India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாக். நடிகர் ஃபவாத் கான் – வாணி கபூர் நடித்துள்ள ‘<<16201311>>அபிர் குலால்<<>>’ படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த புதன்கிழமை வெளியாக இருந்த பாடலும், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வரும் மே 9-ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலை இப்படத்தின் நாயகன் ஃபவாத் கான் கண்டித்திருந்தார்.
இந்திய ஆயுதப் படைகளில் சேர்வதற்கான ‘அக்னிபத்’ பதவிக்கான விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிகிறது. 17½ – 21 வயதிற்குள் இருக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வு, Recruitment Rally-யின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். சம்பளமாக ₹30,000 நிர்ணயிக்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவோர் <
உடல்நலக் குறைவால் காலமான முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளும் சக்தியை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சந்திரசேகர் ஆன்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். #RIP
பயங்கரவாத இயக்கங்களுக்கும் PAK-க்கும் உள்ள தொடர்பை, அதன் பாதுகாப்பு அமைச்சரே போட்டு உடைத்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் PAK-க்கு பங்கிருக்கிறது என IND குற்றஞ்சாட்டுகிறது. இந்நிலையில், ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், PAK கடந்த 3 தசாப்தங்களாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது என அமைச்சர் கவாஜா ஒப்புக்கொண்டுள்ளார். USA, மேற்குலக நாடுகளுக்காகவே PAK இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவத்தால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்தியா-பாக் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதை கருத்தில் வைத்து துணை ராணுவப் படையினருக்கு அளிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வீரர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவு அனுப்பியுள்ளனர். அதில் உடனே பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து, கூகிளில் காஷ்மீர் பற்றிய தேடல்கள்தான் கடந்த 3 நாள்களில் அதிகரித்துள்ளது. Google search density அடிப்படையில், இந்தியா 100%, UAE 88%, பூடான் 76% ஆகியவை அதிகமாக தேடியுள்ளன. சம்மந்தப்பட்ட பாகிஸ்தானில் வெறும் 27% தான் காஷ்மீர் குறித்து தேடப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நாடுகளான சீனா (13%), அமெரிக்கா (11%), ரஷ்யா (3%) போன்ற நாடுகளில் காஷ்மீர் குறித்து பெரிய தாக்கம் இல்லை!
பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, J&K-ல் தீவிரவாதிகளுடனும், பாக். ராணுவத்துடனும் இந்திய ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. LOC-யில் நேற்று இரவு முதல் பாக். துப்பாக்கி சூடு நடத்தி வரும் நிலையில், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகளை தகர்த்த இந்திய ராணுவம், LET தளபதியையும் சுட்டுக் கொன்றது.
11-ம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24-வது கேள்வி தவறாக கேட்கப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் அந்தக் கேள்விக்கு சரியாகவோ, தவறாகவோ எந்தப் பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதாெடர்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இருக்கும் அனைத்து CM-களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மாநிலத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானியர்களின் விசாக்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 200 பேர் இருப்பதாக முன்னரே தகவல் வெளிவந்திருந்தது.
மோடி எதுவும் செய்ய மாட்டார், பிஹார் சென்று உரை நிகழ்த்துவதற்குப் பதிலாக அவர் காஷ்மீருக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது நாம் நம்பிக்கை இழந்து வீட்டிற்குச் செல்வோம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஷயம் முடிந்துவிட்டது. மோடி, ‘அங்கு எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லி உங்களைத் தூங்க வைப்பார் எனவும் அவர் சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.