India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என CM உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என சாடியுள்ளார். 10.62 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோதும், ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ₹18,498 கோடிதான் எனவும் தெரிவித்துள்ளார்.
எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பால் 30% கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாகவும், எத்தனால் கலப்பு பெட்ரோலால் வண்டிகள் பழுதடைவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும், ஓட்டும் விதம், பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் தான் வண்டியின் மைலேஜை தீர்மானிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கவின் ஆணவக்கொலையால் தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. திமுக, அவர்களது கொள்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணையாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.
◆சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனிசிமோவா(USA) & ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி.
◆2-வது T20: 53 ரன்கள் வித்தியாசத்தில் SA வெற்றி. முதலில் ஆடிய SA 20 ஓவர்களில் 218/7, AUS 17.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்.
◆மகளிர் ODI WC: பெங்களுரூவில் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்.
CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இம்மாத இறுதியில் CM, தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல உள்ளதால், அதுபற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி சிம்ம முகம், 18 கரத்துடன் காணப்படுகிறாள். கவுரவர்களிடம் தோற்று காட்டுக்கு சென்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டை மீட்க, இங்கு வந்து யாகம் வளர்த்து பிரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றளவும் அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டால் மன தைரியம் கிடைக்கும். SHARE IT.
சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவரும், திமுகவின் முக்கிய முகமாக இருந்தவருமான பொன்வசந்த் நேற்று கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, திமுக ஆட்சியில் ஊழல் நடப்பதற்கு இதுவே சான்று என்று அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், பொன்வசந்த் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவுடன், கைது நடவடிக்கைக்கு முன்னரே, அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக திமுகவினர் பதிலளித்து வருகின்றனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. 1XBet என்ற சூதாட்ட செயலி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் ED, அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள ED அலுவலகத்தில் இன்று ரெய்னா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
✦செரிமானத்தை தூண்டி, மார்பு மற்றும் தோள்பட்டைகளை விரிவடையச் செய்கிறது.
✦தரையில் முழங்காலிட்டு கைகளை தோள்பட்டைக்கு நேராக தரையில் வைக்கவும்.
➥மூச்சை உள்ளே இழுத்து, முதுகை வளைத்து, மார்பை முன்னோக்கி நீட்டி, தலையை உயர்த்தி, மேலே பார்க்கவும்.
➥மூச்சை வெளியே விடும்போது, முதுகை வில் போல வளைத்து, தலையை குனிந்து, வயிற்றை உள்ளிழுக்கவும்.
தேமுதிகவை தவிர யாரும் விஜயகாந்த் Photo-வை பயன்படுத்தக்கூடாது; கூட்டணி கட்சிகள் மட்டுமே தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மானசீக குரு விஜயகாந்த் என தெரிவித்தால், போட்டோவை விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா நேரடியாக அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த திடீர் மனம் மாற்றத்திற்கு கூட்டணி கணக்குதான் காரணம் என சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.