India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிரம்பின் கூடுதல் வரி விதிப்பிற்கு பதிலடியாக கனடா, ஐரோப்பிய யூனியன், சீனா கூடுதல் வரி விதித்துள்ளன. ஆனால் இந்தியா அதுபோல் செய்யவில்லை. டிரம்ப் தற்போதுதான் அதிபராக பதவியேற்று உள்ளார். பாகிஸ்தான், சீனாவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டவர் அவர். கூடுதல் வரியை இந்தியா விதிக்கும்பட்சத்தில், 2 நாடுகள் இடையே உறவு பாதிக்கப்படக்கூடும் என இந்தியா கருதுவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
5 முறை சாம்பியனான CSK நடப்பு சீசனில் 3வது தோல்வியை நேற்று சந்தித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு CSK சென்றது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி எப்படி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.
டிக்-டாக் செயலியின் USA செயல்பாட்டை தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டேன்ஸ்க்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். இல்லையேல் டிக்-டாக்கிற்கு தடை விதிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதையடுத்து, டிக்-டாக்கை வாங்குவது தொடர்பாக அமேசான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
குழந்தைகள் போதுமான அளவுக்கு தூங்கவில்லை எனில், அது அவர்களின் மூளைத் திறனையும் மனநலத்தையும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆழ்ந்த தூக்கத்தின்போது தான் குழந்தைகளின் மூளையின் இணைப்புகள் சீரமைக்கப்படுகிறது. அவர்கள் சரியாக தூங்கவில்லை எனில் மனச்சோர்வு, பதற்றம், நடத்தைப் பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
இன்று (ஏப்ரல் 06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஏப்ரல் 06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தூத்துக்குடி டிஎஸ்பி ராமகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது மாவட்ட நீதிமன்றம். 1999ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்செண்ட் மரணமடைந்த வழக்கில், அப்போதைய காவலர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது DSPயாக பணியாற்றி வருகிறார்.
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக இருப்பதாக ஸ்பெயினில் நடந்த ஆய்வில் உறுதி ஆகியுள்ளது. ஆண் பாலினத்தை தீர்மானிக்கும் எக்ஸ் குரோமோசோமில் இருக்கும் சில ஜீன்கள் செயலிழப்பதால் தான் ஆண்களுக்கு புற்றுநோய் அதிகம் வருவதாக ஆய்வில் தகவல். இதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று ஆய்வில் ஏதும் கூறவில்லை. பாவம், ஆண்கள்!
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சாகாவரம் பெற்ற பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தவர் மறைந்த கண்டசாலா. அவரின் மகன் ரவிக்குமார் (72) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சென்னையில் இன்று காலமானார். கண்டசாலாவின் இரண்டாவது மனைவி சரளாவின் மகன் ரவிக்குமார். கண்டசாலா பற்றிய அபூர்வ தகவல்களையும், அவரின் வாழ்க்கைப் பற்றிய முக்கிய பதிவுகளையும் ரவிக்குமார் செய்துவந்தார்.
Sorry, no posts matched your criteria.