India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வாட்ச் மேனாக பணியாற்றும் ராஜ்குமார் என்பவருக்கு ₹2.2கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மாதம் ₹5,000 மட்டுமே ஊதியம் பெறும் அவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது PAN எண்ணை வைத்து பல கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. எளிய மனிதர்களின் ஆதார், PAN-ஐ வைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
➥ IPL தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் 50 கேட்சுகளை பிடித்துள்ளார். 119 மேட்சுகளில் விளையாடி, இச்சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
➥ ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது 50வது IPL விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 44 மேட்சுகளில், 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ➥ RR அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக சஞ்சு சாம்சன் மாறியிருக்கிறார். 32 வெற்றிகளைப் பதிவுச் செய்து, ஷேன் வார்னே(31) சாதனையை சஞ்சு முந்தியுள்ளார்.
நடிகர்கள் ரவிக்குமார், ஸ்ரீதர் ஆகியோரின் அடுத்தடுத்த மரணம் கோலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் ‘அவர்கள்’ ரவிக்குமார்(71) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சோகம் மறைவதற்குள் நேற்று மாலை ‘சஹானா’ <<16006034>>ஸ்ரீதர்<<>> (62) மாரடைப்பால் காலமானார். கடந்த மாதம் 25ஆம் தேதி மனோஜ் பாரதிராஜா(48) மாரடைப்பால் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது. #RIP
மே.வங்கத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு 2,000க்கும் மேற்பட்ட பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மட்டும் 50 பேரணிகள் நடத்தப்படவுள்ளன. இதனால் பேரணி நடக்கும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க இந்து அமைப்புகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பேரணியில் எவ்வித ஆயுதங்களையும் ஏந்தி செல்லக்கூடாது என நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, இன்று நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார். ரயில், கப்பல் போக்குவரத்தையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மதியம் ராமநாதசுவாமியை தரிசிக்கும் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
நேற்றைய ஆட்டத்தில் தோனி, எதிர்கொண்ட 19வது பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தார். நடப்பு IPL தொடரில், ஒரு பேட்டர் தனது முதல் பவுண்டரியை அடிக்க எடுத்துக்கொண்ட அதிகபட்ச பந்துகள் இதுவே. IPLல் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து கலக்கி வரும் நிலையில், தவிர்த்திருக்க வேண்டிய ஒரு சாதனை தோனி வசமாகி இருக்கிறது. தொடர்ந்து, CSK பேட்டிங்கில் தடுமாறுவதற்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?
தமிழக பாஜக தலைவர் விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. அண்ணாமலையை மாற்றக் கூடாது என தலைமைக்கு பல இ-மெயில்கள் பறந்துள்ளதாம். இதனால் அண்ணாமலைக்கு தலைவர், நயினாருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அண்ணாமலை விவகாரத்தில் அதிமுகவை ஆசுவாசப்படுத்த மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் என்ற ஜாக்பாட்டை கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்வோர் குடையுடன் செல்லுங்கள் மக்களே..!
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, 1996ல் உலகக்கோப்பை வென்ற அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியினரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக xல் பதிவிட்ட பிரதமர் இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் பிரதமருக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.