India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் பட வரிசையில் ’அவதார் – Fire and Ash’ மூன்றாம் பாகம் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிதான் என்றாலும் இரண்டாம் பாகம் வெளியாவதில் பல முறை தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மூன்றாம் பாகம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
CSK அணியின் தொடர் தோல்வி அதன் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம், தன் பக்கம் இருக்கும் பிரச்னைகளை CSK ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இளம் வீரர்களை அணியில் சேர்க்காதது, அதிக எண்ணிக்கையிலான ஸ்பின்னர்களை கொண்டிருப்பது, ஹிட்டர்கள் யாரும் இல்லாதது என வீக்னஸ் பட்டியல் நீள்கிறது. CSK சரி செய்ய வேண்டிய தவறுகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தூத்துக்குடியில் கட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘வடமாநிலத்தவர்கள் யாரும் குளிக்கக் கூட மாட்டார்கள். ஆனால், தமிழர்கள் ஒரு நாளைக்கு 2 வேளை குளிப்பார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நின்று தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்று கூறும் அவர்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்று தெரியுமா என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
ஜோதிடப்படி, கிரக பெயர்ச்சிகளால் நன்மைகளும், சில சூழல்களில் பாதிப்புகளும் ஏற்படலாம். வரும் மே 18-ல் ராகு- கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் மிதுனம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு குடும்ப பிரச்னைகள், உடல்நலக்குறைவு மற்றும் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க பேச்சில் கவனம், வாக்குவாதம் தவிர்த்தல், வாகனம் ஓட்டும்போது கவனம் கடைப்பிடியுங்கள். நல்லதே நடக்கும்.
2K கிட்ஸுக்கு பிரேமம் படம் என்றால், 90’s கிட்ஸுக்கு ஆட்டோகிராஃப் படம். சேரன் இயக்கி நடித்து 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மே 16-ல் மீண்டும் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘ஞாபகம் வருதே’ முதல் ‘ஒவ்வொரு பூக்களுமே’ வரை அனைத்துப் பாடல்களும் இந்த படத்தில் ஹிட் தான். இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி எது?
தமிழக அரசியல் தலைவர்கள் தமிழில் கையெழுத்து போடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்துள்ளார். ராமேஸ்வரம் அரசு நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருந்து தனக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்திலேயே இருப்பதாகக் குறிப்பிட்டார். தனக்கு கடிதம் எழுதும் அரசியல் தலைவர்கள், கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள் என அவர் அறிவுறுத்தினார்.
வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்துகள், புரதங்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் இதய நோய் பாதிப்பை தவிர்க்கலாம். உடலில் சர்க்கரை அளவை சீராக வைக்க வேர்க்கடலை உதவுகிறது. இதில், இருக்கும் வைட்டமின் B3 மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. வேர்க்கடலை பசியை கட்டுப்படுத்த உதவுவதால், உடல் எடையை கட்டுப்படுத்த முடியும் என சொல்லப்படுகிறது. SHARE IT.
போனுக்கு மோசடி call-கள் தொல்லை அதிகரித்தபடி உள்ளது. இதை தடுக்க மத்திய அரசு, ‘Sanchar Saathi’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. சந்தேகத்துக்கு இடமான கால் வந்தால், இந்த ஆப்பில் லாக்-இன் செய்து, நேரடியாக புகார் செய்யலாம். மொபைல் தொலைந்தால் உடனடியாக பிளாக் செய்யலாம். உங்கள் பெயரில், உங்களுக்கு தெரியாமல் போன் நம்பர் வைத்திருந்தாலும் கண்டறியலாம். போன் ஒரிஜினலா என்பதை IMEI எண் கொடுத்து செக் பண்ணலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 புதிய பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பினராயி விஜயன், ராகவலு, M.A.பேபி, தபன் சென், நிலோத்பல் பாசு, சலீம், விஜயராகவன், அசோக் தாவலே, ராமச்சந்திரா தோமே, கோவிந்தன், அம்ரா ராம், விஜு கிருஷ்ணன், மரியம் தாவலே, வாசுகி, கே.பாலகிருஷ்ணன், ஜிதேந்திர சௌத்ரி, ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, அருண் குமார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்காக ₹522.34 கோடி கூடுதல் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ₹37,907 கோடி வழங்க வேண்டும் என CM ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக ₹522.34 கோடி மட்டுமே வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.