்.7, 11 தேதிகளிலும், பங்குனி உத்திரத்துக்காக நெல்லை மாவட்டத்துக்கு ஏப்.11 அன்றும், புதுகோட்டையில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்காகவும், திருவாரூரில் ஆழித்தேரோட்டத்துக்காக ஏப்.7-ம் தேதியும் உள்ளூர் விடுமுறையாகும்.
*ஏர் ஃபில்டர்களை எப்போது சுத்தமாக பராமரிக்கவும். இதனால் காற்று உறிஞ்சப்படுவது எளிதாகும். *வெளியில் இருக்கும் விண்டோ யூனிட் சற்றே குனிந்த நிலையில் இருந்தால், கண்டன்சேஷன் தண்ணீர் எளிதாக வெளியாகும் *மின்சார லோட் தாங்காத எக்ஸ்டென்ஷன் கார்டை பயன்படுத்தவே கூடாது *இடி இடிக்கும் போது ஏசி இணைப்பை துண்டிக்கவும்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 206 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி, 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் என அனைவரும் அவரவர் பங்கினை சரியாக செய்ய, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.
ஏசி விலை 4%-5% வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. USA அதிபர் டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எதிரொலியால், இந்தியாவில் ஏசி தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் காப்பர், ஸ்டீல், அலுமினியம், கேஸ் ஆகியவற்றின் விலை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் செலவினம் அதிகரித்திருப்பதால், அதை ஈடுகட்ட இந்த வாரம் ஏசி விலையை உயர்த்த இருப்பதாக ப்ளு ஸ்டார், ஹையர் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் திலக் வர்மா Retired Out முறையில் வெளியேறினார். இதற்கும் Retired Hurtக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Retired Hurt என்பது காயத்தால் வெளியேறுவது. சிறிது நேரம் கழித்து அந்த வீரர் மீண்டும் விளையாடலாம். ஆனால், Retired Out சொல்லி வெளியேறினால், அது அவுட் போலத்தான் கணக்கிடப்படும். அந்த வீரர் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாது.
அதிமுக – பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அதிருப்தி தலைவர்களை பாஜக தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அதிமுக நிர்வாகியான கே.சி.பழனிசாமியை சந்தித்து பேசினார். EPS உடனான எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகியிருக்கும் அவரை நிதியமைச்சர் சந்தித்திருப்பது ஆயிரம் கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரபல நடிகர் ‘அவர்கள்’ <<15989289>>ரவிக்குமார் (71) நேற்று காலமானார்<<>>. சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச்சடங்குக்கு பின், இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தினர். RIP
மீண்டும் ஹீரோவாக தொடங்கி இருக்கும் பிரஷாந்த், ஹரியுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறாராம். அந்த படத்தில் பிரசாந்திற்கு ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டே, கயாடு லோகர், சாய் பல்லவி ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஹரி – பிரஷாந்த் கூட்டணியில் ஏற்கனவே ‘தமிழ்’ என்ற ஹிட் படம் வெளிவந்துள்ளது. பிரஷாந்திற்கு யார் கரெக்ட்டான ஹீரோயினாக இருப்பாங்க?
Sorry, no posts matched your criteria.