India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பினராயி விஜயன், ராகவலு, M.A.பேபி, தபன் சென், நிலோத்பல் பாசு, சலீம், விஜயராகவன், அசோக் தாவலே, ராமச்சந்திரா தோமே, கோவிந்தன், அம்ரா ராம், விஜு கிருஷ்ணன், மரியம் தாவலே, வாசுகி, கே.பாலகிருஷ்ணன், ஜிதேந்திர சௌத்ரி, ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, அருண் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ₹522.34 கோடி கூடுதல் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி வழங்க வேண்டும் என CM ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக ₹522.34 கோடி மட்டுமே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
*பிரியாணியில் உள்ள வாசனைப் பொருள்கள் பசியை தூண்டுகின்றன. ஜீரணத்தை எளிதாக்கி, சத்துகளை உடல் கிரகிக்க உதவுகின்றன. *Protein, Carbohydrates, Fat மூன்றும் சரிவிகிதத்தில் உள்ளன. *சிக்கனில் உள்ள செலினியம், வயதாவதை தடுக்கிறது, நியாசின், Immunity அதிகரிக்கிறது. *மஞ்சள், இஞ்சி, மிளகு, சீரகம்: ஜீரணத்தை எளிதாக்கி, கழிவுகளை வெளியேற்றுகிறது. *காய்கறிகள் vitamins, minerals உள்ளிட்ட நுண்சத்துகளை அளிக்கிறது.
அனைத்து சத்துகளையும், நாவூறும் சுவையையும், இழுக்கும் மணமும் கொண்டது பிரியாணி. அதேநேரம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். டால்டா, எண்ணெய், கொழுப்பு அதிகமுள்ள இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்ட பிரியாணியை அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிக உப்பு, செயற்கை சுவை/ நிறமூட்டிகளை தவிர்க்கவும். உணவகங்களில் பழைய இறைச்சி பயன்படுத்தப்படுவதால், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.
டிரம்ப்பின் பொருளாதார முடிவுகளால் உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் 1.5% சரிந்தது. ஆனால், இந்திய சந்தைகளில் வர்த்தகம் முடிந்தபின், அமெரிக்க சந்தைகள் 5% சரிவடைந்தன. அதன் தாக்கம், நாளை ( திங்கட்கிழமை) இந்திய சந்தைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரும், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான பாபுராஜ்(60), அன்னூரில் காலமானார். கல்லூரி காலத்தில் கால்பந்து விளையாட்டிற்குள் அடியெடுத்துவைத்த அவர், மாநில அணியில் சிறந்த வீரராக செயல்பட்டுள்ளார். கால்பந்தில் நாட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக கேரளம் உருவானதிலும், 1990, 91 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஃபெடரேஷன் டிராபியை கேரளா வென்றதிலும் பாபுராஜ் முக்கிய பங்காற்றினார்.
ரஷ்யாவில் வீடில்லாத மக்கள், போதைக்கு அடிமையானவர்கள், வயதானோர் என 1992 – 2006 வரை 48 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை செய்த அலெக்சாண்டர் பிசிஸ்கின் (50) 2007இல் கைது செய்யப்பட்டார். ‘செஸ்போர்ட் கில்லர்’ என ரஷ்ய ஊடகங்களால் புனைப் பெயரில் அழைக்கப்பட்ட அவர், தற்போது மேலும் 11 பேரை கொலை செய்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இது ரஷ்ய போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நான் ஓய்வு பெறுகிறேனா இல்லையா என்பதை உடல்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்று தோனி பேசியிருக்கிறார். 43 வயதாகும் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்று தகவல் பரவி வந்தது. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நான் ஆண்டுக்கு ஒருமுறைதான் விளையாடுகிறேன். அடுத்த ஆண்டு விளையாட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்னும் 10 மாதங்கள் உள்ளன. அப்போது உடல் திடத்தைப் பொறுத்து முடிவு செய்யலாம்” என்றார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸியா? ரொனால்டோவா? இந்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்ததே இல்லை. இதற்கு தற்போது பதிலளித்திருக்கும் பிரேசில் முன்னாள் வீரர் காகா, மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்றுவிட்டதால் எதுவும் மாறிவிடாது. நானும் உலகக் கோப்பை வென்றேன். ஆனால், தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் நான் இல்லை. மெஸ்ஸி ஜீனியஸ் தான். ஆனால், முழுமையான கால்பந்து வீரர் என்றால் அது ரொனால்டோ தான் என்றார்.
பாம்பன் பாலத்தை திறந்து வைத்து பேசிய PM மோடி, இது மறைந்த EX குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல்கலாமின் நிலம் என மகிழ்ச்சி தெரிவித்தார். அப்துல்கலாமின் வாழ்க்கை, அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என்பதை நமக்குக் காட்டியதாகவும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம், 21-ம் நூற்றாண்டின் பொறியியல் அற்புதம் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.
Sorry, no posts matched your criteria.