India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற ‘வீரா ராஜா வீரா’ பாடல் ‘சிவ ஸ்துதி’ என்கிற பாடலை காப்பி அடித்து இசையமைக்கப்பட்டதாக கூறி ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின் போது ‘வீரா ராஜா வீரா’ பாடல் தனது அசல் படைப்பு என ரஹ்மான் தரப்பில் வாதிடப்பட்டது. எனினும் வழக்கில் முகாந்திரம் உள்ளதால் ₹2 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது கணவரை சுட்டுவிட்டு, அவர் சாகும் வரை காத்திருந்து, பின்னரே தீவிரவாதி அங்கிருந்து சென்றதாக பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட ம.பி.யைச் சேர்ந்த சைலேஷின் மனைவி ஷீதல் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் சென்ற பிறகும் கூட தங்களுக்கு உடனடி உதவி கிடைக்கவில்லை எனவும், சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ராணுவ வீரரிடம் இது பற்றி சொன்னபோது, ஏன் இங்கு வந்தீர்கள் என அவர் கடிந்து கொண்டதாகவும் ஷீதல் கூறியுள்ளார்.
தன்னிடம் போதிய அதிகாரமும் இல்லை, தனது துறைக்கு நிதியும் இல்லை என பேரவையிலேயே பேசினார் அமைச்சர் பிடிஆர். இதனால் அதிருப்தியில் உள்ள திமுக தலைமை, செந்தில் பாலாஜி வசம் உள்ள மின்சாரம், மதுவிலக்கு துறையை பிடிஆருக்கு கூடுதல் இலாகாவாக அளிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, <<16197163>>SC-ன்<<>> கிடுக்குப்பிடியால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகே சிங்கை, அந்நாடு ஒப்படைக்க மறுத்து வருகிறது. இன்று நடந்த கொடி கூட்டத்திற்கு சிங் வரவில்லை. தவறுதலாக எல்லை தாண்டி வந்ததாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை தங்களது பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவரை வைத்து இந்தியாவிடம் டீல் பேசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நிலவுவதால், பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 588 புள்ளிகளை இழந்தது. இன்று ஒரே நாளில் மட்டும், முதலீட்டாளர்கள் சுமார் ₹8 லட்சம் கோடி வரை இழந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை 22-ம் தேதி 1 கிராம் ரூ.9,290ஆகவும், 1 சவரன் ரூ.74,320ஆகவும் அதிகரித்து உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த 2 நாள்களில் ரூ.2,280 சரிவைக் கண்டது. USA டாலர் மீதான மதிப்பு அதிகரிக்கையில், அதன் மீது முதலீடு அதிகரித்து தங்கம் விலை சரியும். டாலர் மதிப்பு சரிகையில் தங்கம் மீது முதலீடு அதிகரித்து விலை அதிகரிக்கும். தற்பாேது டாலர் மதிப்பு உயர்வது உள்ளிட்டவையே தங்கம் விலை சரிவுக்கு காரணமாகும்.
பாக். செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது நல்ல முன்னெடுப்புதான் என்றாலும், தடுத்து வைக்கும் நீரை நாம் எங்கு சேமிக்கப் போகிறோம் என ஹைதராபாத் MP ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். தாக்குதல் நடந்த பைசரன் புல் வெளிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் ஏன் நிறுத்தப்படவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்தை அடைய பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மாலை 5.30 மணி வரை சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை வழங்கப்படுவது போல, 100 Mbps வேகத்தில் மாதம் ₹200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் அறிவித்துள்ளார். மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதனால், மக்களுக்கு எளிதாக இணைய சேவை கிடைப்பது மட்டுமல்லாமல், பணமும் மிச்சப்படுத்த முடியும்.
தனது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது, தன்னையும் தனது குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் இருவர் காப்பாற்றினர் என கேரளாவைச் சேர்ந்த ஆரத்தி சரத் கூறியுள்ளார். அயோத்தி படத்தில், இந்து மத குடும்பத்திற்கு இஸ்லாமியரான சசிகுமார் உதவுவது போன்று பஹல்காமிலும் நிகழ்ந்துள்ளது. மேலும், தந்தையின் சடலம் கிடைக்கும் வரையிலும் அவர்கள் ஆரத்தி உடனே இருந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.