India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாவர்க்கர் தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு SC கண்டனம் தெரிவித்துள்ளது. தியாகிகள் மீது அவதூறு கருத்துகளை இனியும் பேச நீதிமன்றம் அனுமதிக்காது எனவும்
‘உங்களின் விசுவாசமான ஊழியர்’ என்று ஆங்கிலேயர்களிடம் மகாத்மா காந்தி பேசியுள்ளது தெரியுமா என்றும் ராகுலுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களை அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது எனவும் SC தெரிவித்துள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார். 45 ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வயது 63. அவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்த போதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. மிக பிரபலமான, ‘Friday the 13th’ மற்றும் ‘Knots Landing’ போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் லார். இவர் அதிகமாக, நடித்திருப்பது பேய் படங்களிலும், தொடர்களிலும் தான். #RIP.
தற்போதைய சூழலில் பலரும் தொப்பை போட்டு ரொம்ப கஷ்டப்படுகின்றனர். அதை குறைக்க டாக்டர்கள் சில டிப்ஸை வழங்குகின்றனர். சாப்பிடும் அளவை குறைக்காமல், 3 வேளை சாப்பாட்டை 2 வேளையாக குறைக்க அறிவுறுத்துகின்றனர். இதனை 3 மாதங்களுக்கு பின்பற்ற வேண்டுமாம். ஆனால், இந்த டயட்டை மேற்கொள்வதற்கு முன், முதலில் டாக்டரிடம் ஆலோசித்து உங்கள் உடலுக்கு உகந்த உணவுகளை தேர்வு செய்திட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இபிஎஸ்-க்கு எதிராக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது எம்பி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். முன்னதாக, கே.சி.பழனிசாமி இபிஎஸ் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.
இஸ்ரோ EX தலைவர் கஸ்தூரி ரங்கன் (80) காலமானார். பெங்களூரில் உள்ள இல்லத்தில் அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கஸ்தூரி ரங்கன், இஸ்ரோ தலைவராக 9 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். மேலும் மாநிலங்களவை எம்பியாக 2003 முதல் 2009-ம் ஆண்டு வரையிலும், திட்ட கமிஷன் உறுப்பினராகவும், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவு குழுத் தலைவராகவும் இருந்துள்ளார். RIP.
வருமானத்திற்கு அதிகமாக ₹3 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 2006-11 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த முகாம்களில், பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது. தீவிரவாத தாக்குதலால் எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை இன்று பங்குச்சந்தைகளில் எதிரொலித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. நிதி தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
எனது தேசப்பற்றையே சோதிப்பது வலியைக் கொடுக்கிறது, எங்களை வேறு மாதிரி சித்தரிக்காதீர்கள் என நீரஜ் சோப்ரா என வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாக். வீரர் அர்ஷத் நதீமை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கு நீரஜ் அழைத்திருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால், தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நீரஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.