India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தைகள் போதுமான அளவுக்கு தூங்கவில்லை எனில், அது அவர்களின் மூளைத் திறனையும் மனநலத்தையும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆழ்ந்த தூக்கத்தின்போது தான் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் சீரமைக்கப்படுகிறது. அவர்கள் சரியாக தூங்கவில்லை எனில் மனச்சோர்வு, பதற்றம், நடத்தைப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
இன்று (ஏப்ரல் 06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஏப்ரல் 06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது மாவட்ட நீதிமன்றம். 1999ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்செண்ட் மரணமடைந்த வழக்கில், அப்போதைய காவலர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது DSPயாக பணியாற்றி வருகிறார்.
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக இருப்பதாக ஸ்பெயினில் நடந்த ஆய்வில் உறுதி ஆகியுள்ளது. ஆண் பாலினத்தை தீர்மானிக்கும் எக்ஸ் குரோமோசோமில் இருக்கும் சில ஜீன்கள் செயலிழப்பதால் தான் ஆண்களுக்கு புற்றுநோய் அதிகம் வருவதாக ஆய்வில் தகவல். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று ஆய்வில் ஏதும் கூறவில்லை. பாவம், ஆண்கள்!
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சாகாவரம் பெற்ற பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தவர் மறைந்த கண்டசாலா. அவரின் மகன் ரவிக்குமார் (72) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சென்னையில் இன்று காலமானார். கண்டசாலாவின் இரண்டாவது மனைவி சரளாவின் மகன் ரவிக்குமார். கண்டசாலா பற்றிய அபூர்வ தகவல்களையும், அவரின் வாழ்க்கைப் பற்றிய முக்கிய பதிவுகளையும் ரவிக்குமார் செய்துவந்தார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் அணி வெற்றி கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான், அபாரமாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்தார். அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் ஆரம்பம் முதலே சொதப்பியது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தானின் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா, இலங்கை இடையே முதல்முறையாக பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மோடி, திசநாயகே ஆகியோர் இடையேயான சந்திப்பிற்கு பிறகு, 2 நாடுகளும் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் திரிகோணமலையை எரிசக்திக்கான மையமாக மாற்றும் ஒப்பந்தம், பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும். திரிகோணமலையில் உள்ள திரிகோணஸ்வர் கோயிலை புனரமைக்க இந்தியா உதவும் என மோடி அறிவித்தார்.
பாம்பன் புதிய பாலத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பதைத் தொடந்து, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பாம்பன் பாலத்தின் வேலைகள் நடைபெற்று வந்ததால், ரயில்கள் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் சேது உள்ளிட்ட ரயில்கள் ராமேஸ்வரம் வரை செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – முயற்சி ➤கன்னி – லாபம் ➤துலாம் – நன்மை➤விருச்சிகம் – சுகம் ➤தனுசு – பரிசு ➤மகரம் – சாந்தம் ➤கும்பம் – யோகம் ➤மீனம் – அமைதி.
Sorry, no posts matched your criteria.