India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் சிறையில் இருந்த 14 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்தச் சூழலில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. மீனவர்கள் 14 பேரும் விரைவில் தாயகம் திரும்பவுள்ளனர்.
➤பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு, சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது ➤தோசை மிருதுவாக இருக்க, மாவு அரைக்கும்போது வேகவைத்த அரிசியை சேர்த்து அரைக்கவும் ➤உடைத்து வைத்த தேங்காய் காய்ந்து போனால், அதில் பாலை ஊற்றி சிறிது நேரம் விட்டு பயன்படுத்தினால் புதியது போல இருக்கும் ➤எண்ணெய்யை சூடாக்கும்போது புகை வராமல் இருக்க, எண்ணெய்யில் சிறிதளவு புளியை போடுங்கள். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க!
பிரதமர் மோடியை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்த அவர், விமானம் மூலம் கோவை செல்வதாக கட்சி நிர்வாகிகளிடம் முதலில் கூறியுள்ளார். ஆனால், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், ரகசியமாக கார் மூலம் ராமேஸ்வரம் சென்றுள்ளார். நேற்று இரவு 2வது முறையாக நிர்மலாவை அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020இல் சிறுமியை மிரட்டி 45 வயதான தந்தை வன்கொடுமை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ கோர்ட் அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் ₹4,100 அபராதம் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சீமான், வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்ததாக தகவல் வெளியானது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சந்திப்பு என்பது அரசியல் ரீதியாக பேசுப்பொருளாக மாறியது. இந்நிலையில், நிர்மலாவை தான் சந்திக்கவில்லை; இது முற்றிலும் தவறான தகவல் என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6ஆவது தேசிய பொதுச்செயலாளராக கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிபிஎம்(CPIM) மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது பெயரை பிரகாஷ் காரத் பரிந்துரை செய்துள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
ஆடம்பர பிரியர்களான அமெரிக்கர்களுக்கு ஆடம்பர கார் நிறுவனமான ஜாகுவார் அதிர்ச்சியைக் கொடுத்து இருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் டிரம்ப். வாகன உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு 25% வரியை அவர் விதித்ததால், அமெரிக்காவுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது. இத்தனைக்கும் கடந்த ஆண்டில் கால் பங்கு கார்களை அமெரிக்காவில் தான் ஜாகுவார் விற்பனை செய்திருந்தது.
டெல்லியில் கேளிக்கை பூங்காவின் ரோலர் கோஸ்டரில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கபாஷேரா பகுதியில் உள்ள கேளிக்கை பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டரில் பிரியங்கா (24) என்பவர் சவாரி செய்தபோது இந்த சோகம் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்பாராத விபத்தில் மரணமடைந்துள்ளார். சாவு ஒருவருக்கு எப்படி வருமென யாருக்கு தெரியும்.
இந்தியா, இலங்கையை இணைக்க 1876ல் உதித்த யோசனைதான் பாம்பன் பாலம் உருவாகக் காரணம். 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட, மதுரை– தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2014ல் நூற்றாண்டைக் கொண்டாடிய பாம்பன் பாலம் இயற்கை சீற்றங்கள், விபத்துகளால் பலவீனமடைந்ததால், அதன் அருகே தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழசும் சரி, புதுசும் சரி, இரண்டுமே பொறியியல் அற்புதம் தான்!
உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி ஹாஸ்பிடலை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். 45 ஏக்கரில், ₹353 கோடியில், 700 படுக்கை வசதி, பழங்குடியினருக்கு தனி வார்டு, 12 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் இந்த ஹாஸ்பிடல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசத்தில் அமைந்த மருத்துவ கல்லூரி என்ற பெருமையும் பெற்றுள்ளது. முன்னதாக ₹727 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கும் CM அடிக்கல் நாட்டினார்.
Sorry, no posts matched your criteria.